Showing posts with label வன்முறை. Show all posts
Showing posts with label வன்முறை. Show all posts

Sunday, 13 May 2018

மே 18 துக்கதினம் ஆக்காதீர்கள்


மே 18ஐ துக்கதினமாக்காதீர்கள்!
 துக்கதின’-மிதவாதப் பொதுப்புத்தி
பல்லாயிரக் கணக்கானோர் ஒரேநாளில் கொன்றொழிக்கப்பட்டது துக்கநிகழ்வில்லையா? இதைத் துக்கதினமாகக் கருதாமல் வேறெவ்விதம் கருதுவது? என வாதம்புரிவோரின் எண்ணிக்கை அதிகரித்துச் செல்கிறது. இவ்விதம் வாதம் புரிவோர் இலங்கைவரலாற்று நாட்காட்டியில், இத்தினத்தை ஒரு துக்கதினமாகப் பதிவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறாரகள். இம்முயற்சிக்கு சிறிலங்கா அரசின் மறைமுக ஆதரவும் உண்டு. பயங்கரவாதத்தால் ஏற்படுத்தப்பட்ட பேரழிவென வியாக்கியானம் கொடுத்து இது ஸ்ரீ லங்காவின் துக்கதினமாக ஆக்கப்பட்டாலும் வியப்பதற்கில்லை. பரபரப்புகளோ, ஆரவாரங்களோ எதுவுமின்றி, கமுக்கமாக, கபடத்தனமாக, வாழைப்பழத்தில் ஊசியேற் றுவது போல் நடந்துவந்த துக்கதினமாக்க முயற்ச்சி, தற்போது வெளிப்படையான அரசியலாக நடைபெறத்தொடங்கியுள்ளது. இமுயற்சியின் குறிக்கோள் மே18 இன ஒழிவையொட்டி தமிழ்தேசிய மிதவாத பொதுப்புத்தியை உருவாக்குவதேயாகும்.  தமிழீழ ஆதரவாளர்களின் ஒரு பகுதியினர், இப் பொதுப்புத்தியால் ஏற்பட்டுள்ள, ஏற்படவுள்ள அரசியல் தீமைகளைப் புரிந்துகொள்ளத் தொடங்கியுள்ளனர். இதனால், இப்பொதுப் புத்தியை நிறுவனமயமாக்கலுக்கு எதிரான அரசியல் போராட்டமொன்று கூர்மையடைந்து வருகிறது. தமிழ்பேசும் மக்களின் அரசியல் அரங்கில், தமிழ்த் தேசிய மிதவாதத்திற் கெதிரான போராட்டம், சுமார் 25 வருடங்களுக்குப்பின்னர் மீண்டும் ஆரம்பித்து விட்டதற்கான அறிகுறியே இவ் அரசியல் போராட்டமாகும்.
1983இல் இருந்து 2009வரையான காலப்பகுதியில், தமிழீழ அரசியல் அரங்கம், தமிழ்த் தேசிய மிதவாதம் அற்ற அரங்கமாகவே காணப்பட்டது. இக்காலப்பகுதியில், அனைத்து வகைத் தமிழ்த்தேசிய மிதவாதிகளும் தமது அரசியல் நடவடிக்கைகளை நிறுத்திக்கொண் டார்கள் அல்லது ஒழிவுமறைவானதாக ஆக்கிக்கொண்டாரகள், அதாவது தலைமறை வாகச் செயற்பட்டுவந்தார்கள். மே18 இனஒழிப்புக்குப் பின்னால் உருவான அரசியல் நிலை இம்மிதவாதிகள் மீழவும் செயற்படுவதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்தது. தமிழீழத்தின் இரட்சகர்களாக தம்மைக்காட்டிக்கொண்ட இவர்கள் சுதந்திரமாக வலம் வரத் தொடங்கினார்கள். இனஒழிப்பு இவர்களுக்கு வளங்கிய வாய்ப்புக்கள் இரு வகைப்படும். முதலாவது: தமிழீழப் போராளிகள் பாரியஅழிவுக்கும், பின்னடைவுகளுக்கும் உள்ளானமை; இரண்டாவது: தமிழீழ மக்களின் பெருவாரியானோரின் மரணத்தை முன்வைத்து, தமிழீழப் போர்க்குரலை அழுகுரலாக மாற்றக்கூடியதாய் இருந்தது. இவ்விதம் நோக்கில் சாராம்சத்தில் மே18 இனஒழிப்பு நடவடிக்கை தமிழ்த் தேசிய மிதவாதிகளுக்கு ஓர்பெரும் வரலாற்று நன்கொடையாகும். இவர்களுக்கான அரசியல் களம் தங்குதடை எதுவுமின்றி திறந்துவிடப்பட்டதைக் கண்டு மகிழ்ந்து, “நல்லான் செத்தத்து நல்லது நல்லது, நாலுகாசுக்கு நல்லது நல்லதுஎன சாவு ஒப்பாரி மேளம் கொட்டத் தொடங்கிவிட்டார்கள்.   
இவர்களால்-இவ் ஒப்பாரி பாசாங்கர்களால்- வளர்க்கப்பட்டுவரும் துக்கதின’-மிதவாதப் பொதுப்புத்தி இரு விதமான தீங்குகளைக் கொண்டுள்ளது; ஒன்று வரலாற்று வளர்ச்சியைப் பற்றிய மிகத் தவறானதோர் கண்ணோட்டம், மற்றையது மே18 இனப்படுகொலைபற்றிய உண்மை மறைக்கப்படல்; மூன்றாவது இவ் அழிவின்போதான அனர்த்தங்கள் எதற்கும் எதுவித நிவாரணமோ, தீர்வுகளோ ஏற்படுத்தப்படாமை. இவை  மூன்றையும் தனித்தனியாக நோக்குவோம்.
I  முதலாவது தீங்கு: வன்முறைகள்பற்றிய தவறான பார்வை:
I-1) சமூக வளர்தடை வன்முறை:
                         வர்க்கப்போராட்டங்களிலும், தேசிய அல்லது தேசியஇன விடுதலைப் போராட்டங்களிலும் , சாதிய சமத்துவத்திற்கு எதிரான போராட்டங்களிலும், அனைத்து மக்கள் போராட்டங்களிலும் மக்கள் கொத்துக் கொத்தாகக் கொல்லப்படுவது வளமை.
