Showing posts with label Nation State. Show all posts
Showing posts with label Nation State. Show all posts

Saturday, 3 November 2018

பிரியத்தான் வேண்டுமா?


எல்லாமே ஒற்றை ஆட்சியின் மறுவடிவங்கள் தான் !
பகிரப்பட்ட இறையாண்மை என்று ஓன்று இல்லை ,
உள்ளக சுயநிர்ணய உரிமை என்று ஓன்று இல்லை , என்பதனை தெளிவு படுத்த கூடிய புதிய வெகுஜன அமைப்புகள் தேவை !
தெளிவு படுத்த கூடிய புதிய வெகுஜன அமைப்புகளின் தடையாக குமரவடிவேல் குருபரன் , S A ஜோதி, திரு நாய்க்கரசு , நிலாந்தன் , ஜதீந்திரா , கருணாகரன் ..... போன்ற கருத்துருவாக்கிகளை களத்தில் பண பலத்துடன் கருத்தியல் தளத்தில் இறக்கியுள்ளது !!  எனும் முகநூல் பதிவிற்கான பின்னூட்டல்
  ----------------------------------------------------------------------------------    

        முகநூலை ஒரு புதிய கருத்துருவாக்கத்திற்காக, அல்லது ஒரு கருத்து நிராகரிப்பிற்காக, அல்லது நிலவும் கருத்தை வளர்த்தெடுப்பதற்காக பயன்படுத்தல் என்பது மிக மிக அரிதாக உள்ளது. இப் பரிதாப நிலையில், ஒரு கருத்து நிராகரிப்புக்கான வாதத்தை தொடக்கியிருக்கும் உங்களுக்கு எனது வாழ்த்துக்கள்.
 “உள்ளக சுயநிர்ணய உரிமை என்று ஓன்று இல்லை , என்பதனை தெளிவு படுத்த கூடிய புதிய வெகுஜன அமைப்புகள் தேவை !  என எதற்காகக் கூறுகிறீர்கள். ஒரு கருத்து முதலில் கருத்துமட்டத்தில்(hypothesis) முன்வைக்கப்படவேண்டும். ஆனால், அது நடைமுறை மட்டத்தில்தான் சரியா, தவறா என்பது நிரூபணமாகும். ஆகவே, நடைமுறையில் அது சரியா தப்பா என்பதை நிரூபிப்பது வெகுஜன அமைப்புகள்தான்.
முதலாளித்துவம் தோன்றிய காலத்தில் இன்றைய காலம் வரை ஆயிரத்துக்கு மேற்பட்ட “தேசிய”, “நாட்டுப்பற்றிய”, “தேசிய இனவிய” [ “National”, Patriotic” and “Ethno”] வெகுஜன இயக்கங்கள் தோன்றியுள்ளன; சில வெற்றி பெற்றுள்ளன, பல இன்னமும் தொடர்கின்றன, சில அழித்துபோய்விட்டன, சில மற்றொன்றாக உருமாறியுள்ளன. கருத்தாளர்கள் (theorizers) இவற்றில் இருந்துதானே தமது கருத்துருவாக்கத்தை ஆரம்பிக்கவேண்டும்?
எல்லாமே ஒற்றை ஆட்சியின் மறுவடிவங்கள் தான் !என்பதில் உள்ள எல்லாமே என்பது எவை? அரசுகளின் “தேசிய”, “நாட்டுப்பற்றிய”, “தேசிய இனவிய” [ “National”, Patriotic” and “Ethno”] தன்மைகளை கணக்கில் கொள்ளவில்லையா? அரசுகளின் வர்க்க சுபாவத்தை கணக்கில் கொள்ளவில்லையை? உலகளாவிய நோக்கில் நீங்களே இதற்கான பதிலைக் கூறுங்கள்.
தெற்காசிய நோக்கிலான எனது நிலைப்பாட்டை நான் கூறுகிறேன்.  பகிர்வைப் பார்க்கவும்
எல்லாமே ஒற்றை ஆட்சியின் மறுவடிவங்கள் தான் ! எனும் உங்கள் கூற்று நேபாளம் தவிர தெற்காசியாவின் அனைத்து அரசுகளுக்கும் பொருத்தமானதே. இவ் அனைத்து அரசுகளும் தேசிய இனங்கள் உட்பட அனைத்துவகை சமூக மக்கள் குளுமங்களினதும் சிறைக்கூடுகளே. பகிரப்பட்ட இறையாண்மை என்றொன்று இங்கில்லை. இதனால் தேச அரசென்றொன்று இங்கில்லை. இருக்கும் அரசுகள் அனைத்தும் நாட்டரசுகளேயாகும். [ _________- எனும் கட்டுரையைப் பார்க்கவும்.] ஆதாவது நீங்கள் கூறியுள்ளதைப்போல் “பகிரப்பட்ட இறையாண்மை என்று ஓன்று இல்லை ,உள்ளக சுயநிர்ணய உரிமை என்று ஓன்று இல்லை என்பதே எனது கருத்துமாகும்.

ஆனால், இரு கருத்துக்களுடன் முரண்படுகிறேன்.

முதலாவது:- புதிய வெகுஜன அமைப்பு கட்டாயம் என்பதல்ல. 12 நாடுகளைக் கொண்ட தெற்காசிய 22 ற்கு மேற்பட்ட தேசங்களைக் கொண்ட பிராந்தியமாக மாறுவதற்கான சாத்தியப்பாடுகள் நிதர்சனமாகிவிட்டன. இவ்விருபத்தி இரண்டு எதிர்காலத் தேசஙகளிலும். சுமார் 35 க்கு மேற்பட்ட பகிரங்கமான வெகுஜன அமைப்புகள் உண்டு. ஆகவே தேசிய இனவாத அடக்குமுறைக்கு எதிரான புதிய வெகுஜன அமைப்புகள் தேவை என்பது தவறு.
இரண்டாவது: இவ் 22  தேசங்களும், சிலவேளைகளில் அதற்கு மேற்ப்பட்ட தேசங்களும் தனித்தேசங்களாக மலர்ந்துதான் ஆகவேண்டும் எனும் கருத்துடன் நான் சிறிதளவும் உடன்படவில்லை. ஒரு தேசிய இனவாதக் குழுமத்தின் தன்மையையும், அதன் வளர் நிலையையும் தீர்மானிக்கும் காரணிகள் இவையாகும்:-
1)    உள்ளும், புறமும் நடக்கும் வ்ர்க்கப்போராட்டங்கள்.
2)    பேரகங்காரவாத அரசுகளுக்கு ஏற்படும் அரசிய, இராணுவ, பொருளாதார இழப்புகள்.
3)    பல் முனைமைய உலகை அமைப்பதற்கான போராட்டத்தில் தெற்காசியப் பிராந்தியம் பெறப்போகுக் வெற்றிதோல்விகள்.
4)    தெற்காசியப் பிராந்திய நிலப்பிரபுத்துவ மூத்தண்ணன் நிலைப்பாட்டிற்கு எதிரான போராட்டத்தில் இந்தியா பெறப்போகும் வெற்றி தோல்விகள்.
இவ் நான்கு மாறிலிக் காரணங்களுந்தான் தெற்காசியாவில் எத்தனை தேசங்கள் அமையப்போகின்றன என்பதைத் தீர்மானிக்கும் காரணிகளாகும்.




Friday, 18 August 2017

தீண்டாமை ஒழியாமல், மலராது தமிழீழம்.

தீண்டாமை ஒழியாமல், மலராது தமிழீழம்.

“பஞ்சமர்” ரென அடையாளப்படுத்தப்படும் அடிமை சாதிப் பிரிவினருக்கும் தமிழீழ தேசிய விடுதலைக்கும் இடையேயான உறவு பட்டும் படாததொன்றாக,பஞ்சமர்களைத்தூர நின்று வேடிக்கைபார்க்குமொரு பிரிவினராக வைத்திருப்பதை  எவராலும் மறுக்கமுடியுமா? சில ‘பஞ்சமஇளையோர் இயக்கங்களில் இணைந்தாலும், பஞ்சமர் ஒதுங்கியே இருந்தனர். இந்நிலைமை மாறவேண்டும்.
அறிமுகம்
1968களில் சங்கானை-நிச்சாமம் கிராமத்தில் நடந்த தீண்டாமை ஒழிப்புப் போராட்டத்தின் வீச்சினைக்கண்டு அச்சமுற்று, “யாழ்ப்பாணம் வியட்நாமாக மாறப்போகிறது, காப்பாற்றுங்கள்! காப்பாற்றுங்கள்!! யாழ்ப்பாணத்தைக் காப்பாற்றுங்கள்!!! என சிங்கள- பௌத்த பேரகங்காரவாதத் தலைவர்களிடம் குய்யோ முறையோ என முறையிட்ட தமிழ் பேச்சுப்புலித் தலைவரின் காலத்திலிருந்து, ‘சோஷலிஸத் தமிழீழம்’ என முழக்கமிட்ட துப்பாக்கிப் புலித்தலைவர் காலம்வரை தமிழீழத்தில் தீண்டாமை ஒழிக்கப்படாமல் தொடர்வதை மறுக்கமுடியுமா?
சபையோர் அனைவருக்கும் வணக்கம்! உங்கள் கவனத்துக்கு எனது கருத்துக்களை முன்வைக்க அனுமதி வழங்கிய திரு.வரதகுமார் அவர்கட்கு எனது நன்றிகள்.

சபையோர்கள் அனைவருமே, இலங்கைத்தீவில் சிங்கள-பௌத்த பேரகங்காரவாதத்தின் அரசியல் மேலாண்மை அற்றுப்போகவேண்டுமென்பதில் ஆர்வம் உள்ளவர்களாகவே இருப்பீர்களென்பது சந்தேகத்திற்கு இடமற்றது. இதில் கணிசமானோர் தமிழீழக் கோட்பாட்டாளர்களாகவும், மீதமானவர்களில் ஒருசாரார், கடந்தகால பல்வேறு கசப்பான அனுபவங்களால் மனம்நொந்து அல்லது குழப்பமுற்று, தமிழீழம் சாத்தியமாவென சந்தேகம் கொண்டவர் களாகவும், மற்றோர் பிரிவினர் தமது வர்க்கநிலை மாற்றத்தால் தமது முந்தைய முடிவுகளை மீளாய்வுசெய்யும் நிலையில் உள்ளவர்களாகவும் இருக்கக்கூடும். தமிழீழக் கோட்பாட்டாளர்கள் அனைவரும் தெளிவாக இருக்கிறார்கள் எனக் கூறுவதற்கில்லை. இதனால் வெவ்வேறுபட்ட (diversified) கருத்தோட்டங்களின் ஒன்றுகூடலாகவே இவ் அவை அமைந்துள்ளது எனக் கருதுகிறேன்.

