Tuesday 30 April 2019

Quebec makes right move to separate church and state


Quebec makes right move to separate church and state
By Mu Lu Source:Global Times Published: 2019/4/2 21:48:40
4

Quebec has introduced secularism legislation that would forbid civil servants from wearing religious symbols at work. The decision would influence judges, prosecutors, police officers, teachers, and some other positions, according to the BBC. This is a correct legislative direction to ensure the separation of church and state.

The legislation, which the local government hopes to pass by summer, has sparked controversy and was criticized by Canadian Prime Minister Justin Trudeau. However, the move is, in fact, conducive to Quebec which has diverse religious inhabitants. Preaching religion in public spaces, especially by public servants, will inevitably affect the separation of church and state and might spark dissatisfaction from other religious believers or atheists, and even lead to conflicts between religious and nonreligious people.

Keeping the church and state separate is in keeping with the long-term stability of a modern country and, in particular, it's a key factor that ensures that Western countries can achieve modernization and maintain the stability of their societies.

It has also been a trend in some Western countries to control religious appearances in public places. For example, in 2010, the French government passed a ban on wearing full-face veils. In the US, arguably the freest country in the world, no nativity scenes or Buddha statues can be displayed in government buildings or in front of schools, although almost all of its people have a religious belief. Moreover, crosses have been torn down in parks in the US.

However, in general, with the global return of religion, the Western policy of separation of church and state has been seriously challenged. Different religions have tried to influence politics and continue to invade the public sphere, shaking the foundation of Western social stability.

Perceiving the importance of the separation of religion and state, the Chinese government has taken measures to promote secularization in the past years so as to protect social stability and prevent the penetration of religious fundamentalism.

Religious symbols were barred in China's public service system many years ago. Chinese authorities also demanded that religious activities be conducted in specific places approved by the relevant administrative departments. There are exceptions that need exceptional approvals.

Some Western officials and media outlets are fond of smearing China's efforts on the separation of church and state while ignoring that their own society faces the same challenge, and their governments must ultimately make the same choice. This is the best protection for the rights of a wider range of people of different faiths.

For example, in Northwest China's Xinjiang Uyghur Autonomous Region, public servants were asked in late 2018 to speak Putonghua - the country's common language - in public spaces and at workplaces. The BBC used this as an example to try to prove that China is cracking down on Islam in the region. BBC is wrong. Because asking public servants to speak the official language in the workplace is a basic principle of a modern society on the separation of church and state. This is not suppression of a certain religion, but keeping the principle of separation of church and state. It is similar to Quebec's recent legislation move.

All that China has done and is doing in religious affairs serves the goal of maintaining stability in society. China is not a religious country but there are about 200 million religious people in China - three times the population of France. Thanks to the efforts of Chinese authorities, the country was able to keep stable and rapid development on track, providing people, including religious people, improved
living standards and a more harmonious living environment.
http://www.globaltimes.cn/content/1144480.shtml?fbclid=IwAR0UVOqtg-S6DhkBRCcLZVL16RIs1pUzGI26PZ3LcBLiCSKI3DVg0708W-I

