Wednesday 24 May 2017

ஸ்ரீ லங்காவின் “கிங் மேக்கரின்” ஞானோபதேசம்



சந்திரிகா-மோடி உரையாடல் கற்பனை

முள்ளிவாய்க்கால் பேரழிவுக்குப் பின்னாலிருந்து ஸ்ரீ லங்காவின் “கிங் மேக்கராகக்கருதப்படும் சந்திரிகா குமாரதுங்க சமீபத்தில் இந்தியாவந்ததுவும், புத்தகயாவில் இந்தியப் பிரதமரும், சந்திரிகாவும் இணைந்து பௌத்த ஹிந்து ஒன்றிணைப்புக்கான ஒன்றுகூடலொன்றை நடத்தியதுவும் அனைவரும் அறிந்ததே. மேற்படி ஒன்றுகூடலின்போது சந்திரிகா குமாரதுங்க அவர்கள் வருமுன்காப்போம் எனும் அறிவுறுத்தலை உலகின் அனைத்துத் தலைவர்களுக்கும் பறைசாற்றினார். பல அறநெறிக் காவலர்களால் வலியுறித்திவரப்படும் இவ் அறிவுறுத்தலை, இன்று வைத்திய உலகமும் வலியுறுத்தி வருகிறது.

தெற்காசியாவெங்கணும் காணப்படும் பண்பாட்டுத் தேசியங்கள் மத வெறித்தன்மை(fantastic) பெற்றுவரும் இன்றைய சூளலில் சந்திரிகா அம்மையார் இவ் அறிவித்தலை இந்தியாவில் வைத்து வலியுறித்தியது எதற்காக? கௌதமரின் மண்ணில் அவர் ஞானாதோயம் பெற்றாரா? அல்லது இந்தியப் பிரதமர் மோடிக்கு ஞானோபதேசம் செய்கிறாரா? இவ்விருவருக்கும் இடையே நடந்த ஒரு மனந்திறந்த உரையாடலைக் கற்பனைசெய்துகொள்வோம்.                   அக்கற்பனை உரையாடலை படித்துப் பார்ப்போம்.

சந்திரிகா:- 
எனது அப்பா(S.W.R.D. பண்டாரநாயக்க) “சிங்ஹளம் மட்டும் அரச மொழி” எனும் சட்டத்தை கொண்டுவந்த போது, “இரு மொழியென்றால் இரு நாடு, ஒரு மொழியென்றால் இரு நாடு” எனும் நிலை தோன்றுமென இடதுசாரிகள் எச்சரித்தார்கள். அப்பாவின் தலைமையில் செயற்பட்ட எங்கள் கட்சியும் இவ் எச்சரிக்கையைக் கணக்கில் கொள்ளவில்லை. அதன் விளைவு,ஒரு நாடு ஒரு தேசம்என்ற நிலை உருவாவதற்கான வாய்ப்பை இழந்து, இன்று, “இரு நாடு இரு தேசம்” என்ற அரசியல் நெருக்கடியை எதிர்கொண்டுவருகிறோம். மனிதப் படுகொலைகள் உட்பட எவ்வளவு இன ஒழிப்புகளை நடத்தினாலும் “இரு நாடு இரு தேசம்” எனும் கோட்பாட்டின் வளர்ச்சியை இன்றுவரை எம்மால் தடுக்கமுடியாதுள்ளது.ஒரு நாடு இரு தேசம்எனும் கோட்பாட்டை ஏற்கவேண்டிவருமோ என அஞ்சி நடுங்கிவருகிறோம். தமிழீழ அச்சநோயால் (Thamileela phobia) நாம் உறக்கமின்றித் தவிக்கிறோம்.

உருது மொழிதான் அட்சிமொழியென வங்காளிகளிடம் சொல்லப்போய், பாக்கிஸ்தான்  தனது கிழக்குப் பகுதியை இழந்ததையும் நினைவில் கொள்ளுங்கள். ஒரு மொழியென்றால் இரு தேசம் எனும் கோட்பாடு பாக்கிஸ்தானில் நிஜமாகிவிட்டது. நாமும் பாக்கிஸ்தானும் விட்ட தவறுகளை நீங்களும் இழைத்துவிடாதீர்கள். ஹிந்தி மட்டும் அரசமொழி என்ற கோட்பாட்டைத்தான் சொல்கிறேன். வருமுன் காத்துக் கொள்ளுங்கள்!