இந்நிலைமை புரிந்துகொள்ளப்படக் கூடியதே. நிகழ்கால, கடந்தகால நடப்புகள் இதற்கான காரணங்களாக அமைகின்றன. கடந்த கால நடப்புகளின் தவறுகளே இங்கு பிரதானமானதாக விளங்குகிறது. திறந்துவிடப்பட்ட மின்மினிப் பூச்சிகளின் மினுமினுப்புகள்கூட மதியநேர சூரியஒளிபோல் எமது கண்களைக் கூசவைத்து, எமது பார்வைத்திறனை கேள்விக்குள்ளாக்கிவருகிறது. பிரச்சனை மின்மினிப் பூச்சிகளின் ஒளிரும்திறனில் இல்லை, எமது கண்களின் ஒளிஉறிஞ்சு திறனில் -தான் உள்ளது. கடந்தகாலத் தவறுகள் எமது கண்களைக் கெடுத்துள்ளன. இத் தவறுகளில் இருந்து பாடங்கற்று எமது கண்களைச் சரிப்படுத்திக் கொள்வோம். சத்திர சிகிச்சைதான் அவசியமானால், அதற்குத் தயாராகிக்கொள்வோம். எமது கண்களுக்கல்ல, எமது கருத்துக் கட்டுமானத்துக்கு.

சாதிய சமத்துவத்தை ஏற்படுத்துவதில் நாம் இழைத்த தவறுகளும் இவற்றுள் ஒன்றாகும். அத்தவறுகளைப்பற்றிய ஆய்வை செழுமைப்படுத்துவதே இவ்வுரையின் குறிக்கோளாகும்.

1968களில் சங்கானை-நிச்சாமம் கிராமத்தில் நடந்த தீண்டாமை ஒழிப்புப் போராட்டத்தின் வீச்சினைக்கண்டு அச்சமுற்று, “யாழ்ப்பாணம் வியட்நாமாக மாறப்போகிறது, காப்பாற்றுங்கள்! காப்பாற்றுங்கள்!! யாழ்ப்பாணத்தைக் காப்பாற்றுங்கள்!!! என சிங்கள- பௌத்த பேரகங்காரவாதத் தலைவர்களிடம் குய்யோ முறையோ என முறையிட்ட தமிழ் பேச்சுப்புலித் தலைவரின் காலத்திலிருந்து, ‘சோஷலிஸத் தமிழீழம்’ என முழக்கமிட்ட துப்பாக்கிப் புலித்தலைவர் காலம்வரை தமிழீழத்தில் தீண்டாமை ஒழிக்கப்படாமல் தொடர்வதை மறுக்கமுடியுமா?

1966இல் இருந்து 1969வரையான காலப்பகுதியில் தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கத்தின் தலைமையிலான தீண்டாமை ஒழிப்பு போராட்டங்கள் நடைபெறா -திருந்திருந்தால், மாவிட்டபுரம் கந்தசாமி கோவில், பன்றித்தலைச்சி அம்மன் கோவில் போன்ற கோவில்கள் இன்னமும் பூட்டியே இருந்திருக்குமோ என்னமோ, யார் கண்டது. இதனால் “பஞ்சமர்” என அடையாளப்படுத்தப்படும் அடிமை சாதிப் பிரிவினருக்கும் தமிழீழ தேசிய விடுதலைக்கும் இடையேயான உறவு பட்டும் படாததொன்றாக, பஞ்சமர்களைத்தூர நின்று வேடிக்கைபார்க்குமொரு பிரிவின -ராக வைத்திருப்பதை  எவராலும் மறுக்கமுடியுமா? சில ‘பஞ்சமஇளையோர் இயக்கங்களில் இணைந்தாலும், பஞ்சமர் ஒதுங்கியே இருந்தனர். இந்நிலைமை மாறவேண்டும்.

சாதிய சமத்துவத்தின் தேவையை விடுதலை அமைப்புகள் நிராகரித்தன என்று கூறமுடியாது. இதன் அவசியத்தை பல விடுதலை அமைப்புகள் புரிந்துகொண்டி -ருந்தன. ஓரிரு அமைப்புகள் புரிந்து கொண்டதாகப் பாசாங்கு செய்தன. பாசாங்கிற்கான வெளிப்படையான அமைப்பாக தமிழர் விடுதலைக் கூட்டணியை, எடுத்துக் கொள்ளலாம். ஆனால் பல அமைப்புகள் உண்மையாகவே புரிந்து -கொண்டிருந்தன. இருந்தும் அப்புரிதலை நடைமுறைப்படுத்துவதில் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய, நிலைத்து நிற்கக்கூடிய வரலாற்றுப் பதிவுகளெதுவும் நடைபெறவில்லை. இதற்கான காரணம், அமைப்புகளினதோ, அல்லது தலைவர்களினதோ சாதிய சார்புநிலைதான் எனக் குற்றஞ்சாட்டமுடியாது. தமது சாதிய சார்புநிலையைத் தூக்கியெறிய அல்லது குறைந்த பட்சம் தமது அமைப்பினுள்ளும், சமூகத்திலும் அதைக் கிடப்பில்போட்டுவைக்க பல அமைப்பு -களும் தலைவர்களும் தயாராகவே இருந்தனர், பல்வேறு சந்தர்ப்பங்களில் அதைச் செய்தும் காட்டினர். ஆகவே அவர்கள்மீதும், அமைப்புகளின் மீதும் “சாதிமான்கள்” “சாதிவெறியர்கள்எனும் குற்றச்சாட்டை சுமத்தமுடியாது. சாதிய சமத்துவத்தை ஏற்படுத்தல் பற்றிய புரிதல் தவறாக இருந்ததே இதற்கான காரணமாகும். குறிப்பாக தீண்டாமை பற்றியும்,  சாதிய சமத்துவ போராட்டங் -களுக்கும் தேச விடுதலைப் போராட்டத்திற்கும் இடையேயான உறவுகளைப் பற்றியதுமான புரிதல் மிகவும் தப்பானதாக இருந்தது.

இத் தவறான புரிதலை ஏற்படுத்துவதில் இடதுசாரி இயக்கங்களும் காரணமாக இருந்துள்ளன. தீண்டாமை ஒழிப்பில் ஆழமானதும், நிலைத்ததன்மை பெற்றதுமான வரலாற்றுப் பதிவுகளை ஏற்படுத்துவதில் இடதுசாரிகளின் வகிபாகத்தை என்றுமே எவராலும் மறுக்கமுடியாது. தீண்டாமை ஒழிப்பிலான தமது வீரமிக்க வரலாற்று வகிபாகத்தால் எம்.சி.சுப்ரமாணியம், கந்தையா, ஸ்ரீனிவாசன், நாகலிங்கம், சண்முகதாசன், கே.ஏ.சுபர்மணியம் போன்ற தலைமைத் தோழர்கள் யாழ் சமூக உருவாக்கத்தில் நிரந்தர இடம் பிடித்துள்ளனர். 

ஆனால், தீண்டாமையானது நிலபிரபுத்துவ சமூகத்தின் மிச்சசொச்சம் என்ற அவர்களின் நிலைப்பாடு மிகவும் தவறானது. சாதியொழிப்பு என்ற கட்டத்தை நோக்கி நகர்வதற்கு இக்கருத்து பெரும் தடையாக இருந்துள்ளது. இது பற்றி தொடர்ந்து விவாதிப்போம்.

சபையோர் வணக்கத்தையும், அறிமுகத்தையும் முடித்துக்கொண்டு முன்னுரைக்குள் செல்வோம்.

முன்னுரை:-

ஸ்ரீ லங்காவென பெயர்மாற்றம் பெற்றுள்ள, இலங்கை நாட்டரசு தமிழீழத்தின் மீதும், இந்திய நாட்டரசு காஷ்மீரத்தின் மீதும், பாக்கிஸ்தான் நாட்டரசு பலுஸ்திஸ்தான் மீதும், நேபாள நாட்டரசு மாதேசிகள்மீதும்,  பிரயோகித்துவரும் தொடர் ஆயுத வன்முறைகள் இதற்கான பிரபல்யமிக்க எடுத்துக்காட்டுகளில் மிகச்சிலவாகும்.  
தமீழீழ ஆதரவாளர்களையும், செயற்பாட்டாளர்களையும் மிரட்டுவதற்காகத்தான் இத் தலைப்பு என யாரும் கருதவேண்டாம். உண்மை மிரட்டலாக இருந்தால் யாரும் ஒன்றும் செய்யமுடியாது. பூ! நிலபிரபுத்துவ மிச்சசொச்சமான தீண்டாமையை ஒழிப்பது என்ன இமயமைலையைத் தூக்கியெறிவது போன்றதா? பெரும் புயலாக மாறி தூக்கிப்பிரட்டிப் போடமாட்டோமா என்ன? என்று, தனிநபர் வீரதீரச் செயலையே அரசியல் துணிச்சலெனக் கருதும் பலர் கேட்கலாம்.

ஆண்டான் அடிமை சமூக அமைப்பின் கட்டுமானமான தீண்டாமையானது இன்று வெறுமனே நிலபிரபுத்துவ மிச்சசொச்சமல்ல. இந்திய உபகண்டத்தின் எந்தவொரு மூலைமுடுக்கிலும்சரி தீண்டாமையை முற்றுமுழுதாக ஒழிப்பதில் வெற்றி ஏற்படுமானால், அதன்போது ஏற்படும் தீப்பொறி இந்திய உபகண்டத்தின் சமூக சமநிலையையே, குறிப்பாக அரசியல் சமநிலையை முழுவதுமாக ஆட்டங்காண வைக்கும். சமூக சமநிலையென்பதை அழுத்தந் திருத்தமாகக் வாசிக்கவும். அதுவரை, இலங்கை, இந்தியா, நேபாளம் ஆகிய மூன்றுநாடுகளினது சமுகச் சமநிலையில் எந்த தீர்மானகரமான மாற்றமும் ஏற்படப்போவதில்லை.

ஆகவே, “தீண்டாமை ஒழியாமல், மலராது தமிழீழம்எனும் கூற்று ஒரு சாதாரண மிரட்டலல்ல என்பதை மீண்டும் வலியுறுத்தப்படுகிறது. முன்னுரையை முடித்துக்கொள்கிறேன்.

இவ்விதம் கூறுவது எதற்காக?

ஒடுக்கப்படும் சாதியினரினதும், உழைக்கும் மக்களினதும் சமூக அந்தஸ்து இதே நிலையிலேயே தொடருமானால் உங்களின் ‘சுயராஜ்யம்எமக்குத் தேவையில்லையென, இந்திய சுதந்திரப் போராட்டத்தின் போது அம்பேத்கார், பெரியார், சிங்காரவேலர்……………போன்றோர்கள் காங்கிரஸையும் காந்தியாரையும் மிரட்டினார்கள். இதற்காக காந்தியாரால் நடத்தப்பட்ட பல போராட்டங்களைப் பகிஷ்கரித்தார்கள். சுதந்திரப் போராட்ட காலகட்டத்திலேயே, தீண்டாமை ஒழிப்பு இயக்கங்களையும் முன்நின்று நடத்தினார்கள். தமிழர் விடுதலைக் கூட்டணி விழுந்தடித்துக்கொண்டு ‘சமபந்தி சமபோஜனம்நடத்தியதுபோல், காந்தியாரும் படபடப்புடன் தீண்டத்தகாதவர்களை ஹரிஜனர் என அழைத்து தலித்துகளின் கோபத்தைத் தணிக்க முற்பட்டார். (ஹரி என்பது வேதக் (பார்ப்பனிய) கடவுளான பிரம்மாவைக் குறிக்கும். ஜனர் என்பது புத்திரர்களைக் குறிக்கும்) ஜவர்ஹால் நேருவோ “இந்திய தேசத்தைமலரவைக்க, இன்னோர்படி மேலேசென்றார். இந்திய அரசியல் சாசனத்தை வடிக்கும் பொறுப்பை அம்பேத்கரிடமே ஒப்படைத்தார். இயல்பாக மலரவில்லை, புகையடித்தே மலரவைக்கப்பட்டது. விளைவு இந்தியதேசமும், இந்திய தேச அரசும் இன்னமும் மலரவில்லை; பதிலாக அதனிடத்தில் இந்திய நாட்டரசு நிறுவப்பட்டது.

