Monday 19 August 2019

காந்தியின் கொலை இரு கோட்பாடுகளின் மோதல்...!


இந்துக்களுக்கென்று ஒருநாடு வேண்டும்
“இந்துக்களுக்கென்று ஒருநாடு வேண்டும்; இந்துக்களாகிய நாம் நமக்கென்று ஒரு நாட்டை கொண்டிருக்க வேண்டும்; அந்த இந்துக்களுக்கான நாட்டை உருவாக்க ஒரே வழி வன்முறையும், பழிக்குப் பழிவாங்குவதலும், ரத்த அபிஷேகமும் ” என்று சொன்னார் சாவர்க்கர். “ இது அநீதியை ஒழிக்க இயற்கை வழங்கியுள்ள கருவிகள் ” என்று மேலும் சொன்னார். சாவர்க்கர் விரும்பிய இந்து ராஷ்டிராவை உருவாக்க ‘இந்துத்துவா ’ என்ற நூலை எழுதினார்.
இந்த நூலைப்படித்து பெரிதும் உத்வேகம் அடைந்த டாக்டர் கேசவ பலிராம் ஹெட்கேவர் உருவாக்கிய அமைப்புதான் ஆர்.எஸ்.எஸ் என்று அழைக்கப்படுகிற ‘ ராஷ்ட்ரீய சுயம்சேவக் சங்’ என்கிற இந்து மதவெறி அமைப்பு. இந்த அமைப்பிற்கு சாவர்க்கர் பெரிதும் ஆசிவழங்கினார். இந்த அமைப்பின் மூலம் சாவர்க்கரும், கோட்சேயும் மிகவும் நெருங்கிப் பழகினார்கள்; நெருக்கமான தொடர்பிலும் இருந்தார்கள்.
இவர்கள் தான் 1947ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 15ஆம் நாள் அன்று, தேசமே உற்சாகமாக சுதந்திர தினத்தைக் கொண்டாடிக் கொண்டிருந்தபோது, புனாவில் 500 பேர் ஒன்று திரண்டு நாஜிகளின் ‘ ஸ்வஸ்திக் ’ சின்னம் பொறிக்கப்பட்ட கொடியை ஏற்றிக் கொண்டிருந்தார்கள். ‘ஸ்வஸ்திக் ’ சின்னம் என்பது ஆரியர்களின் சின்னம். அதற்கு வணக்கம் செலுத்தவே அங்கு கூடியிருந்தார்கள். அந்தக் கூட்டத்தில் கோட்சே பேசினான், “ இந்திய பிரிவினையானது கோடிக்கணக்கான இந்தியர்களுக்கு பயங்கரமான துன்பங்களைத் தந்துள்ள பேரழிவு; இதைச் செய்தது காங்கிரஸ் கட்சி; அதிலும் குறிப்பாக காங்கிரஸ் கட்சியின் தலைவர் காந்தி ”. இப்படி பேசிமுடித்ததும் கோட்சே மற்றவர்களுடன் சேர்ந்து கொடிக்கு எதிரே நின்று, நெஞ்சில் ஒரு கையை வைத்து வணக்கம் செலுத்தினான். இந்த பழக்கத்தைத்தான் ஆர்.எஸ்.எஸ் காரர்கள் இப்போதும் பின்பற்றுகிறார்கள்.
கோட்சேயின் கொதிப்பு
கோட்சே ஆசிரியராக இருந்து நடத்தி வந்த ‘ இந்து ராஷ்டிரா ’ பத்திரிகையின் பங்குதாரர்கள் கூட்டத்தில் கோட்சே பேசினான், “ தனது பிணத்தின் மீதுதான் இந்தியாவை பிளக்க முடியுமென்று காந்தி சொன்னார்; இந்தியா பிளக்கப்பட்டுவிட்டது; ஆனால், காந்தி இன்றும் உயிரோடிருக்கிறார்!” காந்தியை தீர்த்துக் கட்ட வேண்டுமென்று கோட்சே தன் ஆழ்மனதில் தீர்மானித்து விட்டான். இதையே பின்னாளில் நிகழ்த்திக் காட்டினான்.
ஒன்றுபட்ட இந்தியதேசம் பாகிஸ்தான் என்றும் இந்தியா என்றும் பிரிந்து போனதற்கு காந்தியே காரணம் என இந்து மத வெறியர்கள் சொல்கிறார்கள். இது உண்மையே அல்ல. பிரிவினை சிந்தனையை கோட்பாட்டு ரீதியில் விதைத்தவர்கள் இந்துமத வெறியர்களே. “ இந்துக்கள் என்பவர்கள் தனிதேசம்; இதில் இஸ்லாமியர்களுக்கு இடமில்லை ” என்று முதலில் சொன்னவர் சாவர்க்கரே. அவரின் ‘ இந்துத்துவா ’ என்ற நூல் இதற்கு சாட்சியாக உள்ளது.
இந்து மதவெறியர்கள் ‘ இந்துஸ்தான் ’ என்று சொல்ல, இஸ்லாமிய மதவெறியர்கள் பாகிஸ்தான் என்று சொன்னார்கள். இந்த பிரிவினை சிந்தனையை ஆங்கிலேய ஏகாதிபத்தியம் மிகச்சரியாக பயன்படுத்திக் கொண்டது. வலுவான இந்தியா, என்றும் தங்களுக்கு இடையூறு செய்யும் என்று கணக்குப்போட்டு, கடைசி வைஸ்ராய் மவுண்ட்பேட்டன் மிகத் திறமையாக இந்தியாவை பிரித்தார். 1947 மார்ச் 8 அன்று நடைபெற்ற காங்கிரஸ் காரியக்கமிட்டிக் கூட்டத்தில் சர்தார் படேல் ஒரு தீர்மானத்தை முன்வைத்தார்.
பஞ்சாபை ‘ முஸ்லிம் பஞ்சாப் ’ என்றும், ‘ இந்து பஞ்சாப் ’ என்றும் பிரித்து தனிநாடாக அங்கீகரித்துவிடலாம் என்றது அந்த தீர்மானம். இந்த தீர்மானம் ஏகமனதாக ஏற்கப்பட்டது. அந்த சமயத்தில் பீகாரில் இருந்த காந்தி பத்திரிகைகள் மூலம் இச்செய்தியை அறிந்து அதிர்ச்சியடைந்தார். இது பட்டேலின் வேலையாகத்தான் இருக்கும் என எண்ணி, அவருக்கு கோபமாக ஒரு கடிதம் எழுதினார் காந்தி.
துணையாய் இருந்த தாகூரின் பாட்டு
தேசப்பிரிவினையை மகாத்மாகாந்தி கடைசிவரை ஏற்கவே இல்லை. அதுமட்டுமல்ல, தேசப்பிரிவினையை கடைசிவரை ஏற்காத காங்கிரஸ் தலைவர் மகாத்மா காந்தி மட்டுமே. பிரிவினையை தடுத்து நிறுத்த கடைசிவரை முயன்றார். வேதனையில் துடித்தார். பிரிவினையை முதலில் ஆதரித்த வல்லபாய் படேல் போன்றோரை விட்டுவிட்டு, காந்தியை மட்டும் இந்துமகாசபை, ஆர்.எஸ்.எஸ் கூட்டம் குறிவைத்தது ஏனென்றால், காந்திஜி இந்து- முஸ்லிம் ஒற்றுமைக்கு தொடர்ந்து பாடுபட்டார் என்பதால்.
பிரிவினையைத் தொடர்ந்து வரலாறு காணாத வன்முறை பஞ்சாபிலும், வங்காளத்திலும் வெடித்துக்கிளம்பியது.