Monday 29 April 2019

விடியலின் மே தினச் சூளுரைகள்


மே தினச் சூளுரைகள்

பாட்டாளி வர்க்க எழுச்சிக்கான அடையாள நாளான மே தினத்தில் ” “விடியலும்” தனது நிலைப்பாட்டை முன்வைக்கின்றது.
 தத்தமது நாடுகளில் பாட்டாளிவர்க்க சர்வாதிகார அரசை  நிறுவியுள்ளவர்களுக் கும்,  நிறுவும் முயற்சியில் அரசியல் அமைப்புரீதியாக ஈடுபட்டு வருபவர்களுக்கும், அரசியல் அமைப்புரீதியாக இல்லாவிட்டாலும் குழுக்களாகவும், தனிநபர்களாகவும் நிலவும் பாட்டாளிவர்க்க சர்வாதிகார அரசுகளின் செயற்பாடுகளுக்கும், அவ்வித அரசை நிறுவுவதற்கான முயற்சிகளுக்கும் ஆதரவாகச் செயற்பட்டு வருபவர்களுக்கும் “விடியல்” தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதுடன் தனது நேசக்கரங்களையும் நீட்டுகிறது.
தம்மை சோஷலிஸ்டுகளாகக் கூறிக்கொண்டும், தாம் அவ்விதம் இருப்பதாகக் காட்டிக் கொண்டும் இருப்பவர்கள் ஏராளம். இன்றைய தெற்காசிய சூழலில், ஒரு சோஷலிஸ்டின் பிரதான செயற்பாடு வர்க்க சர்வாதிகார அரசின்  அமைவில் பங்களிப் -பாளனாக இருக்கவேண்டும் என்பதேயாகும். உலகின் எப்பகுதியை எடுத்துக் கொண்டா -லும் இதுதான் ஒரு சோஷலிஸ்டின் அடிப்படைக் குணாம்சமாகும். ஆனால், இவ் அடிப்படைக் குணாம்சம் தெற்காசியாவில் பிரதான குணாம்சமாகவும் ஆகியுள்ளது. ஆகிவருகிறதெனக் கூறினால் அது மழப்பல்வாதமாகும், ஆகியுள்ளது என்பதே உண்மை -யாகும். இதனால் தான், ‘விடியல்தெற்காசிய அரசியலின் சிந்தாந்தக் கட்டுமானம் ஓரியல்மைய ஐந்தியல் கோட்பாடுஎனும் கோட்பாட்டை முன்வைத்து வருகின்றது. இங்கு மைய இயல் என்பது சோஷலிஸம் (பாட்டாளிவர்க்க இயல் எனவும் கூறலாம்); பிற ஐந்து இயல்களும்:-
1. நாடடுப் பற்றியல் (Patriotism)
2. தேசிய இயல் (Nationalism)
3. சாதிய ஒழிப்பியல் (Cast eradionism)
4. மதச் சார்பின்மை இயல் (Secularism)
5. பெண்ணியம் (Feminism)
தெற்காசியா, இவ் அறுவகைப் போராட்டத்தின் கொதிகலனாக இருப்பதை யாரும் மறுக்க முடியாது.
இதைவிட, சுற்றுச் சூழல் பாதுகாப்பியல் (environment protectionism) எனும் ஒரு கோட்பாடும் உண்டு.
சுற்றுச் சூழலைப் பாதுகாப்பதற்கான போராட்டமும் முக்கியத்துவம் மிக்கதோர் சமூக இயக்கமாகும். ஆனால், இவ் போராட்டம் சோஷலிஸத்தை தனது மையவியலாகக் கொள்ளவேண்டுமென்பது கட்டாயமல்ல. இவ்விதம் இல்லையானால் இப்போராட்டம் வளர்தடைத் திசையை(Negative) நோக்கிச் செல்லுமென அஞ்சவேண்டியதுமில்லை. வர்க்க சார்பற்ற இயற்கை ஆர்வலர்களும், மிதவாத(Moderate) பூர்ஷவாக்களும், இப் போராட்டத்தை வளர்திசைத்(Positive) தன்மை பெற்றதாகப் பாதுகாத்து வருகிறார்கள், தொடர்ந்தும் பாதுகாத்து வருவார்கள். இப்போராட்டம் ஒரு அரசியல் அதிகாரவர்க்கத்தை தோற்றுவிக்காது என நம்பலாம்.
ஆனால், ஏனைய ஐந்தியல் மையப் போராட்டங்களும் அவ்விதமானவை யல்ல. இவை இரட்டைத் தன்மை பெற்றவை; வீரியமிக்க வளர்திசைக் குணாம்சங் -களும்,  சமூகத்தின் வளர்ச்சியை சிதைத்து சின்னாபின்னமாக்கும் வளர் தடைக் குணாம் -சங்களும் கொண்டவை; மக்களில் பெரும்பான்மையோரை தம்மை நோக்கி ஈர்க்கும் தன்மையும் கொண்டவை; இவ் ஐந்தியல்களும் ஒன்றைவிட்டு இன்னொன்றைப் பிரிக்க முடியாதளவு நெருக்கமான உறவு கொண்டவை;  மக்களைத் தம்மை நோக்கி, ஈர்ப்பதில் இவ் ஐந்து இயல்களும் பெரும் முற்போக்கு பாத்திரம் வகித்தாலும், இவ் ஈர்ப்பு வர்க்க பேதங்களைக் கடந்ததாக