இவ்விதமாக, காங்கிரஸ் வென்றது. இந்திய தேச அரசைத் தோற்றுவிப்பதில் தலித் தலைவர்கள் தோற்றுப்போயினர். தலித்மக்களினதும், பிற பிற்படுத்தப்பட்ட மக்களினதும் சமூக அந்தஸ்து நிலையில் எந்த வளர்திசை மாற்றங்களும் ஏற்படாமலேயே, இப்பிரச்சனைகள் தீர்க்கப்படாமலேயே ‘இந்திய சுதந்திரப் போராட்டம்ஒரு முடிவுக்கு வந்தது. அல்லது கட்டாயமாக முடித்துவைக் -கப்பட்டன. எந்தத் தேசத்திற்கு (பிரித்தானியா) எதிராக இப் போராட்டம் நடந்ததுவோ அந்த தேசமே இப்போராட்டத்தை சுமூகமாக முடித்தும் வைத்தது.

இவ்விதம் தெற்காசிய எங்கணும், சுதந்திர நாடுகள் உருவாக்கப்பட்டன. அந்நாடுகளில் ‘நாட்டரசுகளும்நிறுவப்பட்டன. இந்நாட்டரசுகள், அவற்றின் ஆளுமையின் கீழான முழு மக்களினதும் தேசிய அரசுகளாக அடையாளப் படுத்தப்பட்டன, நாட்டுமக்கள் அனைவரும் நாட்டரசுளை தமது தேச அரசுகளாக ஏற்றுக்கொள்ளவைப்பதற்கான முயற்சிகளையும் முன்னாள் காலனியல் எஜமானர்களே ஆரம்பித்து வைத்தார்கள். அப்போதைய சோஷலிச நாடுகளும், தெற்காசிய கம்யூனிச்ட் கட்சிகளும் இதற்க்குத் துணைபோயின.

இதன் வரலாற்றுத்தவறுகள் புரிந்து கொள்ளப்பட்டபின்பும் நாட்டரசுகளை’, ‘தேசங்களற்ற தேச அரசுகளை’, தேச அரசுகள் என அடையாளப்படுத்தும் செயற்பாடுகள் இன்னமும் தொடர்கின்றன. அரசியல் வன்முறையாக ஆரம்பித்து வைக்கப்பட்ட இம்முயற்சி, இன்று நாட்டுப்பற்று எனும் ‘அழகானபெயரைக் கொண்ட ஆயுத வன்முறையாக பரிமாணம் பெற்றுள்ளது. ஸ்ரீ லங்காவென பெயர்மாற்றம் பெற்றுள்ள, இலங்கை நாட்டரசு தமிழீழத்தின் மீதும், இந்திய நாட்டரசு காஷ்மீரத்தின் மீதும், பாக்கிஸ்தான் நாட்டரசு பலுஸ்திஸ்தான் மீதும், நேபாள நாட்டரசு மாதேசிகள்மீதும்,  பிரயோகித்துவரும் தொடர் ஆயுதவன்முறைகள் இதற்கான பிரபல்யமிக்க எடுத்துக்காட்டுகளில் மிகச்சிலவாகும்.  

இன்று நாம் காணும் நாட்டரசுகள், பழைய அரைக் காலனியல் விதேசிய அரசுகளின் சாம்பல் மேட்டின்மீது மக்களால் உருவாக்கப்பட்ட முற்றிலும் புதிய அரசுகளல்ல. மாறாக, அவை, காலனியல்வாதிகளாலும், அவர்களுக்குத் துணைநின்ற முதலாளித்துவ வர்க்கத்தினராலும், தூசுதட்டப்பட்டு, வெள்ளை -யடிக்கப்பட்ட, சில முதலாளித்துவ ஜனநாயகச் சீர்திருத்தங்கள் செய்யப்பட்ட அதே அரைக்காலனியல் அரசுகளேயாகும்.

எவ்விதமோ, நாடுகளுக்குச்சுதந்திரம் கிடைத்துவிட்டன. உருவாக்கப்பட்ட நாட்டரசுகள் வல்லரசுகளின் துணையோடு தேசங்களற்ற தேச அரசுகளாகவும், பிற தேசியங்களையும், தேசிய இனக்களையும் அடக்கும் உள்-காலனி அரசுகளாகவும் வளர்ந்து வருகின்றன. இந்த 75 வருடகால வரலாற்றில் வங்கதேசம் எனும் புதியதோர் நாடும், புதியதோர் நாட்டரசும் உருவாகியுள்ளது. ஆனால், 75 வருடங்களாகியும் இன்னமும் இப்பிராந்தியத்தில் தேசமென்றும் தேச அரசென்றும் சொல்லிப்பெருமைப் படும்படி எதுவுமே உருவாகவில்லை. ஆனால், இப்பிராந்தியத்தில் பத்துக்கு மேற்பட்ட தேசிய இனங்கள், தம்மையாளும் நாட்டரசில் இருந்து விடுபட்டு தனித்தேச அரச அமைவுக்கான விடுதலைப் போராட்டங்களை ஆரம்பித்துள்ளன; பல ஏற்ற இறக்கங்களுடன் அவை முன்னேறியும் வருகின்றன.

தமிழீழ தேசத்தின் நிலையும் இதுதான். தேச உருவாக்கம் எனும் இத் தொடரோட்ட (protracted)ப் பந்தயத்தில் தெற்காசியப் பிராந்தியளவிலான தங்கப் பதக்கம் பெறும் நிலைக்கு  வழர்ந்திருந்ததாகக் கருதப்பட்ட தமிழீழ தேசம், இன்று வெள்ளிப்பதக்கம் கூடபெற முடியாத நிலைக்கு தாழ்ந்துவிட்டது துயரத்துக் குரியதே. இப்பிராந்திய நாட்டரசுகளான ஸ்ரீலங்கா, இந்தியா, பாக்கிஸ்தான் ஆகிய மூன்றும் கைகோர்த்து தமிழீழ தேசத்தை வெற்றிகொண்டுவிட்டன.

எமது குறிக்கோள் எது ‘நாட்டரசா’? ‘தேச அரசா’?
நாட்டரசு என்றால் என்ன? தேசஅரசு என்றால் என்ன?

நாட்டரசு:

எமது தோல்விக்குக் காரணமான எமது தவறுகள் பல. அவற்றுள் மிகப் பிரதான மான அரசியல் தவறுகளில் ஒன்று நாம் அமைக்கவிரும்பும் அரசு பற்றிய புரிதல் இன்மையேயாகும். எமது தேச (தமிழீழ) உள்ளரங்கிலும், எமது நாட்டு (இலங்கை) உள்ளரங்கிலும், அனைத்துலக அரங்கிலும் அரசியல் வியூகங்களை வகுப்பதில் நாம் இழைத்த தவறுகளுக்கான காரணம் இப் புரிதல் இன்மையேயாகும். இத் தவறுகள் இன்றும் தொடர்கின்றன.
பல சமூகக் குழுமங்கள், தமக்குள் அசமத்துவ உறவைக் கொண்டவைகளாக, பாரப்பரியமாக வாழ்ந்துவரும் ஒரு பூகோளப்பரப்பே நாடாகும். இப் பூகோளப்பரப்பினில் ஒரு சமூகக் குழுமமே சமூக, பொருளாதார ஆதிக்கம் பெற்றதாக, அல்லது ஆதிக்கம் பெறும் நிலைக்கு வளரக்கூடிய வாய்ப்புகளைக் கொண்டதாக அமைந்திருக்கும்.

இதனால் அப்பூகோளப்பரப்பின் அரசியலதிகாரம் முழுமையும் அல்லது அரசியல் அதிகாரத்தின் தீர்க்கமான துறைகள் அனைத்தும் இச் சமூகக் குளுமத்தின் ஆளுமையின் கீழேயே காணப்படும். இப் போக்கு வளர்ந்து செல்லும் தன்மைபெற்றதாக இருக்கும். இப்பூகோளப்பரப்பை ஆட்சி செய்யும் அரசே நாட்டரசு எனப்படும். ஒன்றோ அல்லது இரண்டோ சமூகக் குழுமங்களின் ஆழுமையின் கீழுள்ள இவ்வரசு வர்க்க அடக்குமுறையுடன் சேர்த்து பிற சமூகக் குழுமங்களை அடக்குவதையும்  தனது குறிக்கோளாகக் கொண்டதாக இருக்கும். இவ்வித அரசுகளே நாட்டரசுகள் எனப்படுகின்றன. 

காலனிக்கு முன்பு இவ்வரசுகள் மன்னர் அரசுகளாகவும்  காலனியல் அடக்கு -முறையின் போது இவ்வரசுகள் நவ-காலனியல் அரசுகளாக இருந்தன, தற்போது இவை உள்-காலனியல் அரசுகளாக மாறியுள்ளன.  இவைதான் தேச அரசுகளின் அமைவுக்கு முன்னைய அரச வடிவங்களாகும்.



தேச அரசு:

பல தேசிய இனக்குழுமங்களும் (ethnic group), சாதியக் குழுமங்களும் தமக்குள் சமத்துவ உறவைக் கொண்டவைகளாக வாழ்ந்துவரும் ஒரு பூகோளப்பரப்பே தேசமாகும். இப் பூகோளப்பரப்பினில் ஒரிரு சமூகக் குழுமங்கள் மட்டுமே சமூக ஆதிக்கமும், பொருளாதார ஆதிக்கமும் பெற்றதாக, அல்லது ஆதிக்கம் பெறும் நிலைக்கு வளரக்கூடிய வாய்ப்புகளைக்கொண்டதாக இருக்கமாட்டாது. இதனால் அரசியலதிகாரம் முழுமையும் அல்லது அரசியல் அதிகாரத்தின் தீர்க்கமான துறைகள் ஒரிரு சமூகக் குழுமங்களின் ஆளுமையின் கீழ் காணப்படும் நிலை இருக்காது. அனைத்து சமூகக் குழுமங்களும் சுதந்திரமாக் வளர்வதற்கான வாய்ப்புகள் உருவாக்கப்பட்டிருக்கும்.
இவ் வாய்ப்புக்கள் வளர்ந்து செல்லும் தன்மைபெற்றதாக இருக்கும். இப்பூகோளப்பரப்பே தேசம் எனப்படும்.

இப்பூகோளப்பரப்பை ஆட்சிசெய்யும் அரசே தேச அரசு எனப்படும். அனைத்து சமூகக் குழுமங்களினதும் கூட்டாளுமையின் கீழுள்ள இவ்வரசு எந்தவொரு சமூகக் குழுமத்தையும் அடக்குவதை தனது குறிக்கோளாகக் கொண்டிருக்காது. மாறாக அனைத்து சமூகக் குழுமங்களினதும் சுதந்திரமான வளர்ச்சியைப் பாதுகாப்பதாக இருக்கும், அதற்கான உத்தரவாதங்களை வழங்குவதாக இருக்கும். இப்பொழுது எமது கேள்விக்கு வருவோம்.
நாம் அமைக்க விரும்புவது
 தமிழீழ தேசிய அரசையா? தமிழீழ நாட்டரசையா?