78 வயதான அந்த மகத்தான மனிதர் மகாத்மா காந்தி, நிலைகுலைந்து போனார். அந்த தள்ளாத வயதில் உண்ணா நோன்பைத் துவக்கினார். தன் முன்னால் கூடியிருந்தவர்களைப் பார்த்து, தாகூரின் பாடல் ஒன்றை பாடச் சொன்னார் காந்தி. “ உன்னுடைய அழைப்பிற்கு எவரும் செவிசாய்க்கவில்லையெனில், தனியாகவேணும் நட! தனியாக வேணும் நட! ” நாட்டு பிரிவினையால் காந்தியின் மனம் நொந்து நூலாகிப்போயிருந்தது. தனது சகாக்களே தன்னை கைவிட்டுவிட்ட சோகம் காந்தியை பிடித்து ஆட்டியது. உண்ணாவிரதமிருந்த காந்தியைப் பார்க்க நேரு, படேல் முதலியோர் சென்றனர்.
நானறிந்த சர்தார் அல்ல…
ஒருநாள் உண்ணாவிரதத்திலேயே மிகவும் சோர்ந்து போயிருந்த காந்தி, படேலை பார்த்ததும் புருவங்களை உயர்த்தி, “ நான் அறிந்திருந்த சர்தார் நீங்கள் அல்ல ” என மெதுவாக முணுமுணுத்துக் கொண்டே தலையணையில் சரிந்து விட்டார் காந்தி. காந்திஜி உண்ணாவிரதமிருந்த பிர்லா மாளிகைக்கு வெளியே கூட்டமாக நின்று ஏதோ சத்தம் போட்டுக் கொண்டிருந்தார்கள். காந்திஜி தனது உதவியாளரிடம் “ என்ன சத்தம்? ’‘ என்று கேட்டார். முதலில் சொல்லத்தயங்கிய தனது உதவியாளர் பியாரிலால் சொன்னார், “ காந்திஜி செத்துப் போகட்டும் ” என கோஷம் போடுகிறார்கள் என்றார். எவ்வளவு ஆத்திரம் இந்து மதவெறியர்களுக்கு காந்திஜி மீது!

தேசத்தை சீர்குலைத்து சின்னாபின்னமாக்கிக் கொண்டிருந்த ஆர்.எஸ்.எஸ்ஸின் செயல்பாடுகளில் பிரதமர் நேருவுக்கும், உள்துறை அமைச்சர் வல்லபாய் படேலுக்கும் கருத்து வேறுபாடுகள் முட்டிமோதின. இதில், ஆர்.எஸ்.எஸ்ஸின் நடவடிக்கைகளை முற்றிலும் ஏற்றுக் கொள்ளாத நேருபக்கமே காந்திஜி இருந்தார்.
காந்திஜியின் உண்ணாவிரதத்தில் படேலை தன்பக்கம் கொண்டுவர வேண்டும் என்ற நோக்கமும் இருந்தது. “ காந்திஜி செத்துப்போகட்டும் ” என்ற இந்துமதவெறியர்களின் கோஷத்தைக் கேட்டநேரு, “ மகாத்மா காந்தியின் மரணம் என்பது இந்திய ஆத்மாவின் மரணம் ”என்றார்.தேசத்தில் மதத்தின் பெயரால் கலவரமே நடக்கக் கூடாது என்பதுதான் காந்திஜியின் உண்ணாவிரதத்தின் நோக்கம். காந்திஜி தனது உயிரைப் பற்றி கிஞ்சிற்றும் கவலைப்படவே இல்லை.
உயிரைக் குடித்த இரண்டாவது சதி
காந்திஜி உண்ணாவிரதமிருந்த பிர்லா மாளிகை முன்பு ஒருலட்சம் பேர்கொண்ட பெருங்கூட்டம் கூடியிருந்தது. “ காந்திஜி வாழவேண்டும் ” என்ற கோஷம் விண்ணையும் மண்ணையும் பிளந்தது. இந்தக்கூட்டத்திற்கு மத்தியில் நேரு ஒலிபெருக்கியில் மிகுந்த நெகிழ்வோடு பேசினார். “ காந்திஜியைக் காப்பாற்ற எந்த தியாகத்தையும் நாம் செய்வோம். உண்மையான லட்சியத்திற்கு நம்மை அழைத்துச்செல்லக் கூடியவர் காந்திஜி மட்டுமே ” என்றார். நாட்டு மக்களின் கோரிக்கையை ஏற்று ஒருவழியாக காந்தி அரைமனதோடு தனது உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டார்.
ஜனவரி 30 பிற்பகலில் கடைசியாக காந்திஜியைப் பார்க்க படேல் வந்தார். வெகுநேரம் படேலோடு பேசிக்கொண்டிருந்த காந்திஜி, “ பிரார்த்தனைக்கு எனக்கு நேரமாகிறது; என்னை போக விடுங்கள் என்று சொல்லிக்கொண்டு வேகமாக நடந்து சென்றார். இந்த நேரத்தில் தான் கோட்சேயின் துப்பாக்கிக் குண்டுகள் காந்திஜியின் மெல்லிய உடலைத் துளைத்தது. கொலைகாரன் கோட்சேவும் பிடிபட்டான்.
நாடுமுழுவதும் இந்து மகாசபைத் தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். ஆர்.எஸ்.எஸ் அமைப்பு தடைசெய்யப்பட்டது. அதன் தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். நிலைமை மிகவும் கொந்தளிப்பாகஇருந்தது. இந்துமகாசபை அலுவலகங்களை மக்கள் கண்மூடித்தனமாக தாக்கினார்கள்; அதன் கொடிகளை எரித்தார்கள்; பம்பாயிலிருந்த சாவர்க்கரின் மாளிகையை சுமார் 500 பேர் உடைத்து நொறுக்கி உள்ளே நுழைத்தனர். சாவர்க்கர் தனது அறையில் பதுங்கி ஒடுங்கிக் கிடந்தார். போலீஸ் வந்து அவரைக் காப்பாற்றியது. காந்திஜியின் உயிரைக் குடித்தது இந்துத்துவாவே என்பதை மக்கள் உணர்ந்தனர்.
நாதுராம் கோட்சே, அவனது தம்பி கோபால் கோட்சே, நாராயண ஆப்தே, மதன்லால் பாவா, சாவர்கரே, திகம்பர் பாட்ஜ் ஆகியோர் ஜனவரி 20 அன்றே காந்தியைக்கொல்ல முயன்றனர். பிர்லா மாளிகையில் காந்தியின் பிரார்த்தனைக் கூட்டத்தில் மதன்லால் பாவா குண்டு ஒன்றை வைப்பது எனவும், அந்த க்கலவரத்தில் புகுந்து கார்கரேயும், கோபால் கோட்சேயும் காந்தியை நோக்கி குண்டு வீசுவது அல்லது கைத்துப்பாக்கியால் சுடுவது என்றும் திட்டம் தீட்டினர். ஆனால், கார்கரேயும் கோபால் கோட்சேயும் தங்கள் சதிவேலையை செய்ய முடியாமல் போனது. மதன்லால் போலீஸ் வசம் சிக்கிக்கொண்டான்.
தான் மட்டுமல்ல; ஏழு பேர்கொண்ட கோஷ்டி இச்சதி வேலையில் ஈடுபட்டோம் என்பதையும் போலீசிடம் ஒப்புக்கொண்டான். இப்படி வாக்கு மூலம் கொடுத்த நபர்களை போலீஸ் ஏன் கைது செய்யவில்லை என்பதுதான் தெரியவில்லை. ஆனால், இச்சதிக்கூட்டம் ஜனவரி 30இல் காந்தியை கொன்று தீர்த்தது. இடைப்பட்ட 10 நாளில் தங்கள் சதியை அரங்கேற்றினர்.