மோடி:-


(எக்காளச்சிரிப்புடன், ஆணவக் குரலில்) உங்கள் தந்தை எதைச்செய்ய வேண்டுமோ அதைச் சரியாகவே செய்துள்ளார். அவரிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டியது நிறையவே உள்ளன. ஆனால், அதை வெளிப்படையாகச் செய்ததுவும், அவசரம் காட்டியதுவும், இந்தியாவுடன் கலந்தாலோசிக்காமல் செயற்பட்டதுவும் தான் அவர் விட்ட தவறுகளாகும். இதே தவறைத்தான் இந்தியாவால் தன்னை உடைக்க முடியுமென பாக்கிஸ்தான் நம்பவில்லை. இதுதான் பாக்கிஸ்தான் விட்ட தவறாகும். நாம் பாக்கிஸ்தானை உடைக்கக் காத்திருந்தோம். சந்தர்ப்பம் கிடைத்தது உடைத்து விட்டோம். நாம் அவ்விதம் நடந்து கொள்ளவில்லை யானல், தமிழீழம் எவ்விதம் ஸ்ரீ லங்காவின் அடிமைத்தேசமாக இருந்துவருகிறதோ, அதுபோல் வங்க மொழி பாக்கிஸ்தான் இன்னமும் உருதுமொழிப் பாக்கிஸ்தானின் அடிமைத் தேசமாகவே இருந்திருக்கும்.
எம்மை எடுத்துக்கொள்ளுங்கள், காந்தியார் காலத்தில் இருந்து இன்றுவரை, ஹிந்தி மொழியை ஆட்சி மொழியாகக் கொண்டுவருவதில் வாழைப்பழத்தில் ஊசி ஏற்றியதைப் போன்றே செயல்பட்டுவருகிறோம். இதில் கணிசமான வெற்றியும் பெற்றுள்ளோம், மிகவிரைவில் நீங்கள் பெற்றது போன்ற முழுமையான வெற்றியை அடைவோம்.

சந்திரிகா:- (ஏளனமாக) ம்ம்………….பறவாயில்லையே, இந்திமொழியை ஆட்சிமொழி யாக்குவதிலான உங்கள் தோல்வியை என்னிடமே மிகத் திறமையாக மறைக் கிறீர்களே. 59வருடங்களாகியும் இன்னமும் உங்களால் வெற்றிபெற முடியவில் லையே? உங்களால் இதில் வெற்றிபெற முடியாது. இதுதான் உண்மை.
மோடி:- ( ஆசனத்தில் இருந்து கோபத்துடன் முன்னோக்கி நகர்ந்து) பிறமொழிபேசும் மக்களின் தேசிய எழுச்சிகளை(ஏழனமாக) அடக்கும் தைரியமும், அதற்குரிய அரச பலமும் எம்மிடமில்லையென்று எண்ணுகிறீர்களா? காஷ்மீரிலும் பிற வடமாநிலங் களிலும் எங்கள் கைவண்ணத்தை உற்றுப்பாருங்கள் நாம் யாரென்ற உண்மை புரியும். அல்லது இலங்கை, பாக்கிஸ்தான், பர்மா, நேபாளம் ஆகிய நாடுகளின் தேசிய இனச்சிக்கல்களில் நாம் தலையிடுவதுபோல் எமது விடயத்தில் வேறுயாராவது தடையிடக்கூடுமென நாம் அஞ்சுவதாக எண்ணுகிறிர்களா? எமது வல்லரசுத் தனத்தின் வீரியத்தை இன்னும் நீங்கள் புரிந்து கொள்ளவில்லை, அதனால் தான் உங்கள் நாட்டுத் தலவர்கள் அனைவரும் தமிழீழ அச்சநோயால் (Thamileela phobia) நடுங்கிப்போய் நிற்கிறீர்கள். இந்தியாவின் தலைவரென்ற முறையில் என்னை நம்புங்கள், அச்சம் தவிருங்கள்.
சந்திரிகா:- 
இந்தியாவின் வல்லரசவீரியத்தை சந்தேகிக்கவில்லை. நீங்கள் வீரியமிக்க வர்கள்தான். உலக நாடுகளுடனான உறவைக் கையாள்வதில் சாம, தான, பேத, தண்ட முறைகளை பயன்படுத்தும் திறனும், அதற்குரிய வளங்களும் உங்களிடம் உண்டு. உங்கள் வல்லரசுத்தனம் வளர்நிலையிலேயே உள்ளது. இரு முனை உலகின் உருவாக்கத்தால் உங்கள் காட்டில் தற்போது மழைபெய்வதையும் நானறிவேன். தமிழீழ அச்சநோயில் (Thamileela phobia) இருந்து எம்மை உங்களால்தான் காக்கமுடியும் என்பதையும் நான் அறிவேன். ஆனால்……