தமீழீழம் எனும் பொத்தாம் பொதுப் பதத்தினுள் ஒழிந்து விளையாடலை இனியும் தொடரவேண்டுமா?

இக்கேள்வியை இவ்விதம் விரிவாக்கலாம். தமிழரின் பாரம்பரிய தாயகத்தில் வாழும் இஸ்லாமியர்கள், அடக்கப்பட்ட சாதிப்பிரிவினர், புலம் பெயர்ந்த மலையகத் தமிழர், இயல்பாகக் குடியேறி இங்கேயே வாழும் சிங்களவர்கள், கிழக்கு மாகாணத்தில் வாழும் பறங்கியர்கள் ஆகிய ஐந்துவகை சமூகக் குழுமங்களின் மீதும் பிரயோகிக்கப்பட்டுவரும் பாரபட்சங்கள், ஓரங்கட்டல்கள், ஜனநாயக விதிமுறை மீறல்கள், சம உரிமை மறுப்புகள், தீண்டாமைகள்  ஆகிய பஞ்சகொடுமைகளையும் இல்லாதொழித்து, அனைத்து சமூகக் குழுமங்களிடையேயும் சமத்துவமானதும், சமவுரிமை உள்ளதுமான உறவுகளை ஏற்படுத்தக்கூடிய ஒரு தமீழீழத்தையும் அதற்குரிய அரசையுமா? இதுதான் தமிழீழ தேச அரசாகும். அல்லது, இப் பஞ்ச சமூகக் குழுமங்களின் மீதான பஞ்ச கொடுமைகளையும் அவ்விதமே தொடரக்கூடிய ஒரு தமிழீழத்தையா? அதுதான் தமிழீழ நாட்டரசாகும்.
மீண்டும் மீண்டும் கேட்டுப்பார்த்துக்கொள்வோம். எமது குறிக்கோளென்ன? தமிழீழத் தேச அரசா? தமிழீழ நாட்டரசா?                            
தமீழீழம் எனும் பொத்தாம் பொதுப் பதத்தினுள் ஒழிந்து விளையாடலை இனியும் தொடரவேண்டுமா?
எமது தியாகங்கள் பாலைவனவெய்யிலில்(வல்லரசிய வஞ்சனையில்) கருகிப் பொசுங்கியதுவும், கடலில் வீசியெறியபட்டு வல்லரசிய மீன்களு -க்கு இரையாகிப்போனமையும் இனியும் தொடரவேண்டுமா?
ஒருமித்த பதிலில்லாவிட்டால் பதிலைத் தேட அயராதுழைப்போம். மக்களின் வாழ்க்கையுடன் விளையாடவும் வேண்டாம், எதிரிகளுக்கு பேரழிவுக் களங்களை உருவாக்கிக் கொடுக்கவும் வேண்டாம்.  
எம்மில் பலர் பிராந்திய அல்லது உலகளாவிய வல்லரசுகளின் உதவியு -டன் தமிழீழ்த்தை உருவாக்க முற்பட்டுவருகிறார்கள். ஆனால், அவர்களுக்கு ஆசைகாட்டிய வல்லரசுகளோ அவர்களின் முகத்திலும் முதுகிலும் மாறிமாறிக் குத்தி அவர்களையும் தமிழ் மக்களையும் தொடர்ந்து வஞ்சித்ததுவருகின்றது.  மீண்டும் சிலர் அம்முயற்சியில் ஈடுபட்டு வருவதைக் காணக்கூடியதாய் உள்ளது. அவர்களிடம் நாம் கேட்கவேண்டிய கேள்வி, வல்லரசுகளின் உதவியுடன் நீங்கள் உருவாக்க முனைவது எதை? ஒரு நாட்டையா? அல்லது தேசத்தையா? அதாவது ஒரு நாட்டரசையா? அல்லது தேச அரசையா?
நாட்டையும், நாட்டரசையுந்தான் உருவாக்க முயல்கிறிர்களா? அவ்வித மானால் ஒன்றில் நீங்கள் வடிகட்டிய முட்டாள்களாகவோ அல்லது வல்லரசுகளின் திட்டமிட்ட ஐந்தாம் படையினராகவோ இருக்கவேண்டும்.
தேச அரசுகளின் உருவாக்கத்துக்கும், அவற்றின் இறமைக்கும் பாதுகாப்புக்கும் எதிராகச் செயற்படுவதே வல்லரசுகளின் இயல்பாகும். வல்லரசு என்பதன் அர்த்தமே அதுதான். ஆகவே நாட்டரசுக்காகப் போராடும் உங்களை அவர்கள் நிச்சயமாகக் கண்டுகொள்வார்கள். உங்களை மதித்து போதையூட்டும் விருந்தளிப்பார்கள், அல்லது உங்களை உள்ளே வரவிட்டு தமது ஏவல் நாய்களாக்கிக்கொள்வார்கள், முடியாத பட்சத்தில் மிதித்துத் துவைப்பார்கள். இந்திய பிராந்திய வல்லரசும், அமெரிக்க உலக வல்லரசும் எவ்விதம் நடந்து கொண்டன என்பதை மறவாமல் இருப்பீர்கள் என எதிர்பார்ப்போம்.
19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதிவரை உலகின் பிரதான அரசியல் போக்கு நாடுகளுக்கு சுதந்திரம் வேண்டுமென்பதாகவே இருந்தது. அதாவது மூன்றாவது உலக நாடுகளே உலகின் கதாநாயகர்களாக பவனிவந்தனர். அவர்கள் கதாநாயகர்களாவது உலகின் அன்றைய வரலாற்றுத் தேவையாக இருந்தது. சோஷலிச நாடுகளும் அவர்களுக்கு உதவின. இதனால்தான் காந்தி, நேரு, பண்டாரநாயக்க, போன்ற மூன்றாம் உலக நாட்டுத் தலைவர்களால் அம்பேத்கர், பெரியார் போன்ற தலைவர் களையும் கம்யூனிஸ இயக்கங்களையும் ஒரங்கட்டக் கூடியதாய் இருந்தது. உலகின் பல மூன்றாம் உலக நாடுகளில் இவைதான் நடைபெற்றன. வரலாறு திரும்பவும் திரும்பவும் சுப்பற்ற கொல்லையை சுத்தும்என்று நம்பாதீர்கள். இருபத்தொராம் நூற்றாண்டு நாலாம் உலக நாடுகளின் காலமாகும். நாலாம் உலக நாடுகளே இன்றைய உலகின் கதாநாயகர்களாகும். மூன்றாம் உலக நாடுகளின் சுதந்திரப் போராட்டங்கள் நாட்டையும் நாட்டரசையும் நோக்கிப்பயணித்தன, ஆனால் நான்காம் உலகநாடுகளின் விடுதலைப் போராட்டங்களோ தேசத்தையும் தேச அரசையும் நோக்கிப் பயணிக்கின்றன. இதுதான் வரலாற்றின் இயல்பான போக்கும் இதுதான், பிரதான போக்கும் இதுதான். இவ் இயல்பான போக்கில் தமிழீழவர்களாகிய நாமும் பயணிப்போம்.
அதற்கான முன் நிபந்தனைகள் பலவுண்டு. அதில் ஒன்றுதான் தீண்டாமை ஒழிப்பாகும். தீண்டாமை ஒழியாமல் மலராது தமிழீழம் என்பதை மீண்டும் வலியுறுத்தி, இது தொடர்பான எந்த விவாதத்திற்கும் தயாராய் உள்ளேன் என்பதை அழுத்தமாகக் கூறி விடைபெறுகிறேன்.
      இவ்வுரையின் மூலம், சமதர்ம குவிமைய ஐந்தியல் கோட்பாட்டின் https://vidiyalgowri.blogspot.in/2017/04/      படி தேசிய விடுதலை இயலுக்கும் சாதிய ஒழிப்பியலுக்கும் இடையேயான உறவு எவ்விதம் அமையவேண்டும் என்பதுபற்றியதோர் சமதர்மப் பார்வையைத் முன்வைக்க முற்பட்டுள்ளேன். இவ் உரையாடலின் தொடர்ச்சியாக இங்கு முன்வைக்கப்படவுள்ள தமிழீழ சாதியத்தை களைந்தெறிய என்னசெய்யவேண்டும்? என்ற தலைப்பிலான கட்டுரைக்கும் இது இது பொருந்தும்.

This paper was submitted by me (Arinesaratnam Gowrikanthan) to the following conference:-  “TOGETHER TOWARDS TOMORROW: Ilankai Tamil speaking diaspora Conference”, took place on 17-18 December 2016 at the KTL - SOAS, University of London, London WC1 OXC. By Tamil Information Centre Thulasi

Thursday, 17 August 2017

தமிழீழத் தேசியத்தின் மார்க்ஸியப் போர்க்குரல்- தோழர் விஷ்வா

தமிழீழத் தேசியத்தின் மார்க்ஸியப் போர்க்குரல்
தோழர் விஷ்வா

நவ-நவீன திரிபுவாதத்திற்கெதிரான முன்னணிப் போராளி!

தெற்காசிய தேசிய இனச்சிக்கல்கள் தொடர்பான நவீன திரிபுவாதக் கருத்துக்கட்டுமானத்துக்கும், மார்க்ஸிய சூத்திரவாத மற்றும் மார்க்ஸிய மாறாமரபியல்வாதக் (fundrmentalist) கருத்துக் கட்டுமானத்துக்கும் எதிரானதொரு நடவடிக்கையாக இவரின் செயலக் கருதுவதில் எத்தவறுமில்லை. இத்திருப்பு முனையை ஆரம்பித்துவைத்ததன் மூலம் மார்க்ஸிஸத்தை  தெற்காசிய சூளலுக்கொப்ப வளர்த்தெடுக்கும் திசையைத் துணிவுடன் சுட்டிக்காட்டியுள்ளார்.
தோழர் விஷ்வானந்த தேவரின் தலைமையிலான ‘NLFTE’ இடதுசாரிப் பாரம்பரியத்திலிருந்து தோன்றி, மார்க்ஸிஸ த்தை தமது சித்தாந்தமாக ஏற்றுக்கொண்ட, தமிழீழ விடுதலை அமைப்பாகும். மொழிவழித் தேசிய இனக் குழுமத்தின் (Linguistic ethnic group) தனித்தேசக் கோரிக்கை யை ஏற்றுக்கொண்டு அதற்காகப் போராட முன்வந்த இடதுசாரிப் பாரம்பரிய முதலாவது அமைப்பு இதுவேயாகும். இலங்கையில் மட்டுமல்ல தெற்காசியா விலேயே இதுதான் முதல் அமைப்பெனக் கூறலாம். தெற்காசிய தேசிய இனச்சிக்கல்கள் தொடர்பான நவீன திரிபுவாதக் கருத்துக்கட்டுமானத்துக்கும், மார்க்ஸிய சூத்திரவாத மற்றும் மார்க்ஸிய மாறாமரபியல்வாத (fundamentalist) கருத்துக் கட்டுமானத்துக்கும் எதிரான தொரு நடவடிக்கையாக இவரின் செயலைக் கருதுவதில் எத்தவறுமில்லை. இத்திருப்பு முனையை ஆரம்பித்து வைத்ததன் மூலம் மார்க்ஸிஸத்தை  தெற்காசிய சூளலுக்கொப்ப வளர்த்தெடுக்கும் திசையைத் துணிவுடன் சுட்டிக்காட்டியுள்ளார். அத்திசையில் நடைபோட்டும் உள்ளார். இதற்காக தோழர் விஷ்வானந்த தேவருக்கு எனது புரட்சிகர வணக்கத்தை முதலில் தெரிவித்துக் கொள்கிறேன்.