கம்யூனிஸ்டுகளைத் தோற்கடிக்கவும்(இது வர்க்கப் போராட்டம்), யூதர்களை ஒழித்துக்கட்டவும்(இது குருதியின அழிப்பு) பாசிஸவாதிகள் செய்த கொலைகள் சாதரணமானவையா? ஆபிரிக்க எழுச்சியை அடக்கியொடுக்க பிரித்தானியர்களால் நடத்தப்பட்ட போயர் யுத்தத்தின்போது ஆபிரிக்கர்கள்மீது ஏவிவிடப்பட்ட கொலைவெறித் தாக்குதல்கள் சாதாரணமானவையா? அமெரிக்காவை உழைப்புவள நாடாக ஆக்குவ தற்காக ஸ்பெயின் போன்ற நாடுகளால், கடலில் வைத்துக் கொல்லப்பட்ட கறுப்பின மக்களும், பின்னர் அமெரிக்காவில்வைத்து அமெரிக்கர்களால் கொல்லப்பட்ட கறுப்பின மக்களும் மறக்கப்படக்கூடியவர்களா? இந்திய உபகண்டத்தில் ஆரிய ஆக்கிரமிப் பாளர்களால் கொன்றொழிக்கப்பட்டவர்களும், அழித்தொழிக்கப்பட்ட நாகரிகங்களும் மறக்கக்கூடியனவா? இந்திய சுதந்திரத்தின் போது, இந்தியாவில் அரங்கேற்றப்பட்ட இந்து-இஸ்லாம் மோதல் சிறியவிடயமா? 1950களில் இந்தோனேசிய நாடுகளிலும், கொறியாவிலும், அமெரிக்க ஏகாதிபத்தியம் நடத்திய ஈவிரக்கமற்ற கொலைகளும், மனித சித்திரவதைகளும், உயிருடன் இருக்கும்போதே மனித ஈரல்களை வெட்டியெடுத்துத் தின்ற அமெரிக்கக் கொடுமைகள் மறக்கக்கூடியனவா?  1970களில், இந்தோனேசிய அமெரிக்கத் தாசர்கள், இந்தோநேசிய கம்யூனிஸ்டுகளை அழிப்பதற்காக இலட்சக்கணக்கான மக்களை ஓரிருநாட்களில் கொன்று குவித்தது சாதாரணமானதா? இதே காலப்பகுதியில் எகிப்து, சிறியா, லிபியா ஆகிய நாடுகளிலும் இது நடந்தது. சென்ற நூற்றாண்டின் இறுதியில் இராசயன ஆயுதங்களைத் தேடுவதாகக் கூறி, ஈராக்கில் நுளைந்த அமெரிக்க இராணுவம்  நடத்திய அனர்த்தங்கள் கொஞ்சநஞ்சமா? ஆபிரிக்கநாடுகளில் பெருகிவரும் அகதி முகாம்களும், அம்முகாம்களில் நடக்கும் குருதியினப் படுகொலைகளும் சாதரணமான வையா? இறுதியாக, மைமரில் றோஹின்ய இஸ்லாமியர்களுக்கு எதிராக உலகமே கண்டிக்கக்கூடிய முறையில் நடந்த இனப்படுகொலை சாதரணமானதா? சிரியாவில் தற்பொது நடப்பதுவும் இதுதான். ஏற்கனவே வகைதொகையின்றி அரேபியர்களுக்கு எதிரான இன ஒழிப்பில் ஈடுபட்டுவந்த இஸ்ரவேல் தற்போது மீண்டும் அம்முயற்சியில் இறங்கத் தயாராகிவருகிறது. இவ்வித எடுத்துக்காட்டுகளை அடுக்கிக் கொண்டே போகலாம். இவை எடுத்துக்காட்டுவது என்ன?
அனைத்துவகை ஆக்கிரப்பாளர்களும், தமது ஆக்கிரமிப்பில் வெற்றிபெறவும், பெற்றவெற் றியைத் தக்கவைக்கவும், பல்வேறு விதமான மனிதப்படுகொலைகளை நடத்துவது இயல்பானது, அவர்களின் இருத்தலுக்கும் வளர்ச்சிக்கும் இது அவசியமானது. இவ்வித அநர்த்தங்கள் இன்றேல் மூலதனக் குவியல்சாத்தியமில்லை. ஆக்கிரமிக்கப்பட்ட அல்லது ஆக்கிரமிக்கப்படவுள்ள மக்கள் எதிர்த்துப் போராடினாலும்சரி போராடமல் விட்டாலுஞ்சரி, ஆக்கிரமிப்பாளர்கள் மக்களை கொல்வார்கள், இன ஒழிப்புகளை நடத்துவார்கள். இதில் சந்தேகமிருக்க முடியாது, சந்தேகம் இருக்கவும் கூடாது. மூலதனக் குவியலுக்கு அத்தியாவசியமான  இவ்வித வன்முறையை வளர்தடை வன்முறை என்போம்.
I-2) சமூக வளர்திசை வன்முறை:
மறுபக்கத்தில், ஆக்கிரமிப்புக்கு எதிராகப் போராடுபவர்கள் ஆயுதம் ஏந்தாது விடுகிறார் களா? ஏந்த மாட்டார்கள் என எதிர்பார்க்கத்தான் முடியுமா? ஏந்துவார்கள், ஏந்த வேண்டும், ஏந்துகிறார்கள்; இது அவர்களின் விருப்புவெறுப்புக்கு அப்பாற்பட்டது.  “ஒவ்வொரு முதல்வினையும், தனக்கெதிரான சமமான பதில்(எதிர்)வினையைக் கொண்டதுஎன்ற விதி பொய்த்துப்போய்விடுமா என்ன? இவ்விதி பொய்த்துப் போவதை இயற்கை அனுமதியாது. ஆனால், மக்களின் வன்முறை தற்பாதுகாப்பை நோக்கமாகக் கொண்டதே தவிர எவரையும் அழிப்பதை நோக்கமாகக் கொண்டதல்ல. இதை வளர்திசை வன்முறை என்போம். இவ் வளர்திசை வன்முறையானது, வர்க்கஎதிரிகளையும், அனைத்துவகைப் பேரகங்கார எதிரிகளையும் அரசியல் ரீதியாகத் தனிமைப்படுத்தி, அவர்களின் ஆட்சி யதிகார வல்லமையை முறியடித்து, அதற்க்குப் பதிலாக தமது ஆட்சியதிகாரவல்லமையை நிறுவுவதைக் குறிக்கோளாகக் கொண்டதாகும். மூலதனக் குவியலின் பின்னால் நடைபெற்ற வளர்திசை வன்முறைகளுக்கான சில எடுத்துக்காட்டுகளைப் பார்ப்போம்.