சுந்தரய்யாவின் பேச்சும் படேலின் பதவி விலகல் கடிதமும்
ஆகவே, காந்திகொலைக்கு பொறுப்பேற்று உள்துறை அமைச்சர் சர்தார் படேல் பதவி விலக வேண்டுமென்ற கோரிக்கை நாடு முழுவதும் எதிரொலித்தது. இந்நிலையில், சர்தார் படேல் தனது பதவி விலகல் கடிதத்தை நேருவுக்கு அனுப்பியிருந்தார். அதோடு தனிப்பட்ட முறையில் ஒரு கடிதமும் நேருவுக்கு எழுதினார். அந்தக் கடிதத்தில் இரு செய்திகளை சுட்டிக்காட்டியிருந்தார். ஒன்று ‘ஸ்டேட்ஸ்மேன்’ பத்திரிகையில் தான். பதவி விலக வேண்டுமென்று ஒரு வாசகர் எழுதிய கடிதம், இரண்டாவதாக, ‘மெட்ராஸ் மெயில்’ பத்திரிகையில் வெளிவந்த பிரபலமான கம்யூனிஸ்ட் தலைவர் பி.சுந்தரய்யாவின் பொதுக்கூட்ட பேச்சு இந்த இரண்டும் என்னை பதவி விலகத் தூண்டியது என படேல் குறிப்பிட்டிருந்தார்.
சுந்தரய்யா அந்தப் பொதுக்கூட்டத்தில் என்ன பேசியிருந்தார் என்றால், “இந்தியாவில் பாசிச ஆட்சியைக் கொண்டுவர, காந்தியை கொலை செய்ய இந்து மகாசபை, ஆர்எஸ்எஸ், சர்தார் வல்லபாய் படேல் ஆகியோர் திட்டமிட்டிருந்தார்கள்” என பகிரங்கமாக சுந்தரய்யா அன்று பொதுக்கூட்டத்தில் பேசியிருந்தார். ஆனால், படேலின் பதவி விலகலை நேரு ஏற்றுக் கொள்ளவில்லை.
தவிர்க்க முடியாதபடி ஆர்எஸ்எஸ் விஷயத்தில் சில நடவடிக்கைகளை படேல் எடுத்தாலும், இந்து மகாசபை குறித்து மவுனமாகவே நடந்து கொண்டார். “இந்து மகா சபையை அடக்கி ஒடுக்க வேண்டும் என்கிற கோரிக்கையைப் பொறுத்தவரை, அது ஜனநாயக கோட்பாடுகளுக்கு இயைந்ததாக இருக்காது” என்றார் படேல். மேலும் சொன்னார், “நமது நகல் அரசியல் சாசனம் முஸ்லிம்களை ஒரு தனிப்பிரிவாக அங்கீகரிக்கிறது. எனவே, இந்துக்களை அரசால் புறக்கணிக்க முடியாது” என்றார். இப்படியான மதவாத சிந்தனை உள்ளவர்தான் அன்றைக்கு நாட்டின் உள்துறை அமைச்சராக இருந்துள்ளார். காந்தியின் கொலைகுறித்து நேரு சொன்னார்,
“பாபுவின் கொலை ஒரு தனிப்பட்ட செயல் அல்ல. ஆர்எஸ்எஸ் செயல்படுத்திய விரிவான இயக்கத்தின் ஒரு பகுதி என்று நான் மேன்மேலும் முடிவுக்கு வருகிறேன்” என்றார். உள்துறை அமைச்சர் பொறுப்பிலிருந்து படேல் பதவி விலகியது இந்து மகாசபை, ஆர்எஸ்எஸ்காரர்கள் மீது கோபமல்ல; இவர் பதவி விலக வேண்டுமென்ற மக்கள் எழுச்சியே என்பதை, வரலாற்றை உற்று நோக்கினால் புரியும். காந்திஜி உயிரோடு இருக்கும்வரை இந்தியாவில் மதத்தின் பெயரால் மக்களைப் பிளக்கும் தங்களின் சதிவேலை வெற்றியடையாது என்பதாலேயே காந்தியை திட்டமிட்டு ஆர்எஸ்எஸ், இந்து மகாசபைக்காரர்கள் கொன்றார்கள்.
கோட்சேயின் குற்றச்சாட்டு
காந்தி படுகொலையில் ஒன்பது பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டனர். நாதுராம் கோட்சே, நாராயண ஆப்தே, விஷ்ணு கார்கரே, மதன்லால் பாவா, சங்கர் கிஸ்தயா, கோபால் கோட்சே, டாக்டர் பார்ச்சுரே, சாவர்க்கர், திகம்பர்பாட்ஜ். கடைசி குற்வாளியான திகம்பர் பாட்ஜ் அப்ரூவராக மாறினான். அவனின் வாக்குமூலம் சாவர்க்கரின் ஆசியோடுதான் கோட்சே காந்தியைக் கொன்றான் என்பது உறுதியாயிற்று. காந்திஜி கொலையில் தங்களுக்கு சம்பந்தமில்லை என்று ஆர்எஸ்எஸ் கூறுகிறது. ஆனால் காந்தியைக் கொன்ற நாதுராம் கோட்சே, ஆர்எஸ்எஸ் அமைப்பில் இருந்ததை மிகவும் பெருமையோடு கூறியிருக்கிறான்.
நாதுராம் கோட்சேயின் தம்பி கோபால் கோட்சே சொல்கிறான், “தனது தமையன் நாதுராம் கோட்சே ஆர்எஸ்எஸ் அமைப்பிலிருந்து விலகவே இல்லை” என்கிறான். காந்தியை ஏன் கொலைசெய்தேன் என நீதிமன்றத்தில் நாதுராம் கோட்சே காந்தி மீது குற்றப்பத்திரிகை வாசித்தான். அதற்கு அவன் கூறிய காரணங்கள், “தேசிய மொழியாக இந்தியை சொல்லவந்த காந்தி, முஸ்லிம் மக்களின் மனம் குளிரச் செய்ய இந்துஸ்தானியை முன்மொழிய ஆரம்பித்துவிட்டார்; வந்தே மாதரம் பாடுவதை காந்தி விரும்பவில்லை; பசு பாதுகாப்பு குறித்து வாயளவில் தான் காந்திஜி பேசினாரே தவிர அதற்காக உருப்படியான எதையும் செய்யவில்லை; காந்தியின் உண்ணாவிரதம் இந்துக்களை மிரட்டி முஸ்லிம்களுக்கு சாதகம் செய்யவே”. சுதந்திர போராட்டத்தில் முஸ்லிம்களை இணைத்துக் கொண்டதில் காந்தி மீது இந்துத்துவா கோஷ்டியினருக்கு மிகுந்த கோபம் இருந்தது.
காந்திஜியின் கொலைக்கும் ஆர்எஸ்எஸ் அமைப்பிற்கும் சம்பந்தமில்லை என்று பச்சைப் பொய்யைக் கூறுகிறார்கள். ஆனால், கொலைகாரர்களுக்கு தூக்குத் தண்டனையளித்து, இவர்கள் தூக்குக் கயிற்றில் தொங்குவதற்கு முன்னர், இவர்கள் பாடிய பாடல் என்ன தெரியுமா? நமஸ்தே சதா வாத்சலே மாத்ருபூமி” என்ற பாடலாகும். ஆர்எஸ்எஸ் கும்பல் பாடுகிற அதே பாடலையே காந்தியைக் கொன்றவர்கள் பாடினார்கள்.