இருப்பதால் இவ் ஐந்தியல் போராட்டங்களும் வளர்தடைத் தன்மைபெறுவதுவும் துரிதமாக நடைபெறத் தொடங்குகிறது. இவ் வளர்த்தடைத் தன்மை படிப்படியாக மக்கள் விரோத, சோஷலிஸ விரோத புதிய அரசியல் அதிகார அடுக்கு -களைத் தோற்றுவிக்கின்றது. இவ்ஐந்தியல் போராட்டங்களும் வளர்ததடைத் தன்மை பெறுமானால், தெற்காசிய சமூகத்தின் முற்போக்கு இயக்கங்கள் அனைத்துமே செயலிழந் து, இச் சமூகம் பிற்போக்கியங்களின் விளைநிலமாகிவிடும். சோஷலிஸத்திற்கான போராட்டமும் கூட மந்தகதி அடைந்து விடும். 
1960களின் பின், அதாவது சோஷலிஸத்தின் உலகளாவிய வீழ்ச்சியின் பின், அதைத் தொடர்ந்து அமெரிக்க-ஐரோப்பிய ஏகாதிபத்தியங்கள் உலகளாவிய அளவில் வெற்றிபெற் -றதன் பின், இவ் ஐவகைப் போராட்டங்களினதும் வளர்தடைத் தன்மை துரிதமாக வளரத்தொடங்கியுள்ளது. ஏகாதிபத்தியங்கள் இவ்வளர்ச்சியை ஊக்குவித்து வருகின்றன. ஆப்ரிக்காவும் தெற்காசியாவுந்தான் அதிக பாதிப்புக்கு உள்ளான பகுதிகளாகும். இவ் ஐந்தியல் போராட்டங்களையும் மீளவும் சோஷலிஸத்துக்கான போராட்டங்களின் நண்பர்கள் என்ற நிலைக்கு கொணரவில்லையானால், இவ் ஐந்தியல்களும் சமூகவிரோத வெறித்தனங்களாக மாற்றமுறும்.
1) ஆக்கிரமிப்பு எதிரர்ப்புத் தன்மை கொண்ட நாட்டுப்பற்றியல், ஆக்கிரமிப்பியலாக, நாடுகளுக்கு இடையேயான யுத்தவியலாக மாறும்.
2) மக்கள் ஜனநாயகத் தன்மைகொண்ட தேசிய இயல் இனவியத் தேசிய (ethno nationalism) வெறியாக மாறும்.
3) மதவாத நிராகரிப்பு மதசார்பின்மை இயல்.
(அ)  வரட்டுத்தனமான கடவுள் நிராகரிப்புக் கோட்பாடாக மாறலாம் (இன்றைய தி.க), அனைத்து மதங்களையும் நிராகரித்து அனைத்துப் பிரிவினரையும் ஒன்றிணைக்கூடிய ஒரு புதிய மதவாத இயக்கம் ஒன்று உருவாகலாம். (இவ்விதம் தோன்றிய மதவாத மதசார்பின்மை இயல் தான் இஸ்லாம்),
(ஆ) அலலது மதச் சீர்திருத்த இயக்கங்கள் உருவாகலாம். (சித்தாத்தரின்-பௌத்தம், விபுலானந்தர், வள்ளலார் ஆகியோர்) இவை காலப் போக்கில் புதிய மதவாதிகளை உருவாக்கலாம்.
4) சாதிய ஒழிப்பியல்                                                    (அ) ஒடுக்கப்பட்ட சாதியினரிடையே இருந்து ஒரு மேட்டுக்குடி உருவாகும். இம் மேட்டுக்குடி ஒட்டுமொத்த சாதியக் கட்டுமான மேட்டுக்குடியுடன் தன்னை இணைத்துக் கொள்ளும். இவர்கள் மெள்ளமெள்ள சாதிய ஒழிப்பினைக் கைவிட்டு சாதிய சமத்துவஇயலை நோக்கி வேகமாக பயணிப்பார்கள். சாதிய சமத்துவ இயலின் மறுபக்கம் சாதிகள் இருக்க -வேண்டும்  என்பதாகும். பாராளுமன்ற அரசியல் மேட்டுக்குடிகளாகவர எத்தனிக்கும் (பலர் அதில் வெற்றி பெற்றுள்ளார்கள்) அனைத்துத் தலைவர்களும் இவ்விதமானவர்களே.
ஆ) ஒடுக்கப்பட்ட சாதியினரில் ஓரிரு பிரிவினர் தாமே ஒடுக்கும் சாதிப்பிரிவினராக மாறுவது.
5) பெண்ணியம்:- முதலாளித்துவம் மனம், உடல், உட்பட அனைத்தையும் வர்த்தகப் பண்டமாக்கி விடுவதில் மிகப்பெரும் வெற்றிபெற்று வருகிறது. காதலும், காமமும், “பெண்மையும்இதற்கு விதிவிலக்கல்ல. இவ் வர்த்தகத்தில் பெண்கள் சுயமாகவும் சுதந்திரமாகவும் ஈடுபடும் உரிமை வேண்டுமெனும் கருத்தும் பெண்ணியத்தின் ஒரு போக்காக வளர்ந்து வருகிறது. இது தடுக்கப்படவேண்டும்.
தந்தைவழி சமூகத்தால் திணிக்கப்பட்ட விகாரக் காமத்தையும், பாலிய வன்முறைகளயையும், பாலிய சமத்துவமின்மையையும் சமூகத்தின் அனைத்து அரங்குகளிலும் உடைத்தெறிவதே பெண்ணியத்தின் பிரதான குறிக்கோளாக இருந்த நிலை தொடரவேண்டும்.