மோடி: 
(இடையில் குறுக்கிட்டு) பாராட்டுங்கள், எம்மைச் சரியாகப் புரிந்துள்ளீர்கள். அப்புறம் எதற்க்கு ஆனால்?
சந்திரிகா:- உங்கள் வல்லரசுத்தனம் அந்நியச் சந்தையில், அதுவும் குறிப்பாக இந்தியாவின் அயல்நாடுகளின் சந்தையில் விலைபோகக் கூடியதொரு சரக்கேதவிர அது உள்நாட்டுச் சந்தைக்கேற்ற சரக்கல்ல. ஹிந்தியை அரசமொழி ஆக்குவதில் உங்கள் அரசு பலவீனமானது என்பதே உண்மையாகும். அது உங்களால் முடியாதொன்றாகும்.

மோடி:- என்ன இது இடதுசாரிகள் போல் பேசுகிறீர்கள்? ஓ…. நீங்கள் மெத்தப் படித்தவரல்லவா? உலகாளாவிய ஆய்வுநிறுவனமொன்றில் பொறுப்புள்ள ஆய்வாளராகவும் பணியாற்றிவரல்லவா? எமது நாட்டிலும் இவ்விதந்தான் அதிகம் படித்தவர்கள் அரசியலுக்கு வந்தால் உளறுவாயர்களாகவே உள்ளனர். இருக்கட்டும், “சமாதானத்திற்கான யுத்தம்என்ற பெயரில் இலங்கைத் தமிழர்களுக்கு எதிராக அதிக கொடுமைகளை செய்தவர் என்ற முறையில் நான் உங்களை மதிக்கிறேன்.  உங்கள் காரணத்தைச் சொல்லுங்கள்.

சந்திரிகா:- எம் போன்றவர்களுக்கு( தேசிய-இன(ethnic), மத, மொழி பேரகங்காரவாதிகள்) உதவிபுரியும் இந்தியா பெலவீனப்பட்டுவிடக் கூடாதே என்பதே எனது ஆதங்கமாகும். மற்றும்படி உங்களில் குற்றங்காண்பது எனது எண்ணமல்ல.

மோடி:- இந்திய இந்திய இடதுசாரிகளின் குதர்க்கங்களின் மீதான வெறுப்பில் சற்றுக் கடுமையான வார்த்தைகளைப் பேசிவிட்டேன். மன்னித்துக் கொள்ளுங்கள். உங்கள் கருத்தைக் கூறுங்கள்.

சந்திரிகா:- ஒரு அரசு, தனது ஆட்சிப் பரப்பில் வாழும் மக்களின் மத, மொழி, தேசிய, தேசிய-இன(ethnic) உரிமைகளை அடக்குவதில் வெற்றிபெறவேண்டு -மானால், அதற்கான முதல் நிபந்தனை, அது ஒரினத் “தேச-அரசாக (Mono ethnic Nation-state) இருக்க வேண்டும் என்பதேயாகும். தனிச் சிங்ஹள மசோதாவும், பௌத்த மதத்தை அரச மதம் ஆக்கியதுவும் பௌத்த-சிங்ஹள தேச-அரச உருவாக்குதைச் சாத்தியப் படுத்தியுள்ளது. பாக்கிஸ்தான், பங்காளதேஷ், பர்மா, ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளிலும் இந்நிபந்தனை நிறைவேற்றப்ப ட்டுள்ளது. ஆனால் இந்தியாவிலும் நேபாளத்திலும் இந்நிபந்தனை இன்னமும் நிறைவேற்றப்படவில்லை. இவ்விரு நாடுகளிலும் இருப்பது பல்-இனத் தேச-அரசேயாகும். Multi Ethnic Nation-State இந் நிலையில் ஹிந்தியை அரசமொழி ஆக்குவது என்பது சாத்தியமில்லாததாகும்.