‘NLFTE’ யின் தோற்றம்:

இரண்டாம் தலைமுறை இடதுசாரிகளின் தத்துவார்த்த இலங்கைத் தலைவராக இன்றுவரை கருதப்படும் தோழர் சண்முகதாசன் தலைமையிலான ‘இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி-சீனசார்பு’இல் இருந்து பிரிந்துசென்ற, பிரிந்துசெல்ல விரும்பிய, கட்சியின் கருத்தால் கவரப்பட்டிருந்த சிலரை உள்ளடக்கி இயங்கிவந்த ஒரு அணியின் பரிணாமவளர்ச்சியே ‘NLFTE’ ஆகும். இவ்வணி தனியணியாக மாறியமைக்கான அகநிலைக்காரண ங்கள்:-

‘இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின்(சீனசார்பு) தலைமையில் நடத்தப்பட்ட தீண்டாமை ஒழிப்புப் போராட்டத்தின் தொடர் செயற்பாடின்மை, கட்சியின் உறுப்பினர்களும், தீண்டாமை ஒழிப்புப் போராளிகளும் எதிர்பார்த்ததுபோல் அப்போராட்டம் புரட்சிகர வடிவெடுக்காமல் முதலாளித்துவச் சீர்திருத்தப் போராட்டமாகப் பிசுபிசுத்துப் போனமை, இலங்கையின் அரசியல் சமநிலையை உழைக்கும் வர்க்கத்துக்குப் பாதகமான முறையில் செயற்பட்டுவந்த தேசியஇனச் சிக்கலையிட்டுத் திட்டவட்டமான நிலைப்பாடின்மை. இலங்கைப் பொருளாதாரத்தின் போதாமை தீர்ந்தால் அனைத்துச் சிக்கல்களும் தீர்ந்துவிடும் எனக் கிளிப்பிள்ளைபோல் மீண்டும்மீண்டும் ஒப்புவித்துக்கொண்டிரந்தமை, 

‘இலங்கைத்தே சியம்பற்றிய சிங்கள-பௌத்த பேரகங்கா ரவாதச் சார்புக் கருத்தோட்டங்கள், தொழிற்சங்கவாதம் பாராளுமன்றவாதம் ஆகியவற்றிலிருந்து முழுமையாக விடுபடாதிருந்த நிலை, விஜயவீராவின் தலைமையில் பிரிந்துசென்ற JVPயின் ‘வீரமிக்க’ சிங்களத் தேசிய இனச் செயல்களையிட்டும், அதைத்தொடர்ந்து கட்சியிலிருந்து பலகுளுக்கள் வெளியேறியதையிட்டும் கட்சித் தலைமையின் செயலற்றநிலமை, ஆகியவையே இதற்கான அகநிலைக் காரணிகளாகும்.

பிரதான புறநிலைக்காரணங்கள்:-

சிங்கள-பௌத்த தேசிய இனக் குளுமவாத நலனுக்காக, இலங்கைத் தொழிலாளிவர்க்க நலனையும், ஒடுக்கப்பட்ட தேசிய இனக் குழுமங்களின் நலனையும் முதற் தலைமுறை இடதுசாரிகள் புறக்கணித்திருந்தார்கள்.
சீனக் கலாச்சாரப் புரட்சியின் தாக்கத்தால் உருவாக்க ப்பட்ட சோஷலிஸப் போராட்ட உணர்வுகள், சோவியத் யூனியனின் சிதைவுகளில் இருந்து கற்றுக்கொண்ட பாடங்கள். சாருமஜும்தார் அலை, வடபகுதியில் தமிழீழ விடுதலைப் போராளிகளின் வளர்ச்சி;                    அரச கட்டுமான த்தைச் சிங்கள-பௌத்த பேரகங்கார மயப்படுத்த       ஸ்ரீ-லங்கா சுதந்திர கட்சி மேற்கொண்ட நடவடிக்கை களின் வெற்றிகள்;                          இடதுசாரி சிங்களத் தேசியவாதமென நாமம் சூட்டப்பட்ட JVP-யின் உண்மைமுகம் சிங்கள-பௌத்த தேசிய இனக் குளும-வாதமே என்பதை புரிந்து கொண்டமை;                                          இலங்கைத் தேசியக் கட்சியென நம்பியிருந்த ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியும் கூட, சிங்கள-பௌத்த தேசிய இனக் குளுமவாத(Ethno-Nationalist ) கட்சியேதான் என்ற உண்மை வெளியாகியிருந்த நிலமை, செத்துப்போனதாகக் கருதப்பட்ட அமெரிக்க சார்பு யூ.என்.பியின் பிரமாண்ட மான மீளெழுச்சி;                                     சிங்கள-பௌத்த தேசியஇனக் குளுமவாத நலனுக்காக, இலங்கைத் தொழிலாளிவர்க்க நலனையும், ஒடுக்க ப்பட்ட தேசியஇனக் குழுமங்களின் நலனையும் முதற் தலைமுறை இடதுசாரிகள் புறக்கணித்திருந்தார்கள். இவ் உண்மை அம்பலமாகியிருந்த நிலைமை, ஆகியவையே உடனடி புறக்காரணிகளாகும். –

தோழர் விஷ்வாவும்
அவரை ஒத்த பிற தோழர்களும்
எதிர்கொண்ட தத்துவார்த்த நெருக்கடிகள்:

நேபாளா நிலபிரபுத்துவ அரசியல் கட்டுமான த்தையும். இந்திய அகண்டபாரத தொல்லைக ளையும் வெற்றிகரமாக எதிர்கொண்ட கட்சியால் மாதேசிச் சிக்கலையும், தலித் சிக்கலையும் எதிர்கொள்ளமுடியாது போய்விட்டது. இதனால் வர்க்கப்போராட்டக் களத்தில் தான் பெற்றவெற்றி களை தொடர்ந்தும் தக்கவைத்துக்கொள்ள முடியாதது மாத்திரமல்ல, அரசு அமைவுக்கான வர்க்கபோராட்டக் களத்தில் தோற்றுப்போய்வி ட்டது.

பிரதான தத்துவார்த்த நெருக்கடிகளாக பிவருவன வற்றைப் பட்டியலிடலாம்.       
அ) எவ்வகை யுத்தமுறை-  முன்னணிப்படையா? மக்கள் யுத்தமா?                                                       ஆ) தேசியஇனச் சிக்கலிலான நவ-நவீன திரிபுவாதம்,    
இ) இயக்க அராஜகவாதமா உள்நாட்டு யுத்தமா?            ஈ) புதிய ஜனநாயகப்புரட்சியா, சோஷலிஸப் புரட்சியா?  
   இத் தத்துவார்த்த நெருக்கடிகள் இன்றுவரை தொடர்கின்றன. இன்றைய நிலையை மனதில் கொண்டு இவைபற்றி எழுதுவது தோழர் விஷ்வானந்ததேவர் நடத்திவந்த கருத்தியல் போராட்டதைத் தொடர்வதா கவும், அவருக்குச் செய்யப்படும் நன்றிக்கடனாகவும் இருக்கும் எனக் கருத்துகிறேன்.

இத் தத்துவார்த்த நெருக்கடிகள் ஒன்றோடொன்று பின்னிப்பிணைந்தவைகளாகும். இவ் நெருக்கடிகளின் அடிப்படை தேசிய இனச்சிக்கல்பற்றிய நவ-நவீன திரிபுவாதக் கருத்துக் கட்டுமானமேயாகும். இது தெற்காசியா முழுமைக்கும் பொதுவானதாகவும் உள்ளது. இப்பிராந்திய தேச உருவாக்கம் தொடர்பான சமூக நிகழ்வுப்போக்கைச் சரியாகப் புரிந்துகொள்ள வில்லையானால், தேசியத்தையும் சாதியத்தையும் சரியாகப் புரிந்துகொள்ளமுடியாது, வர்க்கப் போராட்ட த்தையும் சரியாகப் புரிந்துகொள்ளமுடியாது. தனித்து அரசமைக்கக்கூடிய நிலைக்கு வளர்ந்திருந்த நேபாள கம்யூனிஸ்ட் கட்சி(மா-ஓ) தனது தவறான புரிதல்களால், நேபாள நவ-காலனியல் அரசியல் கட்சிகளுடன் ஆட்சியைப் பங்கீட்டுக் கொள்ளவேண்டிய நிலைக்குத் தாழ்ந்து சென்றதை நினைவில் கொள்ளவேண்டும். நேபாளிய தலித்திய சிக்கலையும், நேபாளிய தேசிய இனக்குளுமச் சிக்கலையும் பற்றிய சரியான புரிதல்இல்லாததே இதற்கான காரணமாகும். நேபாளா நிலபிரபுத்துவ அரசியல் கட்டுமானத்தையும். இந்திய அகண்டபாரத தொல்லைகளையும் வெற்றிகரமாக எதிர்கொண்ட கட்சியால் மாதேசிச் சிக்கலையும், தலித் சிக்கலையும் எதிர் கொள்ளமுடியாது போய்விட்டது. இதனால் வர்க்கப்போராட்டக் களத்தில் தான் பெற்ற வெற்றிகளை தொடர்ந்தும் தக்கவைத்துக்கொள்ள முடியாதது மாத்திரமல்ல, அரசு அமைவுக்கான வர்க்கபோராட்டக் களத்தில் தோற்றுப்போய்விட்டது. ஆகவே, அரச அமைவுக்கான போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் அதேவேளை. தொடர் தொல்விகளைத் தவிர்க்க வேண்டுமானால், இத்தத்துவார்த்த நெருக்கடியில் இருந்து தமிழீழ சமதர்மப் போராளிக ளாகிய நாமும், எமது மக்களும் வெளிவரவேண்டும் 


முதலாவது நெருக்கடி:-
முன்னணிப் படையுத்த முறையா? 
மக்கள் யுத்த முறையா?