சோஷலிஸ்டுகளின் தெற்காசியச் சமூகக் கடமையாக விடியல்பின்வரும் சூளுரைகளை முன்வைக்கின்றது.

1) சோஷலிஸ சிந்தனையையும், சோஷலிஸ சமூக சக்தியையும் வளர்த் தெடுப்ப -தையே எமது பிரதான உடனடிக் கடமையாகக் கொண்டு செயற்படுவோம்.
2) முன்கூறிய ஐந்து இயல்களுக்கான அணிகளுள் உள்ள சோஷலிஸட் எதிர்ப்புச் சக்திகளுக்கு எதிராக எதுவித சமரசமின்றி கருத்தியல் மற்றும் அரசியல் போராட்டங் -களை முன்னெடுப்போம்.
சோஷலிஸ்ட் அல்லாதவர்களுக்கு எதிராகவல்ல, சோஷலிஸ எதிர்ப்பாளர்களுக்கு எதிராக, அனைத்துப் பிற்போக்குவாதிகளுக்கும் எதிராகவல்ல, சோஷலிஸ எதிர்பாளர் -களுக்கு எதிராக என்பதை மீண்டும் வலியுறுத்துகிறோம்.
3) (அ) சாதி ஒழிப்பியல், பெண்ணியம் ஆகிய இரு துறைகளிலும் சோஷலிஸ்டுகள் தமது தலைமையிலான போராட்ட இயக்கங்களை அமைப்பதற் கானசமூக சூழல் உண்டு. அதைப் பயன்படுத்திக் கொள்வோம்.
   (ஆ) ஆனால் ஏனைய மூன்று துறைகளிலும் அதற்கான சமூக சூழல் இன்னமும் பரலாகத் தோன்றவில்லை. ஆகவே எது சாத்தியம், எது சாத்தியமில்லை என்பதையிட்டு விடியலால் எதுவும் கூறமுடியாதுள்ளது. இம் மூன்று அணிகளிலுமுள்ள மக்கள் ஜனநாயக அணீயினருடனும், தேசிய ஜனநாயக அணியினருடனும் அரசியல் நட்புறவை வளர்த்துக் கொள்வோம்!