ருஸ்யாவில் கம்யூனிஸம் ஆட்சிக்குவந்தபோது(இது தான் உலகின் முதல் கம்யூனிஸ அரசு) ருஷ்யாவில் நடந்த குறுகிய கால உள்நாட்டு யுத்தத்தின் போதும், பாசிஸத்திற்கு எதிராக கம்யூனிஸ்ட் ருஷ்யா நடத்திய போராட்டத்தின் போதும் நடத்தப்பட்ட கொலைகள் சாதாரணமானவையல்ல. இதனால்தான் ஸ்ராலினின் முறுக்குமீசைக்கு உலக முதலாளித் துவமே அஞ்சியது. அதேபோல், சீனக் கம்யூனிஸ்ட் கட்சி, சீனாவில் கம்யூனிஸ்ட் ஆட்சியை அமைப்பதற்காக நடத்திய சுமார் முப்பது வருடகால வரலாறுள்ள சீன உள்நாட்டு யுத்தத்தின் போதும் நடத்திய கொலைகள் சின்னஞ்சிறு சம்பவங்களல்ல. நகர நடுத்தரவர்க்கத்தின் புதிய ஜனநாயக விரோதப்போக்கை அடக்குவதற்காக, கம்பூச்சிய கம்யூனிஸ்ட் கட்சி நடத்திய கொலைகள் வருத்தப்படவேண்டிய அனர்த்தங்களாகும். இந்தோனேசியாவிலும், கம்போடியாவிலும் அமெரிக்கர்களால் ஆக்கிரமிக்கப்பட்ட பூகோளப்பரப்புகளை மீட்டெடுப்பதற்காக இந்தோனேசியாவும், கொரியாவும் நடத்திய படுகொலைகள் உதாசீனபடுத்தக் கூடியதொன்றல்ல. சுமார் எழுபது வருடங்களாகியும் கொறியப் பிரச்சனை இன்னமும் தீரவில்லை. தென்கொரியாவில் இருந்து அமெரிக்கா வைத் துரத்துவதற்காக வடகொரியா ஒரு ஆணுஆயுத யுத்தத்திற்குத் தயாராகவும் உள்ளது. இவ் யுத்தம் மிகப் பெருமளவு அழிவுகளை ஏற்படுத்தும் என்பது உண்மை. அமெரிக்க இதைப்புரிந்துகொண்டு தென்கொரியாவில் இருந்து விலகிக்கொள்ள வேண்டும். அதேபோல், சீனாவில் இருந்து தப்பியோடிய சீன முதலாளிவர்க்க்கம், பிரித்தானியரின் ஆழுமையின் கீழிருந்த ஹொங்ஹொங்கில் சரணடைந்தது, இன்னோர்பிரிவு தைவானில் சரணடைந்தது. தைவான தற்போது அமெரிக்கப் பாதுகாப்பில்(மறைமுகமாக) உள்ளது. ஹொங்ஹொங்கை சீனா ஓரளவிற்கு மீட்டுவிட்டது. தைவான் இன்னமும் மீட்கப்பட வில்லை. அனால், இரு பூகோளப்பரப்புகளையும் மீட்போம் என சூசகமாக அறிவித்துள்ளது. அமெரிக்காவும் ஜப்பானும் தாமாக விலகிக்கொள்ளாது விட்டால், சீனாவின் முயற்ச்சி பேரழிவுகளை ஏற்படுத்தும் என்பது நிச்சயம். அதற்க்கு சீனா பொறுப்பல்ல. எடுத்துக்காட்டுகள் போதுந்தானே? தற்போது தொகுப்போம்.
I- 3) அழிவுகளுக்கு இல்லை நடுவுநிலை:
வன்முறைகள் எவ்விதம் இருவகைப்படுமோ, அதேபோல் அழிவுகளும் இருவகைப்படும். ஒன்று ஆக்கிரமிப்புக்கான அழிவு, மற்றையது ஆக்கிரமிப்பை முறியடிப்பதற்கான அழிவு. மூலதனக் குவியலை பாதுகாப்பதையும், முன்னெடுத்துச் செல்வதையும் குறிக்கோளாகக் கொண்ட(அது தனியார் மூலதனமாக இருக்கலாம், அரச மூலதனமாக இருக்கலாம்) வல்லரசுக்கட்டுமானங்கள் இருக்கும்வரை(அது உலகளாவிய வல்லரசாக இருக்கலாம், பிராந்திய வல்லரசாக இருக்கலாம்.) இருவகையான அழிவுகளும் இருக்கவே செய்யும். முன்கூறியவகையிலான வல்லரசியக் கட்டுமானங்கள் என்று முடிவுக்கு வருகின்றதோ அன்றுதான் மனித அழிவுகளும் முடிவுக்குவரும். ஆகவே உலகில் வாழும் அனைத்து மனிதர்களும் இவ்விருவிதமான அழிவுகளையிட்டும் தனக்கென்று ஒரு நிலைப்பாட்டை எடுத்தேயாகவேண்டும். பேரழிவு விடயத்தில் நடுநிலை வகிக்கக் கூடாதென்பதல்ல, வகிக்க முடியாது. ஏனெனில் இவ்வழிவுகள் ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் நேரடி விளைவுகளை ஏற்படுத்துவது நிச்சயம்.         
I -4) முதலாவது தீங்கு:
                            இவ்விளக்கத்துடன் மே18 பற்றிய துக்கதின’-மிதவாதப் பொதுப் புத்தியின் முதலாவது தீங்கிற்கு வருவோம். வல்லரசுக் கட்டுமானங்களினதும் அதன் எடுபிடிஅரசக் கட்டுமானமான ஸ்ரீ லங்கா அரசினதும், தொடர் நடவடிக்கைகளில் ஒன்றுதான் மே18 நிகழ்வு என்பதை புரிந்து கொள்வதற்கும், புரியவைப்பதற்கும் பதிலாக, இந்நிகழ்வை தனித்ததோர் நிகழ்வாக மட்டும் இனம் காண்பதுவும் இனங்காட்டுவதும்; தமிழீழம் அடக்குமுறையில் இருந்து விடுபடும்வரை இவ்விதமான பேரழிவுகள்  தொடரும் என்பதை புரிந்து கொள்வதற்கும் புரியவைப்பதற்கும் பதிலாக, முடிந்த முடிவாக இதை இனங் காட்டுவதும்; இதன் மூலம், மக்களின் கோபத்தையும் எதிர்ப்புணர்வையும் வளர்ப்பதற்குப் பதிலாக, இறந்தவர்கள் மீதான இரக்கத்தை வெளிப்படுத்தும் ஒரு “அந்திரட்டிச் சடங்கு விழாவாக” நடத்துவதுதான் முதலாவதுவகைக் தீங்காகும். இதை இப்படியேவிட்டால் இவ்வித விழாக்களில் காங்கிரஸ் கட்சியினரும், ராஜ்பக்‌ஷ அணியினரும் கூடக் கலந்துகொள்ளக்கூடும்.