மு.ப.யு.முறை ஆயுதத்தை முதன்மைப்படுத்தி அரசியலை ஆயுதத்தின் அடிமையாக் குகின்றது. மக்கள் யுத்தமுறை ஆயுதத்தின் முக்கியத்துவத்தை மறுக்கவில்லை, “அரசியல் அதிகாரம் துப்பாக்கிக் குளலிருந்துதான பிறக்கிறதுஎனற அரசியல் அரிச்சுவடியையும்  மறுக்கவில்லை. ஆனால் துப்பாக்கிமுனை அரசியலை ஆளக்- கூடாதென்கிறது. சமுதாயத்தில் ஆயுதத்திற்கு வளங்கப்பட்டுள்ள தலைமைப் பாத்திரத்தை யும், ஆதிக்க நிலையையும் இல்லாதொழிப் பதையும், உணர்வுபூர்வமாக அணிதிரண்ட வெகுஜன அரசியலணியை சமூதாயத்தின் தலைமைப் பாத்திரத்துக்குக் கொணர்வதை யும் தனது தொலைதூரக் குறிக்கோளாகக் கொண்டது.
 “அரசியலதிகாரம் துப்பாக்கிக் குளலில் இருந்தே பிறக்கிறது” என்ற நம்பிக்கையுடன், அக்காலப்பகுதியில் இரண்டாவது இடதுசாரிப் பாரம்பரியத்தில் இருந்து தோன்றிய மூன்று குளுக்களில் மூன்றாவது குளுவே ‘NLFTE’-யாகும். முதற் குளு JVP. இது நடந்தது 1969இல். இரண்டாவது குளு கீழைக்காற்று. இது நடந்தது 1970இல். இக்குளு தடைசெய்யப்பட்டதாலும், இதன் தலைமைத் தோழர் காமினி யாப்பா, சிறைபிடிக்கப்பட்டதாலும், உள் முரண்பாடுகளின் காரணத்தாலும் இக்குளு சிதைவு நிலையை அடைந்தது. இருந்தாலும் PRoVA என்ற பெயரில் இது தன்னை மீழமைத்துக்கொள்ள முற்பட்டது, ஆனால் பலன் கிடைக்கவில்லை. இலங்கைத் தேசியம் பற்றிய நவ-நவீனக் கருத்துக் கட்டுமானத்திலிருந்தும், சாதியத்துக்கும் தமிழ் தேசியத்துக்கும் இடையேயான உறவைப்பற்றிய நவ நவீனக் கருத்துக் கட்டுமானத்தில் இருந்தும் முழுமையாக விடுபடாதிருந்ததே இதற்கான காரணங்களாகும்.

‘NLFT’யின் வரவும் கீழைக்காற்றின் சிதைவும் ஒரேகாலப் பகுதியில் நடந்தன. சில வருடங்களில் ‘NLFT’யும் சிதைந்துவிட்டதாகவே கருதுகிறேன். ஆனால், ‘NLFT’யின் பலமான வளர்திசைக் கருத்துக்கட்டுமானங்களை அடித்தளமாகக் கொண்டு PLFT எனும் குளு தோற்றம்பெற்றது. இவற்றுள், முதல் குளுவான JVP, இலங்கையின் சிங்கள-பௌத்த பேரகங்காரவாத அரசியல் கட்டுமானத்தில் அழியாத இடம் பிடிப்பதில் வெற்றி பெற்றுவிட்டது.

இவ்விதம் பல குளுக்கள் தோன்றினாலும் இரண்டாவது தலைமுறையினரின் தாய்க்கட்சி இறந்துவிடவுமில்லை, சிதைந்து அழிந்துவிடவுமில்லை. இறுதிக் காலத்தில் தொழர் சண் கட்சியின் கடந்தகாலத் தவறுகள்பற்றி விமர்சனமும் சுயவிமர்சனமும் செய்துள்ளார். கட்சியைச் சீர்செய்யும் முயற்சியிலும் ஈடுபட்டார். அவரின் மறைவுக்குப்பின்னர் கட்சிக்குள்நடந்த பலகட்ட கருத்தாய்வுகளின் பின்னர் கட்சித்தலைமை தோழர் சண்ணை மகத்தான ஆசானாகப் பிரகடனப்படுத்தியது. இந்திய கம்யூனிஸ்ட் குளுக்களின்(மா-ஓ) வளர்ச்சியிலும் ஒன்றிணைப்பிலும் அவர்வகித்த பங்கினை வெளிக்கொணர்ந்தது. தோழர் சண்ணின் முயற்சியால் அக்கட்சி இன்று தெற்காசிய கம்யூனிஸ்ட் ஒன்றியத்தில் உறுப்பினராகவுள்ளது. இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி (மா-ஓ) எனும் பெயரில் செயல்படும் அக்கட்சியினர் தற்போது JVPக்கும், ஸ்ரீ லங்கா அரசிற்கும் எதிரான போராட்ட ங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். விடுதலைப்புலிகள் இயக்கத்தையும், அதன் போராட்டங்களையும் ஆதரித்தா ர்கள். ஆயிரம் பூக்கள் எனும் பெயரில் ஒரு சஞ்சிகையும் நடத்திவருகிறார்கள். அதன் முதலாவது இதழ் மார்ச்-2008இல் வெளியானது. இவ் இதழ் கட்சியின் அறிக்கையாகவும் திகழ்கிறது. தெற்காசிய மாஓயிஸ்டுகளின் கருத்துக்களைப் பிரதிபலிக்கும் KASANA எனும் இணைய இதழில் அவர்களைச் சந்திக்கலாம்.

JVP, ‘NLFT’, கீழைக்காற்று, CPC(Mao) ஆகிய அமைப்புகள் ஆயுதப்போராட்டத்தை ஏற்றுக்கொள்வதில் ஒத்தகருத்து க்களுடன் இருந்தாலும், எவ்வித ஆயுதப் போராட்டம் எனபதில் இவர்களிடையே மாறுபட்ட கருத்துக்கள் இருந்தன. JVP முன்னணிப்படை யுத்தமுறையையே ஏற்றுக்கொண்டது. ‘NLFT’ ஆரம்பத்தில் மக்கள் யுத்த முறையை ஏற்றுக் கொண்டிருந்தாலும், காலப்போக்கில் அக்கருத்தை மாற்றிக் கொண்டது போல் தெரிகிறது. மக்கள் யுத்தமுறையை வலியுறுத்திய PLFT யின் தோற்றத்திற்கு இம் முரண்பாடும் ஒரு காரணமென அவ்வமைபின் 1984ஆம் ஆண்டின் அரசியல் அறிக்கை யின்மூலம் அறியக்கூடியதாகவுள்ளது. வேறு ஆதாரங்கள் கிடைக்கவில்லை. கீழைக்காற்று இயக்கம் மக்கள் யுத்த முறையையே ஏற்றுக்கொண்டது என்பதையும் அதேவேளை முன்னணிப்      படைமுறை பிற்போக்கானதென முற்றிலும் நிராகரிக்கவில்லை என்பதையும் PRoVAவின் நவசகாப்தம் முதலாவது இதழில் வெளியான கட்டுரை வாயிலாக அறியக்கூடியதாய் உள்ளது. ஆனால், முன்னணிப்படை முறையையும் கூடவே பின்பற்றியிருந்தால் சிதவைத் தடுத்திருக்கலாம் என்பதே கீழைக் காற்றின் சிலரின் கருத்தாக இருந்தது.

 கம்யூனிஸ்ட் கட்சியால் நடத்தப்பட்ட தீண்டாமை ஒழிப்புப் போராட்டம் ஆயுதப் போராட்டமாகவே அமைந்திருந்தது. மக்கள்யுத்தமுறையின் ஆரம்பவடிவம் எனக்கருதலாம். மக்கள்யுத்தமுறைக்கு ஒரு எடுத்துக்கா ட்டாகவும் கருதலாம். CPC(Mao) மக்கள்யுத்த முறையையே தமது யுத்த முறையாக ஏற்றுக் கொண்டுள்ளனர். ஆனால், LTTEஆல் பின்பற்றப்பட்டுவந்த முன்னணிப் படையுத்த முறையை ஆதரிக்கின்றனர். இது ஒரு முரணாகத் தெரியலாம். அது முன்பின் முரணானதல்ல. கியூபாவில் பெடல் கஸ்ரோ பின்பற்றியது முன்னணி ப்படை யுத்தமுறையே என்ற கருத்தும் நிலவுகிறது. இது கற்கப்படவேண்டியதொரு பிரச்சனையாகும்.

முன்னணிப்படை யுத்தமுறையா?(மு.ப.யு.ம) மக்கள் யுத்த முறையா?(ம.யு.மு) என்பது சுத்த இராணுவவிவகார மாகவே புரிந்துகொள்ளப்பட்டுள்ளது. அது உண்மை யல்ல. யுத்தமுறையானது ஒரு  அரசியல் விவகார மாகும். சீனாவையும், கியூபாவையும் மனதிலிருந்து அகற்றிவைத்துவிட்டு 1940க்குப் பின்பான தெற்காசியசூளலை மனதிலிருத்தி இவ்விருமுறைகளை யும் விவாதிப்போம். மு.ப.யு.மு ஆயுதத்தை முதன்மைப்படுத்தி அரசியலை ஆயுதத்தின் அடிமையாக் குகின்றாது. மக்கள் யுத்தமுறை ஆயுதத்தின் முக்கியத்துவத்தை மறுக்கவில்லை, “அரசியல் அதிகாரம் துப்பாக்கிக் குளலிருந்துதான பிறக்கிறதுஎனற அரசியல் அரிச்சுவடியையும்  மறுக்கவில்லை. ஆனால் துப்பாக்கி முனை அரசியலை ஆளக்கூடாதென்கிறது. சமுதாய த்தில் ஆயுதத்திற்கு வளங்கப்பட்டுள்ள தலைமைப் பாத்திரத்தையும், ஆதிக்க நிலையையும் இல்லாதொழிப்ப தையும், உணர்வுபூர்வமாக அணிதிரண்டவெகுஜன அரசியலணியை சமூதாயத்தின் தலைமைப் பாத்திரத்துக்குக் கொணர்வதையும் தனது தொலைதூர குறிக்கோளாகக் கொண்டது.

மு.ப.யு.முறையோ: இதற்கு மாறாக அரசியல் துப்பாக்கி முனைக்குக் கட்டுப்பட்டது என்கிறது. மக்களை தலைமைவளிபாடுடைய, கட்சி/இயக்க வழிபாடுடைய மந்தைக் கூட்டங்களாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டது. ம.யு.மு-யோ ஆயுதங்களை மக்களின் நண்பர்களாக்குவதை நோக்கமாகக்கொண்டது. மு.ப.யு.முறையோ மக்கள் ஆயுதங்களைக்கண்டு அஞ்சிநடுங்குபவர்களாக இருக்கவேண்டுமென்பதை நோக்கமாகக்கொண்டது. 
மக்கள் யுத்த முறையின் குறிக்கோள் சமூகப் புரட்சியாகும். நிலவும் சமூகக்கட்டுமானத்தில் காணப்படும் வர்க்க அதிகாரத்தையும், வர்க்க உறவுகளையும், சமூக-குழும உறவுகளையும்(சாதிய, பாலின உறவுகள்) தூக்கியெறிந்து விட்டு அவ்விடத்தில் உழைக்கும் மக்களின் வர்க்க அதிகாரத்தையும், அம்மக்களின் நலனுக்குகந்த வர்க்க உறவுகளையும், சமூக குழும உறவுகளையும்  நிறுவு வதை நோக்கமாகக் கொண்டது. 
மு.ப.யு.மு­ற்யைளர்களோ நிலவும் சமூகக் கட்டுமான த்தில் எந்த அடிப்படைமாற்றத்தையும் செய்வதை நோக்கமாகக் கொண்டவர்களல்ல. ஆளப்படும் வர்க்கம் தொடர்ந்து ஆளப்படு-வதற்குப் பொருத்தமானதாக முன்கூறிய அனைத்தையும் சீர்செய்வதே அவர்களின் குறிக்கோளாகும்.