Wednesday 24 April 2019

மாதர் தம்மை இழிவுசெய்யும் கொடுமையைக் கொளுத்தவோம்


தொகுப்பாசிரியர் குறிப்பு

விகார-காம வெறித்தனங்களால், தெற்காசிய சமூகம் பொது அரங்கினில் வைத்து நிர்வாணமாக் கப்பட்டு அவமானத்தால் கூனிக்குறுகி நிற்கும் நிலை உலகமறிந்தது. இவ் வெறித்தனங்கள் அதிகரித்த வண்ணமேயுள்ளன. இதைத் தடுக்கும் வல்லமை இன்றைய அதிகார அங்கங்களில் யாருக்கும் இல்லை, எதற்கும் இல்லை என்பதைக் காணக்கூடியதாய் உள்ளது. தடுக்கும் வல்லமை உள்ளவர்களாக இருக்கவேண்டுமென எதிர்பார்க்கப்படுகிற மத நிறுவனங்களும் அரச நிறுவனங் களும் அரசும், அரசியல் கட்சிகளும், பண்பாட்டு அரங்கினில் செயற்படும் அரச-சார்பற்ற, அரச-சார் தொண்டு நிறுவனங்களும், கலை-இலக்கிய படைப்பாளர்களும் படைப்பு நிறுவனங்களும், கல்வி நிறுவனங்களும் விகாரக் காமமெனும் கொடிய புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருப்பது சாமாநியனுக் -குக்கூடப் புரிகிறது.

இதுதான் யாதார்த்த நிலையானால், என்னதான் தீர்வு? சமூகம் கெட்டுச் சீரழிவதை தடுக்கவே முடியாதா? போன்ற கேள்விகள் அனைவரின் மனதிலும் உதயமாகி வருகின்றது. மாதர் தம்மை இழிவுசெய்யும் கொடுமையைக் கொளுத்தவோம் எனும் இத்தொகுப்பு இக் கேள்விகள் அனைத்துக்கும் பதில் கூறுவதற்கான முயற்சியல்ல. மாறாக இக்கேள்விகளை ஆழமாகவும், அறிவுபூர்வமாகவும் ஆக்கிக் கொள்வதற்கு துணைபுரியும் முயற்சியேயாகும். இந்நூலின் மூலம் விகாரக் காமத்தின் காரண காரியத் தொடர்புகள்பற்றி நடைபெறும் வாத-விவாதங்களில் வாசகர்களையும் ஈடுபடுத்து -வதும், விவாதிப்பவர்கள் இடையே தொடர்பை ஏற்படுத்துவதே நூலின் உடனடிக் குறிக்கோளாகும். இல் குறிக்கோளுக்குத் துணைபுரியக் கூடிய பல சிறு சிறு கட்டுரைகள் தொடர்ந்து எனது வலைத்தளங்களில் ஏற்றம் பெறும்.