மோடி;- ஒரினத் தேச-அரசாக (Mono ethnic Nation-state) இருப்பதற்கும், பல்-இனத் தேச-அரசாக இருப்பதற்கும் Multi Ethnic Nation-State இடையேயான வேறுபாடுகளை வறையறுத்துச் சொல்லுங்கள் பார்ப்போம்.

சந்திரிகா:- அரசினதும் அரசாங்கத்தினதும் கிட்டத்தட்ட அனைத்துப் பதவிகளும் பௌத்த-சிங்ஹளவர்களின் கைகளிலேயே உள்ளன. அவர்களின் தய்மொழியான சிங்ஹளமும். பௌத்த மதமும் அரச மொழியாகவும் அரச மதமாகவும் , இருக்கின்றன. இந்த நிலையை மாற்றுவதானால் ஒன்றில் ஸ்ரீ லங்கா அரசு இயந்திரத்தை பாரியளவிற்கு பலவீனப்படுத்தவேண்டும் அல்லது புதியதோர் அரசு இயந்திரம் (அரசாங்கம் அல்ல) ஏற்படவேண்டும். ரஜீவ்-ஜெயவர்த்தனா ஒப்பந்தம் அமூல்படுத்த முடியாதநிலையில் இருப்பதற்கான காரணம் இதுதான்.  இணக்கப்போக்கான எந்த ஒப்பந்தங்களும் சாத்தியமாகாது. இதை நீங்களும் நன்கு புரிந்து கொண்டுள்ளீர்கள்.
ஆனால் உங்கள் நிலை அவ்விதமானதல்ல. இந்திய பல்லின-தேச அரசு(Nation-state) பல் வேறுபட்ட மொழிவளி இனப்பிரிவைச் சார்ந்தவர்களால் ( different varieties of linguistic ethnic people) ஆக்கப்பட்டதாகும். இதனால் ஒரு மொழியைமாத்திரம் ஆட்சிமொழி யாக்கும் முயற்சியில் உங்களால் வெற்றிபெற முடியாது. 

மோடி:- ஹிந்தி இந்தியா மட்டுமல்ல, ஹிந்து இந்தியாவும் எமது குறிக்கோள் என்பதை அறிந்துமா, இவ்விதம் கூருகிறீர்கள்.

சந்திரிகா:- ஆம், உங்கள் நாட்டுச் சூள்நிலையில் ஹிந்து இந்தியா எக்காரணத்தைக் கொண்டும்  ஒரு ஒரினத் தேச-அரசாக (Mono ethnic Nation-state) இருக்கமுடியாது. ஏனெனில் ஹிந்தி இனம் தவிர்ந்த இந்தியாவின் பிற மொழிவழி இனங்கள் (ligustic based ethnic groups) அனைத்தையும் தள்ளிவைத்தால் தேச அரசில் வெடிப்புகள் ஏற்படும், இந்த வெடிப்புகள் இராணுவத்துள்ளும் பரவும்.  புலிகளுடனான யுத்தத்தில் நாம் வெற்றிபெற்ற பின்னர், எமது இராணுவத்தில்கூட கரவாஸ், கொவிகம எனும் சாதிய மோதல் மேலெழவில்லையா? இம் மோதல் வெடிக்கும் முன்பாகவே அதைச் சுமூகமாகத் தீர்த்துவைத்த நீங்கள் இதை மறக்கலாமா? இவ்வித வெடிப்புத் தோன்றினால் அரசின் கைகளில் இருக்கும் ஆயுதங்களைப் பயன்படுத்த ஆளில்லா நிலைகூட உருவாகலாம். இந்த ஆபத்தை விலைகொடுத்து வாங்கப் போகிறீர்களா? வருமுன் காத்துக்கொள்ளுங்கள்.

மோடி:- உங்கள் பார்வையில் ஒரு அர்த்தம் இருக்கிறதுபோலவே தெரிகிறது, ஆனால், இந்திய சமுகத்தின் இந்தியத்தன்மையைக் கட்டிக்காப்பதில் சாதியத்திற்கு ஒரு பெரும்பங்குண்டு. அச் சாதியம் இந்திய பல்லின தேச-அரசைப் பாதுகாக்கும், ஆகவே இவ்வித ஒரு அச்சம் எமக்கு அவசியமில்லை.