ம.யு.முயா? மு.ப.யு.முயா? என்பது ஒரு இராணுவ விவகாரமல்ல, இது ஆயுதப் பயன்பாடு தொடர்பான அரசியல் விவகாரமே என்பதற்கு இவ்வளவு எடுத்துக் காட்டுகளும் போதும். ஆகவே மக்கள் யுத்தவாதிகள், அவசியப்படில் முன்னணிப் படை யுத்தநடவடிக்கை களிலும் ஈடுபடலாம். அது அவர்களால் முடியும். இது பற்றிய விவாதத்தை தனித்த தலைப்பின் கீழ் தொடர்வோம்.
2வது நெருக்கடி:-
தேசிய இனச் சிக்கலிலான
 நவ-நவீன திரிபுவாதம்

இலங்கை இடதுசாரிகளின் 2வது தலைமுறயினரின்(மா-ஓ பிரிவினரின்) வாரிசுகளான இவ்நான்கு அமைப்புகள்பற்றிய ஆய்வுக்குரிய அடுத்தவிடயம், இலங்கையின் தேசியஇனச் சிக்கல்பற்றிய Ethnic complexity இவர்களின் கருத்தியல் நிலைப்பாடாகும்.
இரண்டாம் தலைமுறை இடதுசாரிகளின் வாரிசுகளில் இரு பிரிவினர் இலங்கையில் உள்ளனர். 
                     முதலாவது பிரிவு, தெற்காசியப் பிராந்திய உடன் புரட்சி சோஷலிசப் புரட்சி எனக் கூறும்-ட்ரொக்ஸிய பிரிவு.                                                                                இரண்டாவது பிரிவு- தெற்காசிய நாடுகளின் உடனடி சமூகப்புரட்சி, புதிய ஜனநாயகப் புரட்சி எனக் கூறும் மாஓபிரிவினர்.

முன்னர் குறிப்பிட்டப்பட்ட நால்வரும் இரண்டாம் தலைமுறையின் மாஓபிரிவைச் சேர்ந்தவர்களேயாகும். இப்பிரிவை இலங்கையில் அறிமுகம் செய்துவைத்த வரும் அதை குறிப்பிட்டதூரம்வரை வளர்த்தவரும் தோழர் சண்ணேயாகும்.                                சீனக் கம்யூனிஸ்ட் கட்சிக்கும், ருஷ்ய கம்யூனிஸ்ட் கட்சிக்கும் இடையேயான உலக- ளாவிய சித்தாந்தப் போராட்டம், இலங்கையிலும் நடத்தப்பட்டது. சீனசார்பு அணியினர் இதை நவீன திரிபுவாதத்திற்கு எதிரான போராட்டம் என அடையாளப் படுத்தினர். பீட்டர் கெனுமன் தலைமையிலான கம்யூனிஸ்ட் கட்சியே நவீன திரிபுவாதத்தின் அரசியல் தலைமை அமைப்பாக இனங்காட்டப்பட்டது. நவீன திரிபுவாதத்திற்கு எதிரான கருத்துக்கட்டுமானந்தான் இலங்கையின் மாஓயிசம் எனப் பலராலும் கருதப்பட்டது.
ஆனால், இலங்கையில் மாஓயிஸக் கருத்துக் கட்டுமானம் ஒன்று முறையாகத் தோற்றுவிக்கப்பட வில்லை. நவீன திரிபுவாதத்திற்கெதிரான போராட்ட மென்ற பெயரில் நடந்ததுவோ நவீன திரிபுவாதிகளென அடையாளப்படுத்தப்பட்ட தலைவர்களை அரசியல்ரீதியா கவும், தொழிற்சங்கரீதியாகவும் தனிமைப்படுத்து வதற்கான போராட்டங்களாகவே இருந்தன. அதாவது, நவீன திரிபுவாதத்திற்கு எதிரான தத்துவார்த்தப் போராட்டம் கட்சி அரசியல் போராட்டமாகத் தரம்தாழ்ந்துபோனது.                                 ஆயுதப் போராட்டத்தை ஏற்றுக்கொண்ட குழுக்களில் JVP தேசிய இனவாத அமைப்பாக மாறியதால், அவ் அமைப்பை ஒதுக்கிவிட்டு பிற மூன்று அமைப்புகளை மாத்திரம் கணக்கில் எடுத்துக் கொள்வோம். இம் மூன்று அமைப்புகளும் நவீன திரிபுவாதத்திற்கெதிரான போராட்டத்தைத் தொடர்ந்தன. இதில் தோழர் விஷ்வானந்த தேவருக்கு ஒரு பெரும் பங்குண்டு.
 பிரித்தானிய எதிர்ப்பு நடவடிக்கைகளின் போது இலங்கைத் தேசியமென தவறாகப்புரிந்து கொண்டிருந்த நாட்டுப்பற்று வாதமும் (patriotism) வளர்ந்தது, அதனுடன் கூடவே சிங்கள-பௌத்த இனக்குளும தேசியமும்-Sinhala-Buddhist ethno-nationalism) ஓங்கி வளர்ந்தது. இலங்கை நாட்டுப்பற்றுவாதத்தை வளர்ப்பதில் முதற் தலைமுறை இடதுசாரிகள் கணிசமான பங்கினை வகித்தார்கள். ஆனால், அவர்களின் முயற்சிகள் அவர்கள் காலத்திலேயே தோல்விகண்டன. அவர்களின் தோல்விக்கு அவர்களும் ஒரு காரணமாக இருந்துள்ள னர். எவ்விதம் என்பதை நோக்குவோம்.

பிரித்தானியரால் உருவாக்கப்பட்ட நாடுகளை தேசமெனக் கருதியதும், அந்நாட்டரசுகளை ‘தேச அரசுகள்எனவிளங்கிக் கொண்டதுவுந்தான் நவீன திரிபுவாதமாகும். பிரித்தானியர்கள் தெற்காசியப் பிராந்தியத்திலிருந்து மகிழ்ச்சியுடன் வழியனுப்பிவைக்க ப்பட்டனர். அவர்கள் விடைபெற்றுச் செல்லும்போது, குலங்கள்/சமூகக் குளுமங்கள் தேசிய ஜனநாயக உரிமைகள் உடையவர்களாக மாறும் தேசிய இன உருவாக்கம்(Ethno-Nationalist Group) எனும் சமூக நிகழ்வுப்போக்கு இப்பிராந்தியத்தில் எந்தவொரு இடத்திலேனும் முடிவடைந் திருக்கவில்லை. அதாவது வளர்ந்துவந்த குலங்கள்/சமூகக் குளுமங்கள் அனைத்தும் இனக்குளும தேசியங்கள் (ethno-nationalism) என்ற கட்டத்தைக்கூட எட்டாதநிலையே இருந்தது. இன்றும் அந் நிலையே தொடர்கிறது. யதார்த்த நிலை என்னவென்றால் சில குலங்கள் இன்றுவரை குலங்கள் என்ற தேசிய் குழும நிலைக்குக்கூட வளர அனுமதிக்க ப்படவில்லை. ஒடுக்கப்பட்ட இவர்களை “பழங்குடியினர்என நாகரிகமாக அழைத்துக் கொள்கிறோம். 

தேசம், தேசியம், தேச அரசு ஆகியன பற்றிய யதார்த்தத்திற்கு பொருந்திவராத, உண்மைக்குப் புறம்பான கருத்துக்கட்டுமானந்தான் நவீன திரிபுவாதமாகும்.

இரண்டாம் தலைமுறை இடதுசாரிகள் தலையெடுத்து ஒரு சிலவருடங்களிலேயே  இலங்கை அரசு முற்றுமுழு சிங்கள-பௌத்த பேரகங்கார இனக்குழும தேச அரசாக -Sinhala-Buddhist ethno-nationalist chauvinist state) மாறியிருந்தது. இதன் பெயரே ஸ்ரீ லங்கா அரசு. நவீன திரிபுவாதிகளுக்கு எதிரான மார்க்ஸியப் போராளிகள் இதைக் கண்டுகொள்ளவேயில்லை. தேச உருவாக்கம் என்ற சமூக நிகழ்வுப் போக்கு முடிவடைந்துவிட்டது என்றே இவர்களும் கருதினார்கள். இனக்குழும பேரகங்காரவாத தேசஅரசை பல்-தேச அரசாக(multi-nation state) மாற்ற வரும்படி அறைகூவல் விடுத்தார்கள். முதலாளித்துவ அரசை சம்தர்ம அரசாக ஆக்கலாம் என வாதிட்டவர்களல்லவா? இதனால் நவீன திரிபுவாதிக ளுக்கு எதிரான போராளிகள் தம்மட்டில்தாமே நவீன திரிபுவாதிகளாக இருந்தார்கள். (கீழைக்காற்று இவர்களை நவ-நவீன திரிபுவாதிகள் என அழைத்தது. இந்தோநேசிய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் ஐடிர்ரையும், சண்ணையும் ஒப்பிட்டுக் காட்டி விமர்சித்தார்கள்). இது தெற்காசியா முழுமைக்கும் பொருந்தும்.

மார்க்ஸியர்களின் வேலைத்திட்டத்தில், தமிழீழத்து க்கான போராட்டத்தையும் இணைத்ததானது நவ மற்றும் நவ-நவீன திரிபுவாதத்திற்கு எதிரான மார்க்ஸிஸத்தின் வெற்றியாகும். இந்த முறையில் இலங்கையின் மார்க்ஸிஸ-லெனினிஸ-மாஓயிஸ வரலாற்றில் தோழர் விஷ்வா ஒரு மைல்கல்லாக அடையாளப்படுத்தப் படவேண்டும். நாட்டரசு-தேசஅரசு; நாட்டுப்பற்று-தேசப்பற்று பற்றிய விவகாரங்கள் இன்னும் விரிவாக விவாதிக்கப்படவேண்டும். தெற்காசிய சூளலில் இவை இரண்டையும் ஒன்றையொன்று நிராகரிக்காதமுறையில், ஒன்றையொன்று அடிமைப்படுத்தாத முறையில் எவ்விதம் இணைத்துச் செல்வது என்பதுபற்றி விவாதிக்கவேண்டும். ஓர் நாடு ஈர் தேசம் எனும் கோட்பாடு மேலும் ஆழமாகப் புரிந்து கொள்ளவேண்டும். 

மூன்றாவது நெருக்கடி:-
இயக்க எதேச்சதிகாரமா? 
உள்நாட்டு யுத்தமா?

தமிழீழத் தற்காப்பு யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் அதேவேளையில் தமிழீழத்துள் ஒரு உள்நாட்டு யுத்தமும் நடைமுறையில் உள்ளது. இவ் உள்நாட்டு யுத்தம் அரசியல், இராணுவ, பொருளாதார ஆகிய முத்தளங்களிலும் நடைபெற்றுவரு கிறது. அவற்றை எதிர்கொள்ளத் தயாராக இருக்கவேண்டும். மலைத்துநிற்பதில் எந்த ப்பலனும் இல்லை.