II) இரண்டாவது தீங்கு: உண்மை மறைப்பு
மே18 பேரிழப்பை மனிதஉயிகள் ஒழிப்பு நிகழ்வாக மட்டும் பார்ப்பதுவே இவ் உண்மைமறைப்பாகும். மே18 இனஒழிப்பில் மக்கள் திரள்திரளாகக் கொல்லப்படுதுவும் நடந்தது, அது மட்டுமா நடந்தது. மற்றோர் பேரழிவும் நடந்தது. மே18 களத்தில் தமிழீழ அரசும் மரணித்தது. எவ்விதம்?
அரசு என்பதென்ன? அது ஒரு வன்முறைக் கருவி. சமூகத்தில் ஒரு சாரார் பிறிதோர் சாரர் மீது தமது விருப்பையும் தேவையையும் திணிப்பதற்கான வன்முறைக்கருவி. எந்த அரசாக இருந்தாலும் இதுதான் உண்மை. பொருளாதார வன்முறை, அரசியல் வன்முறை, சிந்தனைவன்முறை, பண்பாட்டுவன்முறை, கருத்தியல் வன்முறை, நிர்வாக வன்முறை, நீதியியல் வன்முறை, சிவில் ஒழுங்கு வன்முறை, கருத்தியல் வன்முறை, அறிவியல் வன்முறை ஆகிய இத்தியாதி வன்முறைகளின் கூட்டுத் தொகுப்புத்தான்(comlex) அரசாகும். மிக நுண்ணிய (sophisticated) கூட்டுத்தொகுப்பான அரசென்ற இவ் வன்முறைக் கருவியின் இருத்தலையும், செயற்பாட்டையும் தீர்மானிப்பது ஆயுதப்படைதான், ஆயுதப்படை மாத்திரந்தான். சமூக வரலாற்றின் அனைத்துக் கட்டங்களிலும் அனைத்து வேளைகளிலும் அரசென்ற இவ் வன்முறைக் கருவியை உருவாக்கியதே ஆயுதப்படைதான், அல்லது ஆயுதப்படையூடாகத்தான். ஆயுதப்படையின் செயற்பாடுகள் தடுக்கவோ அல்லது முடக்கவோ படுமானால் அரசென்ற கருவியின் செயற்பாடு தடுக்கவோ அல்லது முடக்கவோபட்டுவிடும். ஒரு தேசிய இனம் தனது சொந்தத் தனித் தேசத்தை உருவாக்க வேண்டுமானால் அது தனக்கென்றோர் படையைக் சொந்தமாகக் கொண்டிருக்கவேண்டும் அல்லது  அவ்விதமானதோர் படையை சொந்தமாக்கிக் கொள்வதற்கான அரசில்வாய்ப்புக் களைக் கொண்டிருக்கவேண்டும். கத்திலினா தேசம் இரண்டாவதுக்கான எடுத்துக்காட் டாகும். ஒரு வர்க்கம் அல்லது ஒரு தேசிய இனம் தனது எதிரியுடன் நேருக்குநேர் எதிர்த்து நிற்கக் கூடிய ஒரு ஆயுதப்படையை உருவாக்கிவிட்டதென்றால் அதன் அர்த்தம், ஒரு புதிய அரசு உருவாகிவிட்டது அல்லது ஒரு புதிய அரசு உருவாவதற்கான அரசியல் களம் திறக்கப்பட்டுவிட்டது என்பதேயாகும்.
மே18 நிகழ்வின் போது தமிழீழ அரசு என்றோர் வன்முறைக் கட்டுமானம் இருந்து என்பது உண்மை. அது சுமார் 14வருட வரலாற்றைக் கொண்டதாகவும் இருந்தது. இவ் அரசு விடுதலைப்படைகள் எனும் ஆயுதப்படையால் உருவாக்கப்பட்டதாகும். அவ் ஆயுதப்படை மே18 களத்தில் வைத்து தனது துப்பாக்கிகள் மௌனிக்கின்றன எனக் கூறுவதன் அரத்தம் என்ன? தமிழீழ அரசு கலைக்கப்படுகின்றது என்பதுதானே. அயுதங்களை மௌனிக்கச் செய்வதம் மூலம் இயக்கம் கலைக்கப்பட்டது என்று அர்த்தமாகாது. ஆயுதக் களைவு செய்யப்பட்ட அரசியல் அமைப்புகள் மீண்டும் எழுந்துவந்ததற்கான வரலாற்று ஆதாரங்கள் எத்தனையோ உண்டு. ஆகவே புலிகள் இயக்கம் மீண்டும் தளைக்கலாம், மீண்டும் ஒரு அரசு அமைக்கலாம். அது வேறுவிடயம். ஆனால் இருந்த ஒரு அரசு மர்ணித்துவிட்டது. இது தமீழிழ மக்களுக்கு ஒரு பேரிழப்பும், பெரும் தோல்வியுமாகும். இது பௌத்த சிங்கள பேரகங்காரத்துக்கும், இந்திய தேசவிஸ்தரிப்புவாதத்திற்கும் கிடைத்த ஒரு மாபெரும் வெற்றியாகும். தமிழீழ அரசை இழந்துவிட்டோம் என்ற உண்மையை மூடிமறைப்பதுதான் துக்கதின’-மிதவாதப் பொதுப்புத்தியின் முதன்மைக் குறிக்கோளாகும்.
III) மூன்றாவது தீங்கு: நிவாரணங்களுக்கான போராட்டங்களை மழுங்கடித்தல்.
மக்களின் பல்வேறு பகுதியினர் அனைத்துப் பிரதேசங்களிலும் நிவாரணங்களுக்கா பல மாதக்கணக்காகப் போராடிக்கொண்டிருக்கிறார்கள். துக்கதின’-மிதவாதப் பொதுப்புத்தி இப்போராட்டங்களைப் புறந்தள்ளியாதாகவே உள்ளது.
V) மே 18இன் குறிக்கோள்கள்/முழக்கங்கள்
இச் சூழலில் மே 18இன் குறிக்கோள்கள்/முழக்கங்கள் என்னவாக இருக்கவேண்டும்.
அ) மிதவாதத்திற்கு எதிரான அரசியல் போராட்டத்துக்கு அறைகூவல் விடுக்கப் படவேண்டும். துக்கதின’-மிதவாதப் பொதுப்புத்தியை செருப்பால் அடித்துத் துரத்த வேண்டும்.
ஆ) நிவாரணங்களுக்கான போராட்டங்களை (அரசியல்+பொருளாதார+ ஜனநாயக நிவாரணங்கள்) ஊக்கிவிப்பதற்கான முழக்கங்களை முன்னெடுக்கும் நாளாக இருக்கவேண்டும்.
இ) தமிழீழ அரச உருவாக்கத்தை நோக்கிய பயணத்தை தொடர்வதற்கான அரசியல் உந்துதலை ஏற்படுத்தும் நாளாக இருக்கவேண்டும்.
ஈ) ஒப்பாரி மனோநிலைக்கு எதிராக முழங்கவேண்டும். இப்பயணத்தின் போது எதிரியால் ஏற்படுத்தப்படக்கூடிய அழிவுகளைத் தாங்கிக் கொள்ளக்கூடிய மனோநிலையையும், அவனுக்கு அழிவை ஏற்படுத்தும் மனோநிலையையும் வளர்க்கும் நாளாக இருக்கவேண்டும்.
13/05/18