காந்தியின் கொலை ஒரு முக்கியமான சரித்திர உண்மையை உறுதிப்படுத்திக் கொண்டே இருக்கிறது;அது, காந்திஜி வெறும் தனிமனிதரல்ல; கோட்சேவும் ஒரு தனிமனிதனல்ல; இவர்களுக்குள் தனிமனித பகைமை உணர்ச்சியும் இல்லை; இரண்டு அரசியல் கோட்பாடுகளுக்கிடையில் ஏற்பட்ட மோதல் இது. மனிதநேய அரசியலுக்கும், மதவெறி அரசியலுக்கும் இடையில் ஏற்பட்ட மோதல் அது. அந்த மோதலை ஒரு கொடூரமான பயங்கரவாதத்தின் மூலம் தீர்த்துவிட முனைந்தது இந்துமதவெறி. அன்றைக்கு இவர்களால் இதில் வெற்றிகாண முடியவில்லை. கோட்சேயின் அதே குருமார்கள் இப்போதும் களத்தில் இருக்கிறார்கள்; அன்றைக்கு இருந்ததைவிட இப்போது தீவிரமாய் இருக்கிறார்கள். அந்த கோட்சேயிடமிருந்து காந்திஜியைக் காப்பாற்ற முடியவில்லை. ஆனால், இந்த கோட்சேக்களிடமிருந்து இந்திய தேசம் காப்பாற்றப்பட வேண்டும்.
நாளை காந்தியடிகள் கொல்லப்பட்ட நாள்
காந்தியின் கொலை இரு கோட்பாடுகளின் மோதல்...! https://theekkathir.in/2018/01/29/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D/

Sunday 18 August 2019

இந்தியாவின் “தேசபிதா?”பற்றிய சில குறிப்புகள்.


இந்தியாவின் “தேசபிதா?”பற்றிய சில குறிப்புகள்.

“நள்ளிரவில் சுதந்திரம்எனும் நூலில் இருந்து எடுக்கப்பட்டது.அரி`கௌரிகாந்தன்
அனைத்துலக நிலைமையால் இந்தியாவைவிட்டு வெளியேறவேண்டிய் நிலையில் இருந்த  பிரித்தானியா.
பொதுவாகக் கூறப்படுவதைவிட மவுண்ட் பேட்டனிடம் அதிகத் தகுதிகள் இருந்தன. அவரது கடற்படை சீருடையை அலங்கரிக்கும் பதங்கள்களே இதற்கு சான்றாகும். பிரிட்டிஷ் நிர்வாகத்தின் ஒரு தூணாக அவரை மக்கள் கருதினார்கள். ஆனால் நிர்வாகமோ மவுண்ட்பேட்டனையும் அவரது மனைவியையும் ஆபத்தான சீர்திருத்த வாதிகளாகக் கருதியது. தென்கிழக்கு ஆசியப்பகுதியில் தளபதியாக இருந்ததால் ஆசியாவின் தேசியஇயக்கங்கள்பற்றி இங்கிலாந்தில் ஒருசிலர் தெரிந்து வைத்திருந்ததைவிட அதிகமாகவே அவர் தெரிந்து வைத்திருந்தார். இந்தோசீனாவின் ஹோசிமின், இந்தோனேஷியாவின் சுகர்னோ, பர்மாவின் ஆங்சான், மலாயாவின் சீனக் கம்யூனிஸ்டுகள், சிங்கப்பூரின் கட்டுப்பாடற்ற தொழிற்சங்க வாதிகள் ஆகியோரின் ஆதரவாளர்களுடன் அவருக்குப் பழக்கம் இருந்தது. ஆசியாவின் எதிர்காலப் பிரதிநிதிகள் இவர்கள்தான் என்பதை அவர் உணர்ந்திருந்தார். அதனால் தான் அவருடன் இருந்த அதிகாரிகள் இவர்கள் மீது அடக்கு முறையை ஏவிவிட வலியுறுத்தியபோதும் அதனைச் செய்யாமல் அரவணைத்துச் சென்றார். அவர் இந்தியாவுக்குச் சென்றால் எதிர்கொள்ள வேண்டிய தேசிய இயக்கம் மிகவும் பழமையானதாக இருக்கும்; மற்றெல்லாவற்றையும் விட வித்தியாசமானதாகவும் இருக்கும். கா்ல் நூற்றாண்டு காலம் இங்கே நடந்த உணர்ச்சிகரமான போரட்டங்கள், வரலாற்றின் மிகப் பெரிய சாம்ராஜ்யம் அட்லி கட்சியின் மூலம் ஒரு முடிவுக்குவர வேண்டிய நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தியுள்ளன. ஆயுதம் தாங்கிய போராளிகள் மற்றும் மக்கள் எழுச்சியால் விரட்டப்படும் முன் இந்தியாவிலிருந்து உரிய நேரத்தில் பிரிட்டன் வெளியேறிவிட வேண்டும் என்பதுதான் அந்த முடிவு. பக்கம்--37
    ------------சமரசம் செய்யஇயலாத இவ்விரு தீவிர நிலைகளுக் கிடையே சிக்கிய பிரிட்டன், புதைமணலில் மெல்ல மெல்ல மூழ்குவதாகவும் இதிலிருந்து வெளிவர வழியே இல்லை என்றும் நினைத்தது. இந்தப் பிரச்சனைக்குத் தீர்வுகாண பிரிட்டன் மேற்கொண்ட முயற்சிகள் பல தடவை தோல்வியுற்றன, நிலைமை மிகவும் மோசமானபோது, அப்போதைய வைஸ்ராயும், பெருந்தன் மையும் உறுதியும் மிக்க ஃபீல்ட் மார்ஷல் ஆர்க்சிபால்ட் வேவல் (Sir Archibald Wavell) அட்லி அரசுக்கு கடைசி கட்டப் பரிந்துரைகளை அளித்தார். எல்லா முயற்சிகளும் தோற்றுவிட்டால், நாங்கள் எங்களுக்கு வசதியான நேரத்தில் எங்கள் இஷ்டம் போல் எங்கள் நலன்களைக் கருத்தில் கொண்டு இந்தியாவை விட்டு வெளியேறுவோம் எங்கள் முயற்சியில் எவராவது தலையிட்டால் அது போராகக் கருதப்பட்டு படைவலிமை முழுவதையும் பயன்படுத்தி அதனை சந்திப்போம்என்று பிரிட்டன் அறிவிக்க வேண்டும் எனபதுதான் அந்த யோசனை.
---------------- வெகுதூரத்திலிருந்து ஆட்சி செய்தார்கள் என்பது அவர்களின் பலவீனமாக இருந்தது. தாங்கள்தான் உயர்ந்த வர்களென்ற இறுமாப்பு ஆளப்படுகின்றவர்களிடமிருந்து அவர்களை அந்நியப்படுத்தியது. இனப்பெருமையால் இறுமாந்திருந்த அவர்களின் குணம்பற்றி அந்த நூற்றாண்டின் இறுதியில் நாடாளுமன்ற விவாதம் ஒன்றில் முன்னாள் ஐசிஎஸ் அதிகாரி ஒருவர் ரத்தினச் சுருக்கமாகக் குறிப்பிட்டது போல் வேறெவரும் சொல்லியிருக்க முடியாது. ங்கிலேய அதிகாரியின் தனித்த பங்களாவின் தோட்டக் காரனுக்கு உதவியாளாக இருப்பவர் முதல் மாகாணத் தலைநகரில் வசிக்கும் பத்திரிகை ஆசிரியர் இடையிட்டு, மன்னராட்சியில் வைஸ்ராய்க்கு அடுத்தபடியாக முக்கிய பொறுப்பு வகிக்கும் தலைமை ஆணையர் முடிய மேலிருந்து கீழ்வரை இந்தியாவில் இருந்த ஒவ்வொரு ஆங்கிலேயனுக் கும் ஒரு எண்ணம் இருந்தது. ஆளவும் அடிமைப் படுத்தவும் கடவுளால் விதிக்கப்பட்ட ஓர் இனம் நம்முடையது என்ற எண்ணம்தான் அதுஎன்று அவர் கூறினார்.