தமிழீழ விடுதலைப் போராட்டக் களத்தினில் இயக்க அடிபாடுகளும், அமைப்புகளுக்கிடையேயும், அமைப்புக ளுக்குள்ளேயும் நடைபெறும் களையெடுப்புகளும், கொலைகளும்; அமைப்புகளால் மேற்கொள்ளப்படும் பிற சுத்திகரிப்புக் கொலை களும்  சர்வசாதரணவிடயங்களாக இருந்தன. இது மனிதாபிமானமற்ற செயல், பாசிஸச் செயல், அடாவாடித்தனம், எதேச்சதிகாரப் போக்கு எனப் பலராலும் கண்டிக்கப்பட்டுவந்தது. இன்றுவரை கண்டிக்கப்பட்டும் வருகிறது. இவ்விவகாரங்களை மனிதாபிமான நோக்குநிலையிலிருந்து அணுகுபவர்களே அதிகளவினராக உள்ளனர். குறிப்பாக இதற்காக, LTTEஐக் கண்டிப்பதில் நாட்டமுள்ளவர்களே அதிகமானவர்களாக உள்ளனர். ஸ்ரீ லங்கா அரசுடனோ இந்திய அரசுடனோ அல்லது ஐரோப்பிய அரசுகளுடனோ தொடர்புவைத்தி ருந்த பிரதான ஐந்து அமைப்புகளில் எந்த அமைப்பு இவ்விதச் செயல்களில் ஈடுபடாதிருந்துள்ளது? இவ் ஐந்து அமைப்புகளும் முன்னணிப்படை யுத்தமுறைவாதிகள் என்பதை நினைவில் கொள்ளவேண்டும். இவ் இயக்கங்களின் வழித்தோன்றல்களாக உருவான சிற்சிறு அமைப்புகள் கூட இவ்வித நடவடிக்கைகளில் கைதேர்ந்தவர்களாகவே இருந்துள்ளனர். ஆகவே அனைத்து இயக்கங்களையும் ஒட்டுமொத்தமாக சாடுவதில் பலர் தயங்குவது ஏன்? குறிப்பிட்ட சில இயக்கங்களை மட்டும் குறிவைப்பது ஏன்? அதிலும் LTTEஐ மட்டும் தனியாகக் குறிப்பிடுவது ஏன்? அவ்விதமானால் இதில் எந்த அமைப்-பையாவது தமிழீழத் தேசத்துரோக அமைப்பென்றோ, தமிழீழத்தில் இருந்து முற்றாக அழித்தொழிக்கப்படவேண்டிய அமைப்பென்றோ சொல்பவர்கள் எவராவது உள்ளார்க ளா? தோழர் விஸ்வாவைக் கொலைசெய்ததாகக் கருதப்படும் LTTE ஐத் தவிர வேறெவரும் அவ்விதம் கூறியுள்ளதாகத் தெரியவில்லை. அனைவரும் செயலளவில் கொலைகாரர்களாக நடந்திருந்தாலும், பேச்சளவில் சகோதர அமைப்புகளாக ‘நடந்துள்ளார்கள். எதேச்சதிகார மற்றும் அடாவடித்தனச் செயல்களுடன் எமது இருத்தலையும் “சகோதரத்துவத்தையும் தொடர்வோமென பிற இயக்கங்கள் விரும்ப, இவை இரண்டையும் ஒழிப்பதானால் அனைத்து இயக்க ங்களையும் ஒழித்துக்கட்டுவதே ஒரேவழியென LTTE கருதுகிறதென இதை அரத்தப்படுத்தலாமா? நடைமுறை-யிலும் குழப்பம் தத்துவார்த்தத்திலும் குழப்பம்.

 ‘NLFTE’ தனது முதலாவது அரசியல் அறிக்கையில் இவ்வித நிலையின் இருத்தலுக்கான தத்துவார்த்த காரணத்தையும் அதற்கான தீர்வுக்கான பொது அரசியல் வளிகாட்டலையும் முன்வைக்கின்றது. தமிழீழத் தற்காப்பு யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் அதேவேளையில் தமிழீழத்துள் ஒரு உள்நாட்டு யுத்தமும் நடைமுறையில் உள்ளது. இவ் உள்நாட்டு யுத்தம் அரசியல், இராணுவ, பொருளாதார ஆகிய முத்தளங்கலிலும் நடைபெற்றுவருகிறது. அவற்றை எதிர்கொள்ளத் தயாராகஇருக்கவேண்டும். மலைத்து நிற்பதில் எந்தப்பலனும் இல்லை. இக்கூற்றில் ஆழ்ந்தபல உண்மைகள் உள்ளன, இது விரிவாக விவாதிக்கப்படவேண்டிய ஒன்றாகும்.

முன்னணிப்படை யுத்தவாதிகள் அனைவருமே ஆயுத மோகிகளேயாகும். ஆயுத மோகத்தின் அடுத்தபக்கம் பிறர்கையில்இருக்கும் ஆயுதங்களை ஒட்டிய அச்சமாகும். அச்சுறுத்துவதுவும், அஞ்சுவதுவும் முன்னணிப்படை யுத்தவாதம் எனும் நாணயத்தின் இரு பக்கங்களாகும்.

4வது நெருக்கடி:-
புதிய ஜனநாயகப் புரட்சியா? 
சோஷலிஸப்புரட்சியா?

கருத்தியல் கட்டுமானத்தில் புதிய ஜனநாயகப் புரட்சியா? சோஷலிஸப் புரட்சியா எனும் தர்க்கம் நாள்பட்டுப்போன தொன்றாகிவிட்டது. இதுபற்றிய தர்க்கம் இனியும் வேண்டுமாவெனக் கேடகப்படலாம். நியாயமான கேள்வி. தமது திட்டம் இதுதானென ஊரறிய உலகறிய முழங்கிவிட்டு, நிலவும் கட்டுமானத்தைப் பாதுகாத்துக் கொண்டிருப்பவர்களுக்கு இது பற்றிய தர்க்கம் அவசியமில்லாத தொன்றுதான். தமிழீழப் போராட்ட த்தில் ஈடுபடும் மக்களுக்கும், பல்வேறு குழுமங்க ளுக்கும், மார்க்ஸியர்களுக்கும் இது அவசியமானதொரு தர்க்கமாகவுள்ளது. விடுதலைப் போராட்டமானது ஸ்ரீ லங்கா இராணுவத்துக்கு எதிரான இராணுவ நடவடி க்கையாக மட்டும் இருக்கமுடியாது. போராட்டத்தின் போதே பல்வேறுவிதமான பொருளாதார நடவடிக்கை களில் ஈடுபடவேண்டியது கட்டாயமாகிறது. பொருளா தார அழிவுகளை எதிர்கொள்ளல், பொருளாதார முற்றுகையை முறியடித்தல், பொருளாதாரப் போதாமையை நிறைவுசெய்தல், பொருளாதாரவிருத்தி க்கு அவசியமான போர்க்காலப் பொருளாதார சீர்திருத்தங்களை மேற்கொள்ளல், வளப்பகிர்வில் தொடர்சியான மாற்றங்களை உருவாக்கல், இவை அனைத்தையும் நடத்திச்செவதற்கு உகந்த முறையி லான  நிறுவனக் கட்டுமானங்களை உருவாக்கல் ஆகியவற்றைக் குறிப்பிடலாம். இவை தவிர நிலைகுலைந்துள்ள சிவில் ஒழுங்குகளை சரிசெயதல், அவற்றைப் பாதுகாப்பதாற்கான சிவில் கட்டுமானங்க ளைப் பராமாரித்தல், வெகுஜன பாதுகாப்புக்கு அவசிய மான கட்டுமானங்களைப் பேணல், போர்க்கால சூளலுக்கேற்ற முறையிலான பண்பாட்டுக்கூறுகளையும், சமூக நியமங்களையும், விழுமியங்களையும் உருவாக்கல் ஆகிய கடமைகளையும் இங்கு குறிப்பிட லாம்.  ஆகவே, புதிய ஜனநாயகப் புரட்சியென முடிவெடு த்துவிட்டு இராணுவத்தை வெல்லும் வரை பொறுத்திருப்போருக்கு இது தர்க்கத்துக்குரிய ஒரு விடயமல்ல. ஆனால், தமீழீழ போர்களத்தில் இருக்கும் சமூகமாற்ற விரும்பிகளுக்கும், போர்ப் பாதிப்புகளுக்கு உள்ளாகும் மக்களுக்கும் இது பிரதானது. தமது ஒவ்வொரு நடவடிக்கைகளும் புதிய ஜனநாயகக் கோட்பாட்டிற்கொப்ப அமைகிறதா என்பதையிட்டு அவர்கள் மிகவும் விழிப்பாக இருக்கவேண்டும். இவ்விழி ப்புணர்வு அவர்களின் நாளாந்தப் பிரச்சனையாகிறது. NLFTEயின் முதலாவது அரசியல றிக்கை இதுபற்றி தனியாக எதுவும் சொல்லாவிட்டாலும் இது பற்றிய புரிதல் இயக்கத்துக்கு உண்டென்பதை அவ்வறிக்கை வெளிப்படுத்துகிறது.

நவீன திரிபுவாதிகளும், நவ-நவீன திரிபுவாதிகளும் (நாட்டரசுகளை தேசிய அரசுகளாக அடையாள ப்படுத்திவருபவர்கள்) அரைக்காலனியல் தேசங்களிலான புதிய ஜனநாயகப் புரட்சி பற்றித்தான் பேசினார்கள். இல்லாததொரு தேசத்தில் புதியஜனநாயகப் புரட்சிபற்றிப் பேசுகிறார்கள். இது தேச உருவாக்கத்திற்கான புரட்சியை மறைப்பதற்கானதோர் அரசியல் சதியாகும். ஆனால், NLFTE, நாட்டரசுகளால் ஏவிவிடப்படும் மறு காலனியல் அடக்குமுறைக்கு எதிரான போராட்டங்களின் ஊடாக தேசங்களாக உருவாகிவரும் தேசிய இனக் குழுமங்களின் புதிய ஜனநாயகப் புரட்சிபற்றிப் பேசுகிறது. தேச உருவாக்கத்திற்கான தேச விடுதலைப் போராட்டத்தையும் புதிய ஜனநாயகப் புரட்சியையும் எவ்விதம் ஒன்றிணைப்பது என்பதுபற்றிப் பேசுகிறது. அதாவது ஒரே நேரத்தில் இரு புரட்சிகளையும் பற்றிப் பேசுகிறது. இரு புரட்சிகளின் அவ்சியத்தையும் வலியுறுத்துகிறது. இதே தலைப்பின் கீழ் இதுபற்றி விரிவாக ஆராய்வோம்.

முடிவாக தெற்காசிய நிலமைக்குப் பொருத்தப்பாடான முறையில் மார்க்ஸிச ஆய்வுமுறையை பிரயோகிப்பதில் விசுவின் பங்கு மகத்தானது. ஆனால், மரணத்தை வென்ற அவர் இன்னமும் வெற்றிபெறவில்லை. அதை வெற்றிக்கிட்டுச் செல்வதற்கான முயற்சிகளை நாம்தான் தொடரவேண்டும்.


__________________________________________________________________________________________________________________________________________________________________________________________
முடித்தது 16/08/2007






In Defense of Communism: KKE statement on the developments in Afghanistan

In Defense of Communism: KKE statement on the developments in Afghanistan : Concerning the developments in Afghanistan and the resurgence o...