சந்திரிகா:- உண்மைதான், இந்தியாவில் சாதியம் இன்னமும் ஒரு பலமுள்ள சமூக சக்தியாக விளங்குகிறது என்பதுண்மைதான். ஆனால், தேசியம், இனவியம், பெண் ணியம், நுகர்வியம் ஆகியனவற்றின் அசூர வளர்ச்சியின் முன்னால் சாதியத்தின் வீச்சு அல்லது ஆளுமை பலவீனப்பட்டு வருகிறது என்றே தோன்றுகிறது. ஆகவே சாதியம் மொழித்திணிப்புக்குத் துணைக்குவருமெனநம்பி ஹிந்தித் திணிப்பில் இறங்குவது நல்லதாகத் தெரியவில்லை.

மோடி:- நன்றி, நன்றி. சாதியத்தினதும் இந்துப் பண்பாட்டினதும் சக்தி என்னவென்பது எமக்குத்தெரியும். அன்றாட விவகாரம் பற்றிய உரையாடல்களுக்குச் செல்வோம்.

எழுதியது—15/09/2015 எனதுமுகநூலில் பதிவிட்டது 17/09/2015 

Wednesday 17 May 2017

தாய் மொழி-தேசிய மொழி-சந்தைக்கான மொழி பரஸ்பர உறவுகள்
உலகளாவிய முறையில் ஒருங்கமைக்கப்பட்டுவரும்  இந்தியச் சந்தையில் மொழிக்கு இருக்கும் தகமையும், “சுதந்திரமும்” வேறு, தேசியப் பண்பாட்டை உருவாக்கு வதிலும், தேசத்தின் செயல்பாட்டை உறுதிப்படுத்து வதிலும் மொழிக்கு இருக்கும் தகமையும், “சுதந்திரமும்” வேறு.
இந்தியச் சந்தையும் மொழியும்:
சந்தையென்பது எதைக் குறிக்கிறது? பண்ட உற்பத்தியா ளர்கள் நுகர்வோருடனும், சேவை வழங்குவோர், கலைப்படைப்பாளர்கள், ஆகியோர் தமது உற்பத்திகளை தேவைப்படுவோருடனும், பணமுடையோர் தமது பணத்தை தேவைப்படுவோருடனும், மூளை உழைப்பா ளர்கள், உடல் உழைப்பாளர்கள் ஆகியோர் தமுது உழைப்பை தேவப்படுவோருடனும் பணத்துக்காக கொடுத்து வாங்கும் ஒரு பொதுவெளியே சந்தை எனப்படும். இவ்விதம் நோக்கின் சமூகமே ஒரு சந்தைதான். இச் சந்தையின் செயற்பாட்டை சுமூக- மாக்குவதற்கான ஒரு கருவியே மொழியாகும். எந்தச் சந்தைகளிலானாலும் சரி, அந்தச் சந்தையில் மொழி ஒரு கருவி மாத்திரமே. தொழில் தேடவும், தொழில் முயற்சிகளை வளர்க்கவும், வாணிபத்தை மேற்கொள்ள- வும் பயன்படுத்தப்படும் ஒரு கருவியாகும். சந்தையின் சுதந்திரம் என்பது நுகர்வோர் தமக்குத் தேவையான சரக்கை தாம் வாங்கிக்கொள்ளவும், உற்பத்தியாளர்கள் தமது சரக்குகளை விற்றுக்கொள்ளவுமான சுதந்திரமா- கும். உழைப்பும் வாங்கவும் விற்கவுமானதொரு சரக்கேயாகும்.
இச் சந்தையிலான தனது செயற்பாட்டை சுமூகமாக்கிக் கொள்வதற்காக அவர் எந்த மொழியையும், எத்தனை மொழியையும் பயன்படுத்திக் கொள்ளலாம்; எந்த மொழியையும் கைவிடலாம். அவர் கைவிட விரும்புவது அவரது “தாய் மொழியாகக்’ கூட இருக்கலாம். அது அவரின் சொந்தவிருப்பம். எவ்வெவ் மொழிகளின் அறிவை எந்தெந்தளவு தூரத்திற்கு வளர்த்துக் கொள்ளலாம் என்பதுவும் அவரின் உரிமை. சந்தைச் சுதந்திரத்தை ஏற்றுக்கொள்ளும் எவரும் தனி மனித மொழி சுதந்திரத்தையும் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.
இந்தக் கோணத்தில் இருந்து நோக்கினால், சினிமாவுக்கு தமிழ்ப் பெயர் வைக்கக் கேட்டுக்கொண்டதுவும், தனியார் பாடசாலைகளில் தமிழைக் கட்டாய பாடமாக்கக் கோருவதும் தமிழர்கள் மீதான தமிழ்த் திணிப்புத்தானே? ஆங்கிலத்தை தனது சந்தை மொழியாக சுய விருப்ப- முடன் தேர்ந்தெடுத்துவிட்ட தமிழனை ‘தமிழா நீ பேசுவது தமிழா?’ எனக் கிண்டல் செய்வதுவும் தமிழர்கள் மீதான தமிழ்த் திணிப்புத்தானே? மொழியை ஒரு கருவியாகக் கருதினால், தனது சந்தைத் தேவைகளுக்காக தாய் மொழியைக் கூட புறந்தள்ளி- வைக்கும் உரிமை எவருக்கும் உண்டென்பதை ஏற்றுக்கொண்டால் தாய் மொழியேயானாலும் கூட அதைக் கட்டாயப்படுத்த முடியாது. எந்தெந்த மொழியை எவ்வெவ் இடத்தில் பயன்படுத்திக் கொள்வதென்பதைத் தீர்மானிப்பது அவரவரின் சொந்த உரிமை. தமிழ் நாட்டவரில் அநேகர் தமது சந்தைப்பொது மொழியாக தமிழுடன் கூடவே ஆங்கிலத்தையும் தேர்ந்தெடுத்து- ள்ளார்கள் என்பதை யாரும் மறுக்கமுடியுமா? தமிழ்நாட்டின் நுட்பமான சந்தைகள் ஆங்கிலத்தை நோக்கியே நகர்கின்றன என்பதையும் மறுக்கமுடியுமா?   அவசியமேற்பட்டால் நாளை ஹிந்தியையும் தேர்ந்தெடுத்துக் கொள்வார்கள். அதற்கென்ன இப்போ?