            முதல் உலகப்போரில் இந்த இனத்தைச் சேர்ந்த 6,80,000 பேர் படுகொலை செய்யப்பட்டதால் இந்தியா பற்றி அவர்கள் கொண்டிருந்த கனவுகள் முடிவுக்கு வந்தன. எல்லைப்புறப் பாதுகாவலராகவும், மாவட்டங்களின் நிர்வாகி யாகவும், பரந்த மைதானங்களில் போலோ விளையாடுவதற்காகுள்ளக்குதிரைகள் மீது சவாரிசெய் பவர்களாகவும் இருக்கவேண்டிய ஒரு தலைமுறை இளைஞர்கள் அனைவரும் ஃப்ளான்டர்ஸ் (Flanders) போர்க்களத்தில் மடிந்தார்கள். 1918லிருந்து ஐசிஎஸ் அதிகாரிகளை நியமிப்பதும் சிரமமாயிற்று. இதனால் நிர்வாகம் மற்றும் ராணுவத்தில் இந்தியர்கள் அதிகாரிகளாக வருவது ஏற்கப்பட்டது; எண்ணிக்கை அதிகரித்தது.
            1947 புத்தாண்டு தினத்தின்போது 400 மில்லியன் (40 கோடி) மக்கள்மீது ஆட்சி செலுத்தினாலும் இந்தியாவில் வெறும் ஆயிரம் ஐசிஎஸ் அதிகாரிகள்தான் பிரிட்டனைச் சேர்ந்தவர்களாக இருந்தனர். லண்டனில் நடந்த ரகசிய உரையாடலாலும், வலுமிக்க வரலாற்றின் நீரோட்டத்தாலும் வெளியேறப்போகிற, காலத்துக்கு ஒவ்வாத, மேன்மை தங்கிய பிரிவின் கடைசிக் குழுவாக இவர்கள் இருந்தார்கள். ------பக்கம்-48
வரலாற்றுச் சிறப்பமிக்க அந்த அறிவிப்பை அட்லி படிக்கத் தொடங்கியதும் குளிர் நிறைந்திருந்த அவ் அறையில் ஒரு வித கிளர்ச்சி உருவானது. மேன்மை தங்கிய மன்னரின் அரசு ஒன்றைத் தெளிவுபடுத்த விரும்புகிறதுஅட்லி உரையைத் தொடங்கினார். ‘1948 ஜூன் மாதத்துக்கு முன்னால் ஒரு தேதியில் பொறுப்பு மிக்க இந்தியர்களின் கைகளுக்கு அதிகாரத்தை மாற்றுவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுப்பது அவர்களின் உறதியான விருப்பம்என்று அவர் கூறினார்.
            அவரது வார்த்தைகள் மக்களவையில் இருந்த உறுப்பினர்களின் மனதில் பதிந்த போது அங்கு அசைவற்ற அமைதி நிலவியது. வரலாற்றின் தவிர்க்க முடியாத விளைவு இது; பிரிட்டன் தாமாகவே முன்வந்து ஒப்புக் கொண்டதுதான் இது என்பதெல்லாம் அங்கு சூழ்ந்த சோகத்தைக் குறைக்கப் பயன்படவில். இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சி வெறும் பதினான்கு மாதங்கள்தான் இருக்கப் போகிறது என்பதை அவர்கள் உணர்ந்து விட்டதுதான் இதற்குக் காரணம். பிரிட்டிஷார் வாழ்க்கையில் ஒரு சகாப்தம் முடியப் போகிறது. வரலாற்றில் மாபெரும் உறவு துண்டித்தல்?’ தொடங்கப்போகிறது என்று அடுத்த நாள் காலையில் மான்செஸ்டர் கார்டியன் இதழ் குறிப்பிடக் கூடும்.’ -94
பிரித்தானியர் தம்மீது தாமே போட்டுக்கொண்ட தீக்குழம்புகள்.
      இந்தியாவில் சாகசத்துக்குப் பிரிட்டிஷார் அளித்த மனித விலையின் கணக்கைக் காட்ட கல்லறைகளைத் தவிர வேறு சாட்சியம் தேவையில்லை. வரிசைவரிசையாக அமைந்த கல்லறைகளிலும் மிகவும் வருத்தமளிப்பதாக இருந்தவை சிறியஅளவிலான கல்லறைகள்தான். ஒவ்வொரு கல்லறை யிலும் இவ் வகையிலானவை மலைக்கச்செய்யும் எண்ணிக் கையில் இருந்தன. இவை குழந்தைகளின் கல்லறைகள் தங்கள் தாய்நாடான இங்கிலாந்தில் இருந்திருந்தால் ஒரு போதும் சந்தித்திருக்க வேண்டாத தாங்கமுடியாத வெப்பத்தாலும் நோய்களாலும்தான் அந்தக் குழந்தைகளும் சின்னஞ் சிறார்களும் இறந்தனர். பக்கம்--47
முஸ்லீம் மக்களின் ஆதங்கம்; இந்து தேசியம் என்ற சிலுவையில் நம்மை நாமே அறைந்து கொள்ளக் கூடாது.
            இறை நம்பிக்கை கொண்ட எல்லோரும் சகோதரர்கள் என்பதுதான் இஸ்லாம் மார்க்கமென்று கருதிய முஸ்லீம்க ளுக்கு இச் சாதியமுறை ஒரு சாபமாகவே தோற்றியது. இதனால்தான் இந்தியாவில் முகலாயர் ஆட்சிக் காலத்தில் லட்சக்கணக்கான மக்கள் கருணையும், வரவேற்பும், சகோதரத்துவமும் நிறைந்த இஸ்லாம் மதத்துக்கு மாறி மசூதிகளுக்குச் சென்றனர். தவிர்க்க முடியாதபடி, இவர்களில் பெரும்பாலோர் தீண்டத்தகாதவர்களாக இருந்தனர். தங்களின் சொந்தமதம் தங்களை ஒதுக்கப்பட்ட பிறவியாகவே நடத்தியதால் இஸ்லாமின் சகோதரத்துவம் அவர்களுக்கு ஏற்புடையதாக இருந்தது.  பக்கம்--57
            ---------பிரிட்டிஷ் ஆட்சி அனுமதித்த மிகவும் குறைவான சலுகைகளைக்கூட தங்களது முஸ்லீம் எதிராளிகளுடன் பகிரந்துகொள்ள குறுகிய மனம் கொண்ட உள்ளூர் காங்கிஸ் தலைவர்கள் மறுத்துவிட்டார்கள். இது முஸ்லீம்களின் சந்தேகத்தை வலுப்படுத்தியது. இதனால் முஸ்லீம்கள் மனதில் ஒருவகை அச்சம் வளரந்தது. சுதந்திர இந்தியாவில், பெரும்பான்மையினரான இந்துக்கள் ராஜ்யத்தில், தாங்கள் அமுக்கப்படுவோம், ஒரு காலத்தில் முகலாய சக்ரவர்த்திகள் ஆட்சிசெய்த பூமியில் எந்த அதிகாரமும் அற்ற சிறுபான்மையினராக வாழ்வது சிரமம்என்று அவர்கள் நினைத்தனர்.