  


Thursday, 6 July 2017

அறவழிப் போராட்டம்- வன்முறைப்போராட்டம் ஒடுக்குமுறையாளர்களின் கற்பிதங்கள்

வரவிருக்கும் அறமும் போராட்டமும்எனும் எனது நூலுக்கான முன்னுரையின் முதல்பகுதி
         சங்கிலித்தொடர் போன்ற முரண்பாடுகளுள் சிக்கித்தவிக்கும் தெற்காசி- யச் சமூகத்தில், எந்தப்பக்கம் திரும்பினாலும் செவிப்பறைகளில் வந்து மோதும் ஒலி அறவழிப்போராட்டம், அறவழிப்போராட்டம், அறவழிப்போரா ட்டம் என்பதாகவே உள்ளது. ஆகவே, இத்தலைப்பைப் பார்த்த உடனேயே இந்நூலும் அறவழிப் போராட்டம்பற்றிதான் பேசப்போகிறதோவென எண்ணவேண்டாம். நிச்சயமாக இல்லை. அறவழிப்போராட்டம் பற்றிப் பேசவில்லை, அது ஒரு கற்பிதமே. அக் கற்பிதங்கள்பற்றி முதலில் பேசுவோம்.
சுதந்திரப் போராட்டத்தின் போதான மூவகைப் போராட்டவடிவங்கள்
பாராளுமன்ற ஜனநாயகத்துக்கு(பா.ஜ.) உட்பட்ட போராட்டம் பா.ஜ-க்குப் புறம்பான போராட்டம் என்று கூறினால் அது புரிகிறது. ஒரு கட்சிப் பா.ஜ. நாடுக ளிலும், பல கட்சிப் பா.ஜ.நாடுகளிலும், பா.ஜ-கத்துக்கு உட்பட்ட போராட்டங்களே குடிமைச் சமூக நியமங்களாக ஆக்கப்பட்டுள்ளன. இந்நாடு களில் ஆளும் வர்க்கங் களும், வர்க்க மேன்நிலையடைந்து வரும் வர்க்கங்களும், இவ்வர்க்கங்களின் அரசியல் கட்சிகளும், மக்கள் பா.ஜ நியமங்களைத்தான் பின்பற்ற வேண்டும் என்பதில் மிகவும் கண்டிப்பாகவுள்ளன, இது ஏனெனப்புரிகிறது. ஆனால் அறவழிப் போராட்டமென அழுத்தி அழுத்திக் கூறப்படுவதேன் என்பதைத்தான் புரிந்து கொள்ள முடியவில்லை. இல்லாத் தொ ன்றை  எவ்விதம் புரிந்துகொள்ளமுடியும்.

          காலனியல் எதிர்ப்புப் போராட்டத்தின்போது தெற்காசிய நாடுகளில் பா.ஜ ஆட்சிமுறை இருக்கவில்லை. காலனியல் இராணுவ எதேச்சாதிகர ஆட்சிமுறையே இருந்துவந்தது. காவனியல் ஆட்சியாளர்களுக்கு மனுப்பண்ணுவதும், மனுப்- பண்ணுவதற்கான மாநாடுகள் கூட்டுவதுமே ஆட்சியாளர்களால் அங்கிகரிக்கப்பட்ட போராட்ட வடிவங்களாக இருந்துவந்தன. இவ்வடிவம் இலாயக்கற்றது எனவுணர்ந்த காலனியல் எதிர்ப்பாளர்கள் தமக்கான சொந்தப் போராட்ட வடிவங்களை உருவாக்கிக் கொண்டார்கள். வடிவங்கள் மாறினாலும் போராட்டங்கள் தொடர்ந்தன.

இவ்விதம் உருவாக்கப்பட்ட வடிவங்கள் மூன்றாகும். ஒன்று காலனியல் வாதிகளிடம் மன்றாடும் மாநாடுகளும் அவர்களுடனான பேச்சுவார்த்தைகளும்; இரண்டாவது எதிரி யின் இரத்தத்தைச் சிந்தவைக்கா ஆயுதங்களற்ற வன்முறைப் போராட்டம்; மூன்றாவது எதிரியின் இரத்தத்தைச் சிந்தவைத்த ஆயுத வன்முறைப் போராட்டம். ஆயுதங்களற்ற வன்முறை ப்போராட்டமானது, இரு பிரதான கிளைகளைக் கொண்டிருந்தது. ஒன்று சத்தியாகிரகிரஹ இயக்கம், மற்றையது சட்ட மறுப்பு இயக்கம். இவை இரண்டும் ஆயுதங்களற்ற வன்முறை இயக்கங்களாகும். ஆயுத வன்முறையாளர்கள் இவ்விரு வடிவங்களையும் ஏற்றுக் கொண்டிருந்தனர். ஆனால் ஆயுத வன்முறைக்கே அதிக அழுத்தம் கொடுத்துவந்தனர். வரலாற்றின் இயக்கப் போக்கில் தனி நபர்களின் பாத்திரம் பற்றிய கோட்பாட்டில் தனிநபர் களை மாத்திரமே தீர்மானகரமான சக்தியாகக் கருதும் எம்.கே.காந்தி அவர்கள் சத்தியாகிரகப் போராட்டத்திற்கே அதிக அழுத்தம் கொடுத்தார். சட்டமறுப்பு இயக்கமோ மக்கள்திரளின் மனஉறுதியைச் சார்ந்திருந்தது, சத்தியாகிரக இயக்கமோ தனிநபர்களின் மனஉறுதியைச் சார்ந்திருந்தது. 
காந்தியின் தனிநபர் முதன்மை வாத சிந்தனைக்கு சத்தியாகிரக வடிவமே இசைவானதாக இருந்தது.