ஒரு நாட்டின் சந்தையில் முழுமையான, நிபந்தனை- களற்ற தனிமனித மொழிச் சுதந்திரம் இருந்தால்தான் அந்நாடு பொருளாதார ரீதியில் வளர்ச்சிபெறும். அதுவும் பன்மொழிப் பயன்பாடுள்ள நாட்டில் பன்மொழித்திறமை அவசியம்.
தேசியப் பண்பாடும் மொழியும்:

அதே நேரத்தில், தேசிய பண்பாட்டை உருவாக்குவதிலோ தனிநபர் மொழிச் சுதந்திரம் நிபந்தனைக்கு உட்பட்டது. தனி நபர் பூரண சுதந்திரம் என்றொன்று அங்கு இல்லை. இருக்கவும் கூடாது. ஏனெனில், தேசியப் பண்பாடும் தேசியமொழியும் ஒன்றிலிருந்தொன்றைப் பிரிக்க முடியாத தேசியப் படைப்புகளாகும். தேசியப் பண்பாட்டின் வளர்ச்சிக்கு மிக அதிகமாகத் துணைபோகும் மொழி எதுவோ அதுதான அத்தேசப் பிரஜைகளின் தேசியமொழியாகும். அத் தேசிய மொழியில் அத்தேசப் பிரஜைகள்  சரளமாகப் பயிற்ச்சி பெற்றிருப்பது அவசியமானதும் கட்டாயமானதுமாகும். அத் தேசத்தால் தேர்ந்தெடுக்கப்படும் அத்தேசியமொழி அத்தேசத்தின் பெரும்பான்மையான மக்களின் மரபுவழிவந்ததாகவும்(தாய்மொழி) இருக்கலாம், மரபொழிந்த நிலையில் இருந்து மீட்கப்பட்ட மரபுமொழி- யாகவும் இருக்கலாம், புதிதாக உருவாக்கப்பட்டதாகவும் இருக்கலாம், புகுந்த அல்லது புகுத்தப்பட்ட மொழியாகவும் இருக்கலாம், பிற மொழித் தழுவ- லாகவும் இருக்கலாம், ஒன்றுக்கு மேற்பட்ட மொழிகளாகவும் இருக்கலாம். இவற்றில் எது அல்லது எவை தேசியமொழி/தேசியமொழிகள்  என்பதை அத்தேசமே தீர்மானித்துக் கொள்ளவேண்டும்; மாறாமர- பியல் வாதிகளும் (அடிப்படைவாதிகள்-மொழி தூய்மை- வாதிகள்) தீர்மானிக்கக் கூடாது; அதிகாரம் செலுத்தும் அந்நியரும் தீமானிக்கக் கூடாது. ஜனநாயக வழிமுறையில் அத் தேசத்தின் மக்களே அதைத் தீர்மானித்துக் கொள்ளவேண்டும்.
தேசிய சந்தையில் மொழியெனும் கருவுக்குரிய முழுமையான தனிநபர் சுதந்திரம், தேசியப் பண்பாட்டரங்கினில் மொழிக்கு இல்லை; இருக்கவும் கூடாது. ஏனெனில் தேசப் பண்பாட்டரங்கில் மொழியானது, பண்பாட்டின் வங்கியாகவும், வளர் நிலமாகவும்(விளைநிலமல்ல-பண்பாட்டின் விளைநிலம் மக்களே) செயல்படுகிறது. அது மடுமல்ல, தேசிய மொழி தன்மட்டில் தானே ஒரு பண்பாடாகவும் செயல்படுகிறது. தமிழ் மொழிக்கு அத்தன்மை உள்ளதை உற்றுநோக்கில் புரிந்து கொள்ளலாம்.