            இந்த அழிவிலிருந்து தப்பிக்கும் வழியாக இவர்கள் மனதில் தோன்றிய ஒரு வழிதான் துணைக்கண்டத்தில் தனியாக ஒரு முஸ்லீம் நாட்டை உருவாக்குவது என்பது. இந்திய முஸ்லீம்கள் அவர்களுக்கென்று சொந்தமான ஒரு நாட்டை அமைத்துக்கொள்ள வேண்டுமென்ற எண்ணம் முறைப்படி முதன் முதலில் உருவானது கேம்பிரட்ஜ் நகரின் ஹம்பர்ஸ்டோன் சாலையில் 3ஆம் எண் கொண்ட முக்கியத் துவம் பெறாத ஒரு ஆங்கிலேயரின் குடிசை வீட்டில்தான் தட்டச்சுக்குப் பயன்படும் காகிதத்தில் நாலரை பக்கத்தில் இத் திட்டம் உருவானது. இதனை உருவாக்கியவர் நாற்பது வயதான இந்திய முஸ்லீம் சமூகத்தின் ஒரு பட்டதாரி மாணவர். அவரது பெயர் ரஹமத் அலி. அவரது உத்தேச திட்டத்தின் தலைப்பில் இடப்பட்டிருந்த தேதி 28 ஜனவரி 1933. இந்தியா ஒரேநாடு என்ற எண்ணம் அறிவுக்குப் பொருந்தாத ஒரு பொய்என்று அலி எழுதினார். முஸ்லீம்கள் அதிகம் வாழ்கின்ற பஞ்சாப், காஷ்மீர், சிந்து, ஃபிரண்டைர்; பலுச்சிஸ்தான் என்ற இந்தியாவின் வடமேற்கு மாகாணங்களிலிருந்து முஸ்லீம் நாடு உருவாக்கப்பட வேண்டுமென அவர் கோரினார். அவரது புதிய நாட்டுக்கான பெயரைக்கூட அவர் முன் மொழிந்திருந்தார். புதிய நாட்டில் இடம் பெறவேண்டிய மாகாணங்களின் பெயர்களை உள்ளடக்கியதாக அப்பெயர் இருந்தது. அதுதான் பாகிஸ்தான்- புனிதர்களின் பூமி’.
            நகைப்புக்குரிய உருவகமாக இருந்தாலும், ஆவேசத்துடன் அவரது திட்டத்தை இப்படி முடித்திருந்தார். இந்து தேசியம் என்ற சிலுவையில் நம்மை நாமே அறைந்து கொள்ளக் கூடாது’.
(பஞ்சாபிலிருந்து PA காஷ்மீரிலிருந்து KI சிந்துவிலிருந்து S பலுச்சிஸ் தானிலிருந்து TAN என்று பாகிஸ்தான் (Pa-ki-s-tan) என்று பெயர் உருவாக்கப்பட்டது. மொ.ர்). பக்கம் 61
            ---------------------          ஆகஸ்ட் 16 விடியற்காலையில் இந்தக் குடிசைகளிலிருந்த முஸ்லீம் கும்பல் மதவெறி கோஷங்க எழுப்பிக் கொண்டு வெளிக்கிளம்பியது. மனித மண்டை ஓட்டைப் பிளக்கத் தகுதியான குண்டாந்தடிகள், இரும்புக் குழாய்கள், மண்வெட்டிகள் போன்ற ஆயுதங்கள் அவர்களிடம் இருந்தன. ஆகஸ்ட் 16நேரடி நடவடிக்கை நாள்என்ற முஸ்லீம் லீக் விடுத்த அறைகூவலை ஏற்றே அவர்கள் வந்தார்கள். தங்களுக்கென்றுபாகிஸ்தானைப் பெறத் தேவைப் பட்டால் நேரடி நடவடிக்கையில்இறங்கவும் இந்தியாவின் முஸ்லீம்கள் தயாராகவே இருக்கிறார்கள் என்பதை பிரிட்டனுக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் உணர்த்து வதற்காகவே இந்த அறைகூவல்.
            தங்கள் வழியில் தென்பட்ட இந்துக்கள் யாராயிருந் தாலும் அவர்களைக் கொடுமையாகத் தாக்கிக் கூழாக்கினர். அந்த உடல்களை நகரின் திறந்தநிலை சாக்கடைகளில் அமுக்கினர். இதைக்கண்டு அச்சம்கொண்ட காவல் துறை யினர் ஏதும் செய்யாமல் அங்கிருந்து மறைந்து விட்டனர். நகரின் பல பகுதிகளிலிருந்து விண்ணில் எழுந்த புகை மூட்டம் உயர்ந்துநிற்கும் கருப்புத் தூண்கள் போல் தோன்றின. இந்துக்களின் கடைவீதிகள் முழுதும் எரிக்கப் பட்டதன் விளைவு இது.
            இதையடுத்து பாதுகாப்பற்ற முஸ்லீம்களை கசாப்பு செய்ய தங்கள் குடியிருப்புகளிலிருந்து இந்து மதக் கும்பல் புயல்போல் கிளம்பியது. கல்கத்தா நகரின் வன்முறை வரலாற்றிலேயே இப்படி ஒரு சம்பவம் இதற்கு முன் நிகழ்ந்ததில்லை; 24 மணி நேரமும் மனிதர்களின் கோரத் தாண்டவம் நடந்தது. நீர் உறிஞ்சிய மரக்கட்டைகள் போல உப்பிய சடலங்கள் ஹூக்ளி ஆற்றில் மிதந்து கடலை நோக்கிச் சென்றன. மற்ற உடல்கள் கொடூரமாக சிதைக்கப் பட்டு நகரின் வீதிகளில் குப்பைகள்போல் சிதறிக்கிடந்தன. எங்கு பார்த்தாலும் பலவீனர்களும் ஆதரவற்றவர்களுமே அதிகம் பாதிக்கப்பட்டார்கள். நாற்சந்தி ஒன்றில் அடித்துக் கொல்லப்பட்ட முஸ்லீம் கூலிகளின் உடல்கள் வரிசையாகக் கிடந்தன. ரிக்சா கம்பங்களுக்கிடையே இருந்த முஸ்லீம் களைக் கண்ட இந்துக்கும்பல் இச்செயலை செய்தது. கொலைகள் நடந்து முடிந்திருந்த வேளையில் கல்கத்தா நகரம் வல்லூறுகளால் நிறைந்திருந்தது. அவலட்சணமான அந்தச் சாம்பல் நிறக் குழுகுகள் வானத்தில் வட்டமிட்டன. நகரில் இறந்து கிடந்த 6000 உடல்களைக் கொத்திக் கிழிக்க அவை கீழிறங்கி வந்தன.
            கல்கத்தாவின் கோரப்படுகொலைகள் என்று பின்னாளில் அறியப்பட்ட இச் சம்பவம் நவகாளியில் ரத்த ஆறு ஓடக் காரணமானது. இங்கே தான் காந்தி இருந்தார். மேலும் பீகாரிலும், இதற்கு நேர்எதிரில் துணைக் கண்டத்தின் மற்றொரு பகதியாக இருந்த பம்பாயிலும் ரத்தக் களரிகள் நிகழ்ந்தன.
            இந்தச் சம்பவங்கள் இந்திய வரலாற்றின் போக்கையே மாற்றிவிட்டன. தங்களுக்குத் தனிநாடு என்பது மறுக்கப் பட்டால், இந்தியாவைப் புரட்டியெடுக்கும் கொந்தளிப்பு ஏற்படும் என்று பல ஆண்டுகளாக முஸ்லீம்கள் விடுத்து வந்த எச்சரிக்கைகளும் மிரட்டல்களும் இப்போது அச்சம் விளைவிக்கும் உண்மையாயின திடீரென்று ஏற்பட்ட கோரக் காட்சியால் இந்தியா பாதிக்கப்பட்டது. அந்த உள்நாட்டு யுத்தம்தான் காந்தியை சோர்வடையச் செய்து நவகாளியின் காடுகளில் பயணம் மேற்கொள்ள அனுப்பியது. பக்கம்—62-63


காந்தியின் சாதி-பிராமணியரல்ல.