பயங்கரவாதப் போராட்டக் குணாம்சங்களின் அடிப்படை, அவை தனிநபர் முதன்மைவாத சிந்தனையை மூலமாகக் கொண்டிருப்பதேயாகும். இவ்விதம் நோக்கில் தனிநபரை மையமாகக்கொண்ட சத்தியாகிரகமும் ஒரு பயங்கரவாதப் போராட்டந்தான். இரத்தஞ்சிந்தா பயங்கரவாதிகள் (அஹிம்சா வாதிகள்), தம்மை வதைத்துக்கொள்வதன் மூலம் அரசியல் அழுத்தத்தை உருவாக்குகிறார்கள். இரத்தஞ்சிந்தும் பயங்கரவா திகளோ தம்மையும் பிறரையும் வதைப்பதன் மூலம் அரசியல் அழுத்தத்தை உருவாக்குகிறார்கள், இருவகைப் பயங்கரவாதிகளும் மக்களின் போராடங்களுக்கு எதிரானவர்கள். 
சத்தியாகிரஹிகள், பயங்கரவாதிகள் ஆகிய இருசாராரும் தனிநபர்-முதன்மைவாத சிந்தனையாளர்களே.

காங்கிரசின் தோற்றத்தின் பின்பான காலனியல் எதிர்ப்புப் போராட்டக் காலத்தில் மனுப்பண்ணுதல், சத்தியாகிரகத்தையும் உள்ளடக்கிய சட்ட மறுப்பு, ஆயுதப்பயன்பாடு ஆகிய மூன்றுவகை வடிவங்களும் இந்திய அளவில் ஒருமுகப்படுத்தப்பட்ட போராட்ட வடிவங்களாக இருந்துள்ளன. அதேகாலப்  பகுதியிலும், அதற்க்கு முன்னைய காலப்பகுதியிலும், நிலப்பிரபுவத்துவ எதிர்ப்பு ஆயுதப்போ ராட்டங்களும், மக்கள்திரள் ஆயுதக்கிளர்ச்சிகளும் பெருமளவில் நடைபெற்றுள்ளன. கதர்புரட்சி இதற்கோர் சிறந்த எடுத்துக் காட்டாகும். இம்மூன்று வடிவங்களுள், ஆயுதப்போராட்ட வடிவத்தை தனிமைப்படுத்துவதற் காகவும், பிறமக்கள்திரள்ப் போராட்டங்களைக் கட்டுக்குள் வைத்திருப்பதற் காகவும் வன்முறைப் போராட்டம் என்றோர் பதம் உருவாகப்பட்டு, அது கெட்ட சொல்லாகவும் அடையாளப்படுத்தப்பட்டது. காலனி-யல் ஆதிக்கவாதிகளும் இதை ஆதரித்தார்கள். பின்னர் இக் கெட்டசொல்லுக்கெதிராக இன்னோர் சொல் உருவாக்கப்பட்டது. அது புனிதமானதென அடையாளப் படுத்தப்பட்டது. அச்சொல்தான், அறவழிப் போராட்டமாகும். இப்பகுப்பு அன்று ஓரளவிற்குப் பொருத்தமானதாக இருந்தது. ஆனால், இன்று அது எந்தளவுக்கும் பொருந்தமற்றதாகிவிட்டது

காலனியல் சகாப்தத்தின் வீழ்ச்சிக்குப் பின்னரான அல்லது முதலாளித்துவ ஜனநாயகத்தின் உலகளாவிய விஸ்தரிப்பின் பின்னரான போராட்ட வடிவங்களை பயங்கரவாதம்/தீவிரவாதம்/றடிகலிஸம் என அடையாளப்படுத்துதல் மேட்டுக்குடி- யோர் மாட்டேயான பொதுவழமையாக இருந்துவருகிறது. இப்பதங்கள் உலகளவில் அனைத்து ஒடுக்குமுறையாளர்களாலும் ஏற்று- க்கொள்ளப்பட்டுள்ளன. ஆனால் மக்களின் போராட்ட வடிவங்களை அடையாளப்படுத்த உலகளவில் ஏற்றுக்கொ- ள்ளப்பட்ட பொதுப்பதம் எதுவுமேயில்லை. மக்கள் யுத்தம், மக்கள்திரள் போராட்டம், அமைதிவழிப் போராட்டம் வெகுஜன எழுச்சிகளென பற்பல பதங்கள் உள்ளன. இருந்தும் அவை, அறவழிப்போராட்டம் என்ற பதத்தால் அறிமுகப் படுத்தப்ப டுவதில்லை. இந் நிலையும், இதற்கான அரசியல் காரணங்களும் புரிகிறது.

அறப்போராட்டம், அறவழிப்போராட்டம் என்பதென்ன?

அப்படியொன்று உள்ளதாகத் தெரியவில்லை. அதேபோல் வன்முறைப் போராட்டம் என்பதென்ன? வன்முறையில்லா அல்லது வன்முறையைத் தவிர்த்த போராட்டம் என்றொன்று இருந்தால்தானே வன்முறைப் போராட்டம் என்றொன்று இருக்கும். வன்முறையில்லாப் போராட்டம் ஏதாவது உண்டா? பாசாங்குப் போராட்டங்களைத் தவிர அனைத்து வகைப் போராட்டங்களும் தம்மட்டில் தாமே ஒரு வன்முறைதான்.