தேசிய மொழி, தேசிய சந்தை, தேசியப் பண்பாடு, தேச அரசு இவைநான்கும் இருந்தால்தான் ஒரு நாடு தேசம் என்ற நிலையை அடையும்.
இந்தியாவை ஒரு முழுமையான, ஏகமான தேசமாக ஏற்றுக்கொள்பவர்கள் அத்தேசத்திற்கான தேசியமொழி- யை அல்லது மொழிகளை உருவாக்குவது அவசியமே. அவ்விதம் இருந்தால்தான் ஒரு தேசம் வாழும். இல்லையேல் தேசம் இறந்துவிடும். அல்லது ஊனமுற்ற தேசமாகிவிடும். இந்தியாவை ஒருஏகமான தேசமாக ஏற்றுக்கொள்பவர்களில் ஒருசாரார், சதுர்-வர்ணத்தையும், பார்ப்பனியத்தையுந்தான் இந்தியாவின் தேசியப் பண்பாடாக ஏற்றுக் கொள்கிறார்கள். சமஸ்கிருதமும் ஹிந்தியுமே இப் பண்பாட்டிற்க்கு பொருத்தமான மொழி எனக் கருதுகிறார்கள். அதனால் சமஸ்கிருதத்தையும் ஹிந்தியையும் திணிக்கும் முயற்சியில் ஈடுபடுகிறார்கள். பௌத்தத்தை இந்திய தேசியப் பண்பாடாக ஏற்றுக் கொள்பவர்கள் பாளி மொழியைத் திணிக்கலாம், இஸ்லாமியப் பண்பாட்டைத்தான் இந்தியத் தேசியப் பண்பாடாக ஏற்றுக்கொள்பவர்கள் உருது மொழியைத் திணிக்கலாம், ஐரோப்பிய நாகரிகத்தைத்தான் தமது பண்பாடாகக் கொள்பவர்கள் ஆங்கில மொழியைத் திணிக்கலாம். இத்திணிப்புகள் எதுவுமே தவறில்லை. அவரவர்கள் தத்தமது தேசத்துக்கென ஒரு தேசிய மொழியை உருவாக்கிக் கொள்கிறார்கள். அவ்வளவே.

தவறு எதுவென்றால், ஏகத் தன்மை பெற்ற இந்தியத் தேசியப் பண்பாடு என்றொன்று உள்ளதெனக் கருதுவதுதான் பாரிய தவறு. அவ்விதமொன்று இன்றுவரை உருவாகிவரவுமில்லை உருவாக்கப்படவு- மில்லை. ‘தேச அரசொன்றேஇல்லாத போது, தேசியப் பண்பாடொன்று எவ்விதம் தோன்றும்? பார்ப்பனிய சமஸ்கிரத இந்தியா பாளியிடம் தோற்றது.  பௌத்த இந்தியா உருதுவிடம் தோற்றது, மொகலாய இந்தியா ஆங்கிலத்திடம் தோற்றது, திராவிடநாடு எனக்கூறி சமஸ்கிருதத்துடன் போராடிய திராவிட மொழிகளில் பல சமஸ்கிருத்திடம் அடிபணிந்தன அல்லது அதனுடன் சங்கமித்தன. ஏற்கனவே தோல்விகண்ட சமஸ்கிருதம், ஹிந்தி மொழியுடன் ஒரு கூட்டமைத்துக் கொண்டு, இப்போது மீண்டும் ஏகத் தன்மைபெற்ற இந்தியத் தேசியப் பண்பாட்டை உருவாக்கக் களம் இறங்கியுள்ளது.