         காந்தியின் தந்தை பரம்பரை திவான். பம்பாய் அருகே கத்தியவார் என்ற சிறிய தீபகற்பப் பகுதியின் முதன்மை அமைச்சராக இருந்தார். சமயம் சார்ந்த பல நோன்புகளை நோற்று ஆழ்ந்த பக்திமானாக இருந்தார் அவரது அன்னை.
            பொதுவாக இந்து மதத்தின் பாரம்பரிய தத்துவங் களையும் சமயச்சடங்குகளையும் பராமரிப்பவர்கள் பிராமண ர்கள் என்று சொல்வார்கள். நவீன யுகத்தில் இந்தியாவின் தலைசிறந்த ஆன்மீகத் தலைவராய் வரப்போகிற காந்தி பிராமண சாதியில் பிறக்கவில்லை என்பதுதான் ஆச்சரிய மான விஷயம். தந்தை வைஸ்யகுலத்தவர். வியாபாரிகள் மற்றும் சிறுவணிகர்களைக் குறிக்கும் வர்ணம் இது. இந்து சமூக அளவுகோலில் இவர்கள் பாதிஅளவுக்கும் சற்று உயர்ந்தவர்கள். தீண்டத்தகாதவர்களுக்கும் கைவினைஞர் களான சூத்திரர்களுக்கும் மேலானவர்கள்; ஆனால் பிராமணர்களுக்கும் போர் வீரர்களான சைத்தியர்களுக்கும் கீழானவர்கள். பக்கம் 77
காந்தியின் கருத்தியல் கட்டுமானம் -பிராமணியமல்ல
            பைபிளில் இடம்பெற்றதொரு பகுதிதான் முதன்முதலில் காந்தியை அஹிம்சைபற்றி சிந்திக்கவைத்தது. ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத் தைக்காட்டு என்று கிறிஸ்து தனது சீடர்களுக்கு வழங்கிய அறிவுரை யால் அவர் மிகவும் கவரப்பட்டார். நிறைய வெள்ளையர்கள் அடித்தபோது அதையெல்லாம் தன்னடக்கத்துடன் தாங்கிக் கொண்ட அந்தக்குள்ள மனிதர் தமது கொள்கையை தாமே பின்பற்றியிருக்கிறார். கண்ணுக்குக் கண் என்ற கொள்கையைக் கடைப் பிடித்தால் பார்வையற்றவர்களின் உலகத்தைத்தான் உருவாக்கமுடியும் எனக் கூறினார். ஒரு மனிதனின் தலையைச்சீவுவதன் மூலம் அவனது பழக்கங்களை மாற்றிவிட முடியாது. வன்முறை என்பது வன்முறையாளனைக் காட்டுமிராண்டி யாக்குகிறது; வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களிடம் கசப்புணர்வை வளர்க் கிறது. நல்ல உதாரணங்களைக்காட்டி மனமாற்றத்தைத் தூண்டுவதும், மனிதபலத் தைக்கொண்டு மனிதர்களைப் பிரிப்பதற்குப் பதிலாக கடவுள் பலத்தைக் கொண்டு மனிதர்களை இணைப்பதுமான தத்துவத்தையே காந்தி தேடினார்.  பக்கம் 82
              ---------           சிறையில் இருக்கும் போது காந்தியின் சிந்தனையில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தப் போகும் உலகின் மிகச்சிறந்த நூல்களில் இரண்டாவதான ஹென்றி தேரோவின் சிவில் ஒத்துழையாமைஎன்ற நூலை அவர் படித்தார். அடிமை முறையைப் பாதுகாக்கும் அமெரிக்க அரசை எதிர்த்துக்கொண்டும் அது மெக்ஸிக்கோவில் நடத்தும் அநீதிப்போருக்கு எதிராகப் போராடிக் கொண்டும் இருந்த தேரோ (Thorou) நியாயமற்ற சட்டங்களைப் புறக்கணிக்கவும் தாங்க முடியாத கொடுமைகள் செய்யும் அரசுடன் ஒத்துழைப்பதை மறுக்கவும் ஒவ்வொரு மனிதனுக்கும் உரிமை உண்டு என்றார். சட்டத்தை மதிப்பதைவிட நேர்மையாக இருப்பது மிகவும் பெருமைக்குரியது என்றும் அவர் கூறினார்.
              ----------------- மூன்றாவது நூல் டால்ஸ்டாயின் கடவுளின் ராஜ்யம் உங்களுக்குள் இருக்கிறதுஎன்பதாகும். ஒருவது நீதிக்கோட்பாடுகளை அன்றாட வாழ்க்கையிலும் பயன்படுத் தவேண்டும் என்ற டால்ஸ்டாயின் வற்புறுத்தலை காந்தி பெரிதும் மதித்தார். அஹிம்சை, கல்வி, உணவுப்பழக்கம், தொழில்மயம் ஆகியவற்றில் வியக்கத்தக்க இருவரும் வியக்கத்தக்க வகையில் ஒரே கருத்தைக் கொண்டிருந்தனர். டால்ஸ்டாயின் மரணத்துக்கு முன் இருவரும் கடிதத் தொடர்பு கொண்டிருந்தனர். பக்கம் 82-83

காந்தியின் சாத்வீகம்
            இரண்டாம் உலகயுத்தம் மூளுவதற்கான நிலைமைகள் உருவாயின முன்னெப் போதையும்விட அஹிம்சை இப்போது முக்கியத்துவம் பெறுவதாக காந்தி கருதினார். மனிதகுலம் தன்னைத்தானே அழித்துக் கொள்வதிலிருந்து அதைனைக் காப்பதற்கான ஒரே தத்துவம், இந்திய சுதந்திரப் போராட்டத்துக்கு வழிகாட்டு நெறியாக இருந்தது.
            முஸோலினி எத்தியோப்பியாவைக் கைப்பற்றியபோது உ்ங்களைக் கொன்றுகுவிக்க அனுமதித்துவிடுங்கள்என்று எத்தியோப்பியர்களிடம் காந்தி வலியுறுத்தினார். எதிர்த்துப் போரிடுவதைவிட இதன் விளைவு மிகவும் வலுவானதாக இருக்கும். ஏனெனில் முஸோலினி ஒரு பாலைவனத்தை விரும்பமாட்டார்என்றும் அவர் கூறினார். யூதர்களை நாஜிகள் கொன்று குவிப்பதுபற்றி மனம் வருந்தினார். மனித குலத்தின் பேரால் மனித குலத்துக்காக யுத்தம் நியாயப்படுத்தப்பட்டால், ஒரு இனம் ஒட்டுமொத்தமாக வேண்டுமென்றே படுகொலை செய்யப்படுவதைத் தடுக்க ஜெர்மனிக்கு எதிரான யுத்தமும் முழுமையாக நியாயப்படுத்தப்படும்என்று அவர் அறிவித்தார்.
            இன்னமும் போரில் நான் நம்பிக்கை வைக்கவில்லைஅவர் மேலும் கூறினார். யோவாவினால் அவர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள, வருத்தப்பட்டு பாரம் சுமக்கும் வலுவைக் காட்டுவதில், நிராயுதபாணிகளான ஆண்களும் பெண்களும் அமைதியாகவும் தீர்மானகரமாகவும் இருக்கவேண்டும்என்றும் அவர் யோசனை கூறினார். இந்த செயல் ஜெர்மானியர்களிடம் மனமாற்றத்தை ஏற்படுத்தி, மனித குல மாண்பை உணர வைக்கலாம்என்றும் அவர் கூறினார்.