நிலத்தில் புதைக்கப்பட்ட விதை தனது முளையை வெளியே தள்ளுவதற்-காக நிலத்துடன் ஜீவமரணப்போராட்டம் நடத்துகிறது. இது நிலத்திற்கு எதிரான வன்முறை. முட்டைக்குள் முடங்கிக்கிடக்கும் குஞ்சு தான் வெளியே வருவதற் காக இதுவரை தன்னைப் பாதுகாத்துவந்த தனது ஓட்டுக்கு எதிராகப் போராடுகிறது. இது ஓட்டுக்கு எதிரான வன்முறை. இதை நம்பிக்கைத்- துரோகமென யாரும் சொல்வதில்லை. தாயின் கர்ப்பப்பையில் இருக்கும் குழந்தைப் பாலூட்டிகள் அதிலிருந்து வெளிவருவதற்காக கர்ப்பப்பை வாசலை இறுக மூடியிருக்கும் தசை நார்களுக்கு எதிராகப் போராடுகின்றன. இது தாயின் கர்ப்பப்பைக்கு எதிரான வன்முறை. இதைத் தாய்த்துரோகமென யாரும் சொவதில்லை. பறைவகள், நாலுகால் பிராணிகள், மனிதர்கள் ஆகிய இனங்களைச் சேர்ந்த எந்தத் தாயானாலும் தனது குஞ்சை, குட்டியை, குழந்தையைத் தாக்கவரும் எதிரிக்கு எதிராக கிளர்ந்தெழுந்து போராடுகின்றன. இது ஆபத்து விளைவிக்கும் அந்நியருக்கு எதிரான வன்முறை. தாவரங்கள் தமது இனத்தைப் பெருக்குவதற்காக தமது வித்துக்களை இயற்கையிடம் இருந்து பாதுகாக்க வித்துக்களுக்கு எத்தனை கவசங்களை வழங்கியுள்ளன. இவை இயற்கையின் பிற அங்கங்களுக்கெ திரான வன்முறை. அனைத்து விலங்குகளினதும் அவயங்களும் (உடல் உறுப்புகளும்) அவற்றின் தற்காப்புக்கும், பிற உயிரிப் பொருட்களைத் தாக்குவதற்கான ஆயுதங்களாகவும் பயன்படுத்த ப்படுகின்றன. இது தமக்கு எதிரானவர்க ளுக்கெதிரான வன்முறை. இப்போராட்டங்களில் எது அறவழிப்போராடம், எது வன்முறைப் போராட்டமெனப் பிரித்துக் காட்டமுடியுமா?

பிற உயிர் வாழ்வனவற்றிற்குப் பொருந்தக்கூடிய இக்கேள்வி, மனிதனுக்குப் பொருந்தாதெனெ விவாதிக்கலாம். மனிதர்கள் மட்டும்தான் சமூக-விலங்காக வாழும் நிலையில், இல்-சமூக விலங்கின வாழ்க்கையை சமூக விலங்கின வாழ்க்கையுடன் ஒப்பிடவே முடியாதென்றும், சமூக விலங்கினமான மனிதர் தமக்கென்று தனியான அறத்தை உருவாக்க வேண்டிய அவசியத்தில் உள்ளார்க- ளென்றும் கூறலாம். ஏற்றுக்கொள்ளக்கூடிய விவாதந்தான். ஆனால் மனிதர் சமூக விலங்குகளாக மாறும் நிகழ்வு இன்னமும் முழுமையடையவில்லை யென்பதையும் கணக்கில் கொள்ள வேண்டும்.

வெளிப்பாடு 1

மனிதர்களின் அத்தியாவசிய, உடல் தேவைகளான பசி, தாகம், காமம் ஆகியன நிறைவேற்றப்படாத வேளையில் தோன்றும் உடல் உபாதைகளால் பத்தையும் (சமூக-அறங்கள்) மறந்திவிடும் மனித இழிநிலை, காமவெறியின்போது மனிதத்தன்மையை முற்றிலும் இழந்துவிடும் நிலை. மண்-பொன்-பெண் ஆசைகள் எல்லை மீறும்பொது மனிதர்கள் விலங்குகளாக மாறுதல், ஆகியவை மனிதர்கள் இன்னமும் இல்-சமூக விலங்கியல் குணாம்சத்தை வெளிப்படுத்தி வருவதை மறுக்க முடியுமா? இன்றைய சமூக-விலங்கின மனிதர்கள் தமது முன்னோர்களான இல்-சமூக விலங்கின மனிதர்களின் மரபணுக்களை இன்னமும் காவித்திரிவதை மறுக்கமுடியுமா?  இத்தகைய உணர்வுகளால் உந்தப்பட்டு நடைபெறும் போராடங்களின்போது வன்முறையின்மையை எதிர்ப்பார்ர்க முடியமா? பாதிப்பை ஏற்படுத்துபவர்களும் வன்முறையில் ஈடுபட்டுவருகிறார்கள், பாதிக்கப்பட்டவர்களும் வன்முறையில் ஈடுபட்டுவருகிறார்கள்.

வெளிப்பாடு 2

சமூக மனிதனென்ற முறையில் மனிதர்கள் தனித்தனியாகவோ அல்லது குழுமங்களாகவோ நடத்தும் போராட்டங்களும் இவ்விதமானதாகவே உள்ளன. ஒவ்வொரு தனிமனிதரும் தம்தமது வாழ்க்கையில் முன்னேறுவதற்காகவும், தனதும், தனது குடும்பத்தினதும் சமூக-பொருளாதார நிலையை உயர்த்துவதற்- காகவும் அல்லது இருக்கும் நிலையை தக்கவைப்பதற்காகவும் தம்மால் இயன்றவரை போராடி வருகின்றார்கள்.

இப் போராடங்களை அறவழிப் போராட்டமென்றோ, வன்முறைப் போராட்டமென்றோ தனித்தனியாக வகைப்படுத்தலாமா? ஒவ்வொரு போராளியும் ஒரு அறநெறியைப் பின்பற்றவே செய்கிறார். தனது அறநெறி வினைத்திறன் மிக்கதா இல்லையா என்பதை எதைக்கொண்டு அவர் அளவிடுகிறார்? தனது முன்னேற்றத்திற்கு அது துணைபுரிகின்றதா இல்லையா என்பதை வைத்துக்கொண்டுதான். பெரும்பான்மை யோரின் நிலை இதுதான். சமூக நலனை உரைக்கல்லாகக் கொண்டு அது முற்போக்கா, பிற்போக்கா வென அளவிடுபவர்கள் மிகச் சிலரே. அச் சிலர் சமூக ஆர்வ லர்களென அழைக்கப்படுகிறார்கள். ஆகவே ஒவ்வொருவர் நடத்தும் போராட்டத்திலும் ஒரு அறநெறி உண்டு. லஞ்சம்வாங்குவதும் கொடுப்பதும்கூட, அறமாக கருதப்பட வில்லையா? இன்றைய நிலையில் இது அதிகளவினர் ஏற்றுக்கொண்ட அறமாக உள்ளது.