இச் சூழலில், மொழித்திணிப்புக்கு எதிரான போராட்டம் மட்டும் நடத்திப் பலனில்லை. ஏகத் தன்மையற்ற தேசியப் பண்பாடு தோன்றும் வரை இம்முயற்ச்சியில் எந்த மாநிலமும் வெற்றிகாணப்போவதில்லை. ஆகவே இந்தித் திணிப்பைத் தடுத்துநிறுத்த வேண்டுமானால், ஏகத் தன்மைபெற்ற இந்தியத் தேசியத்துக்குப் பதிலாக பல்முகத்தன்மையும், பல்படித்தன்மையும் பெற்ற, அனைத்து மாநிலங்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட இந்தியப் பண்பாட்டைத் தோற்றுவிப்பதைத் தம்முடைய பிரதான போராட்டமாகக் கொள்ளவேண்டும். இது மேலிருந்து ஏற்படுத்தப்படும் மாற்றமாகும். இந்திய பாராளுமன்ற இடதுசாரிக் கட்சிகள் 1946இல் இருந்து இதைத்தான் செய்துவருகிறார்கள்.
மேலிருந்து எடுக்கப்படும் மாற்றம் சாத்தியமில்லை என்று கருதுபவர்கள்
இந்திய நாட்டை பல ‘தனித்துவத் தேசியப் பண்பாட்டு முழுமைகளின் ஒன்றியமாக மாற்ற முற்படவேண்டும். அதற்காகப் போராடவேண்டும். தத்தமது மாநிலங்களுக்கான தேசியப் பண்பாடு, தேசிய மொழி, தேசிய சந்தை ஆகியவற்றிற்காகப் போராடவேண்டும். இது இவர்களின் முதலாவது போராட்ட முனையாகும். இரண்டாவது முனை இம் முழுமைகளை சுயவ்ருப்புடனான ஒன்றியமாக உருவாக்கப் போராடுவது. இது கீழிருந்து ஏற்படுத்தப்படும் மாற்றமாகும். மூல திராவிட இயக்கங்களும், திரிபுவாத(புரட்டல்வாத) திராவிடர் இயக்கங்களும் (தி.மு.க; அ.தி.மு.க; ம.தி.மு.க) இப் பாதையே பின்பற்றிவருகிறார்கள்.
பல்முகத்தன்மையும், பல்படித்தன்மையும் பெற்ற இந்தியப் பண்பாட்டைத் தோற்றுவிப்பது அல்லது பல ‘தனித்துவத் தேசியப் பண்பாட்டு முழுமைகளின் ஒன்றியமாக இந்தியாவை மாற்றுவது ஆகிய இவை இரண்டுமே சாத்தியமில்லையானால், இலங்கையைப் போல் இந்தியாவும் உள்நாட்டு யுத்தகளமாக மாறி அல்லலுறப்போவது தவிர்க்க முடியாதது. இதனால் இந்திய மேட்டுக்குடிகளும் பாதிக்கப்படுவார்கள், இந்திய உழைக்கும் மக்களும் பாதிக்கப்படுவார்கள்.
இரு மொழியானால் ஒரு நாடுஎன்பதைக் கணக்கில் கொள்ளாமல், ஒரு மொழியாகியதால் இரு நாடுகள் எனும் நிலைக்கு உள்ளாகியிருக்கும் இலங்கையின் சோகக்கதை இந்தியாவுக்கு வேண்டாம். அனைத்து மாநில மொழிகளையும் தேசிய மொழிகளாகக் கொண்ட இந்தியாவை நோக்கிப் பயணிப்போம்.


In Defense of Communism: KKE statement on the developments in Afghanistan

In Defense of Communism: KKE statement on the developments in Afghanistan : Concerning the developments in Afghanistan and the resurgence o...