            முடிவில் இரண்டாம் உலகயுத்தம் வெடித்துவிட்டது. புயலுக்குப்பின் தோன்றும் சூரிய ஒளிபோல, இந்த யுத்தத்தின் பேரழிவுக்குப்பின் தீரத்தின் வெளிப்பாடான தியாகம் நிறைந்த அஹிம்சை ஒளி பிறக்கவேண்டும் என்று காந்தி பிரார்த்தித்தார். சுயஅழிவு என்ற இறுக்கமான சுழற்சியிலிருந்து விடுபட மனிதகுலத்துக்கு இது வழிகாட்டட்டும் என்றும் அவர் கூறினார்.
            ரத்தம், கடின உழைப்பு, கண்ணீர், வியர்வைஆகியவற்றைக் கோரி தமது நாட்டு மக்களிடம் சர்ச்சில் வேண்டுகோள் விடுத்த வேளையில், தமது கொள்கையை சோதித்துப் பார்ப்பதற்குப் போதியளவு தீரம் ஆங்கிலேயர்களிடம் இருக்கிறது என்று நம்பிக்கை கொண்ட காந்தி வேறொரு யோசனையை முன்வைத்தார். ஹிட்லரையும் முஸோலினி யையும் அழையுங்கள் உங்கள் நாடுகளிலிருந்து விரும்பும் அளவுக்கு உங்கள் சொத்துக் களை எடுத்துச் செல்ல அவர்களை அனுமதியுங்கள்என்றும் விமானப் படை தாக்குதல் உச்சத்தில் இருந்த போது ஆங்கிலேயர்களுக்கு அவர் இப்படி எழுதினார்.
            உங்கள் அழகிய தீவிலிருந்து கண்ணைக் கவரும் கட்டிடங்களுடன் உங்களின் எந்தச் சொத்துக்களையும் அவர்கள் எடுத்துச்செல்லட்டும், அனைத்தையும் நீங்கள் கொடுத்து விட்டாலும், உங்களின் மனங்களையும் உயிர்களையும் ஒரு போதும் கொடுத்து விடமாட்டீர்கள்என்றும் காந்தி கூறினார். பக்கம் 100-101
            கிரப்ஸ் வந்துசேர்ந்த நாற்பத்தெட்டு மணி நேரத்துக்குப் பின்னால், காந்தி அவரிடம் சொன்னார்: இந்த யோசனை ஏற்கத்தக் கதல்ல; ஏனென்றால் இந்தியாவை நிரந்தரமாகத் துண்டாடும் திட்டமாக இது இருக்கிறதுஇந்திய மண்ணைக் காப்பாற்ற வேண்டிய கட்டாயம் இருப்பதால் இந்தியர்களின் ஒத்துழைப்பை உடனடியாகப் பெறவேண்டியே (ஜப்பானுக்கு எதிராக) எதிர்காலத்தில் இந்தியாவுக்குச் சுதந்திரம் அளிப்பதாகப் பிரிட்டிஷார் தெரிவிக்கின்றனர். அஹிம்சை கொள்கையில் உறுதியோடிருந்த அந்த தேவதூதருக்கு இந்த ஒப்பந்தத்தில் உடன்பாடில்லை. ஜப்பான் எதிர்க்கப்பட வேண்டுமானால், காந்தியைப் பொறுத்தவரை அது அஹிம்சை வழியில் மட்டுமே. --102
            என்னிடம் ஒரு மந்திரம் உள்ளது. அந்த சிறிய மந்திரத்தை நான் உங்களுக்கு உபதேசிக்கிறேன்ஆதரவாளர்களைப் பார்த்து காந்தி கூறினார். செய் அல்லது செத்து மடிநாம் இந்தியாவை விடுவிப்போம்; அல்லது அந்த முயற்சியில் செத்து மடிவோம்; நமது அடிமைத்தனம் நிரந்தரமாவதைக் காண நாம் உயிர்வாழக் கூடாது.
            பொழுது புலருமுன் காந்தி சுதந்திரம் பெறவில்லை; மாறாக பிரிட்டிஷ் சிறைக்குச் செல்ல மீண்டும் அழைப்பு வந்தது. மிகவும் கவனமுடன் எடுக்கப்பட்ட நடவடிக்கையின்படி போர்க்காலம் முழுவதும் காந்தியையும் ஒட்டமொத்த காங்கிரஸ் தலைவர்களை யும் அள்ளிச்சென்று சிறையில் அடைத்தது பிரிட்டிஷ் அரசு. இவர்கள் கைது செய்யப்பட்டதைத் தெடர்ந்து ஆங்காங்கே வன்முறைகள் தலைதூக்கின. ஆனால் மூன்று வாரங்களில் நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
            மிகவும் முக்கியமான நேரத்தில் காங்கிரஸ் தலைவர்களை அரசியல் களத்தி லிருந்து அகற்றியதன் மூலம், காந்தியின் செயல் தந்திரத்தை முஸ்லீம் லீக் சாதுர்யமாகப் பயன்படுத்திக் கொண்டது. காங்கிரஸ் தலைவர்கள் சிறையில் வாடியபோது, அவர்களின் எதிராளிகளான முஸ்லீம் தலைவர்கள் பிரட்டனின் போர் முயற்சிகளுக்கு ஆதரவு தெரவித் தனர். தங்களின் செயல்மூலம் பிரட்டிஷாரிடம் கணிசமான நன்மதிப்பைப் பெற்றனர். காந்தியின் திட்டம் ஆங்கிலேயர்களை இந்தியாவிலிருந்து வெளியேற்றத் தவறியது மட்டுமல்ல, நாட்டை விட்டுச் செல்லுமுன் இந்தியாவைப் பிளவுபடுத்த வேண்டும் என்ற அவர்களின் எண்ணத்தை உறுதிப்படுத்தவும் செய்து விட்டது. --103
            ஒருசில நாட்களுக்குப்பின் காந்தி தங்கியிருந்த குடிலுக்குள் பணக்கார ஆதராவாளர் வந்தார். காந்தியின் சீடர் ஒருவர் தலைகீழாகநின்று சிரசாசனம் செய்வ தையும், மற்றொருவர் எல்லையற்ற பரம்பொருளைத் தேடும் தியானத்தில் ஆழ்ந்திருப் பதையும் மூன்றாவது நபர் தரையில் படுத்துத் தூங்கிக் கொண்டிருப்பதையும் மகாத்மாவே கூட அவரது கழிப்பறையில் அமர்ந்து அண்ட வெளியை வெறித்து நோக்கிக் கொண்டிருப் பதையும் அவர் கண்டார்.
            அவர் வாய்விட்டுச் சிரித்தார். கழிப்பறையிலிருந்து வெளிவந்து கொண்டிருந்த காந்தி, ‘அவர் ஏன் சிரிக்கிறார்என்று கேட்டார். 
            வீட்டுரிமையாளர் சிரித்துக் கொண்டே சொன்னார்: ஓ பாபு! இந்த அறையைப் பாருங்கள். ஒருவர் தலைகீழாக நிற்கிறார், இன்னொருவர் தியானம் செய்கிறார், மூன்றாவது நபர் தூங்கிக் கொண்டிருக்கிறார், நீங்களோ கழிப்பறையில் இருக்கிறீர்கள்-இவர்கள்தான் இந்தியாவுக்கு சுதந்திரம் பெற்றுத்தரப் போகிறவர்களா!  பக்கம்----105

நூல் விபரம்:-- “நள்ளிரவில் சுதந்திரம்ஆக்கியோர்—டொமினிக் லேப்பியர்& லேரி காலின்ஸ். அலைகள் வெளியீட்டகம், சென்னை – 600 002


In Defense of Communism: KKE statement on the developments in Afghanistan

In Defense of Communism: KKE statement on the developments in Afghanistan : Concerning the developments in Afghanistan and the resurgence o...