அதுபோல், ஒவ்வொரு போராட்டத்திலும் ஒரு வன்முறை உண்டு. அதை வைத்துக்கொண்டு அப்போராட்டத்தை வன்முறைப்போரட்டமெனக் கூற முடி-யாது. ஏனேனில், ஒவ்வொரு போராட்டங்களும் தன்மட்டில் தானேயொரு அறமாகவும், தானேயொரு வன்முறையாகவும் உள்ளது. அறமில்லாத போராட்டமுமில்லை. வன்முறையில்லாத போராட்டமுமில்லை. எந்தவொரு போராட்டத்திலிருந்தும் அறத்தையும் வன்முறையையும் தனித்தனியாகப் பிரித்தெடுக்க முட-யாது. H2Oவில் இருந்து Hஐப் பிரித்தாலும் சரி, Oவைப் பிரித்தாலும் சரி H2O இல்லாமல் போகும். ஆனால் Hஉம், Oவும் அழியாது. ஆனால், எந்தவொரு போராடத்திலிருந்தும் அறத்தைப் பிரித்தாலும் சரி, வன்முறையைப் பிரித்தாலும்சரி, போராடம் அழியும். போராட்டம் இன்றேல் அறமுமில்லை, வன்முறையும் இல்லை.

மனிதர்கள் குழுமங்களாக நடத்தும் போராட்டங்களின் நிலையும் இதுதான். ஆகவே போராடத்தில் பொதிந்துள்ள அறமும், வன்முறையும் எத்தன்மை பெற்றது என்பதுதான் கேள்வியாக அமைகிறது. அதைப் பொறுத்துத்தான் போராட்டங்கள் வகைப்படுத்தப்படுகின்றன. இதனால், இந்நூல், அறவழிப்போராட்டம், வன்முறைப்போராட்டமெனும் கற்பித்தங்க ளைப்பற்றி இங்கு பேசவரவில்லை.
நூலின் பேசு பொருள்

மாறாக, அறமும் போராட்டமும் எனும் இந்நூல், இருவிடயங்களைப் பற்றிப் பேசுகிறது. ஒன்று, இந்திய உபகண்டத்தில் அறத்துக்காக நடந்த போராட்டங்களின் வரலாற்றையும், அப்போராட்ட வழிமுறைகளையும், அப்போராட்டங்களின் தத்துவார்த்தப் பின்னணியையும் பற்றிப் பேசுகிறது. இரண்டாவது, ஒவ்வொரு போராட்டங்களிலும் பொதிந்திருந்த, பொதிந்திருக்கும் அறங்களை ஆய்வுக்கு உள்ளாக்குகின்றது.

எந்தப் போராட்டமாயினும் சரி, அப்போராட்டத்தின் வழிவகைக்கும் கூட ஒரு அறமுண்டு. அப்போராட்டத்தின் குறிக்கோளும் ஒரு அறத்தை உருவாக்கவ- தாகவே அமையும். வன்முறை ஒரு வழிவகைதான். அவ்வன்முறைக்கும் ஒரு அறம் உண்டு. எல்லா அறமும் ஒன்றல்ல. நல்லறம், தீயறமென இருவகைகள் உண்டு. அதுபோல், இரத்தம் சிந்தும் வன்முறையானாலும் சரி, சிந்தா வன்முறை- யானாலும்சரி, அனைத்து வன்முறைகளும் ஒன்றல்ல, அவையும் இரு வகைப்படும்.

சமூக நலனுக்கும் மக்களின் நலனுக்கும் நன்மை விளைவிக்கும் வன்முறை; இவ் இரண்டிற்கும் தீமை விளைவிக்கும் வன்முறை, மக்களின் பிரச்சனைகளைத் தீர்ப்பத ற்கான வன்முறை; மக்களின் பிரச்சனைகளைக் குழப்புவதற்கான வன்முறை, சமூக சமநிலையை மக்களுக்குச் சாதகமாக மாற்றியமைப்பதற்கான வன்முறை; மக்களுக்குப் பாதமான சமூக சமநிலையை தக்கவைப்பதற்கான வன்முறை; மக்களின் சமூக வளர்ச்சிக்குச் சாதகமானதொரு சமூகசூழலை தோற்றுவிப்பதற்கான வன்முறை; வளர்ச்சிக்குத் தடையான சமூகசூழலை ஏற்படுத்துவதற்கான வன்முறை என வன்முறைகளை வெவ்வேறு சோடிகளாகப் பிரிக்கலாம்.

நல்லறம், தீயறமென பெயர்கள் உள்ளதுபோல், வன்முறைகளை வகைப்- படுத்துவதற்கான தனித்தனியான பெயர்கள் உண்டா என்பது தெரியவில்லை. சாதாரண வார்த்தைகளில்: மக்கள் வன்முறை- மக்கள் விரோத வன்முறை என்றோ; நன் வன்முறை - கொடூர வன்முறை என்றோ; மதப் பிரயோகத்தில்: ஆசிர்வதிக்கப்பட்ட வன்முறை - சபிக்கப்பட்ட வன்முறை என்றோ அழைக்கலாம். புத்திஜீவ மதப்பிரயோக த்தில்: வளர்திசை வன்முறை, வளர்தடை வன்முறையென அழைக்கலாம். மக்களுக்குப் பழக்கமான மொழியில் சொல்வதானால் எம்.ஜி,ஆர். (கதாநாயகன்) வன்முறை – நம்பியார் (வில்லன்) வன்முறை என அழைக்கலாம்.

இந்நூல், போராட்டங்களின் ஆக்கக்கூறுகளில் ஒன்றான அறம் பற்றித்தான் பேசுகிறதே தவிர மற்றோர் ஆக்கக்கூறான வன்முறைபற்றி விரிவாகப் பேசவில்- லை. அறத்தையும் வன்முறையும், ஒன்றின் இருத்தலை மற்றொன்று நிராகரிக் கும் இரு துருவங்களாகப் பார்க்கும் பொதுப் புத்தியை நூல் நிராகரிக்கிறது. மாறாக, இவ்விரண்டையும் ஒன்றின் இருத்தலை மற்றொன்று வேண்டி நிற்கும் காந்தத்தின் இரு முனைகளாகவே பார்க்கிறது என்பதை முன்னுரையில் கூறுவது அவசியமானதாக உள்ளது.

அறம், வன்முறை ஆகியனபற்றிய பொதுப்புத்தியில் இருந்து விலகி நின்று வாசிக்கவும்.



In Defense of Communism: KKE statement on the developments in Afghanistan

In Defense of Communism: KKE statement on the developments in Afghanistan : Concerning the developments in Afghanistan and the resurgence o...