தெற்காசிய சமூகம் பல் மதங்களையும், பல் சாதிகளையும் பல் தேசியங்களையும், பல் தேசிய இனங்களையும், பல் இனக் குழுமங்களையும், பல் மொழிகளையும் கொண்டதோர் சமூகக் கட்டுமானமாகும். இவை அனைத்துக்கும் மேலாக, பல வர்க்கங்களையும் பல்வேறு வகையிலான வர்க்க உறவுகளையும் கொண்டதோர் சமூகமாகும். இவ்வளவு வேறுபாடுகளின் மத்தியிலும் தெற்காசிய சமூகம் வளர்திசை (Possitive) மாற்றத்துக்கு உள்ளாகி வருவதை மறுக்க முடியாது. இம்மாற்றம் படிப்படியானதாகவும், ஏற்ற இறக்கத்தைக் கொண்டதாகவும், முன்னேறுதல் பின் வாங்குதல் ஆகிய இரட்டைத் தன்மை கொண்டதாகவும் வளர்ந்து வருகிறது. ஆனால் வளர்ச்சியே ஒட்டுமொத்த ஒட்டமாகவும் பொதுவிதியாகவும் உள்ளது.
இன்றைய  தெற்காசிய வளர்திசைப் போராட்டங்களுக்கான கருத்தியல்களாவன:
1) வர்க்கப் போராட்ட இயல்
2) பெண்ணியம்
3) மதசார்பின்மை இயல்
4) சாதிய விடுதலைவியல்
5) நாட்டுப் பற்றியல்
6) தேசிய இயல்
இதில் வர்க்கப்போபராட்ட இயலென்பது; அனைத்துவகைத் தொழிலாளர்கள், விவசாயிகள், சுய தொழில்களில் ஈடுபட்டிருக்கும் சிறு உற்பத்தியாளர்கள், (உடல் உழைப்பாளர், மூளை உழைப் -பாளர்), ஆகியோர், தமது பொருளாதார வளர்ச்சிக்காகவும் தொழில் சார்ந்த அரசியல் உரிமைகளுக் -காகவும் நடத்திவரும் போராட்டங்களுக்கான கருத்தியலாகும். இவ் இயல்தான் தெற்காசியாவின் பிற ஐவகைப் போராட்ட இயல்களுக்குமான மைய இயலாகும். இது தனக்குள் பல் தன்மை மிக்கதாக இருந்தாலும், இதுதான் மைய இயலாகும்.
இதைத்தான்விடியல்’, ஒரியல் மைய ஐந்தியல் கோட்பாடு எனும் கருத்தியலாக முன்வைக் கின்றது. இவற்றுள் வர்க்கப் போராட்ட இயல் (மைய இயல்), பெண்ணியம் (2வது இயல்), மதசார்பின்மை இயல் (3வது இயல்), சாதிய விடுதலை இயல் (4வது இயல்) ஆகிய நான்கும் நூறு பூக்கள் பூத்துக் குலுங்கும் வாசனை மிகு அழகிய பூந்தோட்டமாகும். ஆனால் நாட்டுப் பற்றியல் (5வது இயல்), தேசியவியல் (6வது இயல்) இவ்விரு இயல்களிலும் பூத்துக் குலுங்கும் பூக்களில் பெரும்பான்மையாவை துர்நாற்றம்மிகு விஷப்பூக்களேயாகும். இருக்கும் தோட்டத்தில் மைய இயல் ஆதிக்கத்திற்கு வரும்வரை இக்கொடிய விஷப்பூக்களை அகற்றமுயலவேண்டும்.  இத் தொடர்முயற்ச்சி, இலகுவான விடயமல்ல. அது மிகக் கடுமையான முயற்சி, ஆனால் கைவிடப்படவோ, பின்தள்ளி வைக்கபடவோ முடியாத கடமையாகும். ஆனால் ஏனைய மூன்று இயல்களையும் (பெண்ணியம், மதசார்ப்பின்மை இயல், சாதிய விடுதலை இயல்) மைய இயலைநோக்கி வளர்த்தெடுப்பதன் மூலம் மையஇயலின் சமூகவேர்களைப் பலப்படுத்திக் கொள்வது அவ்வளவு கடினமான முயற்சியல்ல. இது தெற்காசிய அரசியல் மண்ணில் இருந்து தேசியவியலினதும், நாட்டுப்பற்றியலினதும் நச்சுத்தன்மையை குறைக்கவும் உதவும்.
இதை மந்தில்கொண்டே பெண்ணியம் தொடர்பான கருத்தியல் கட்டுமான உருவாக்க வேலை களில் ஈடுபடவிடியல்முடிவெடுத்துள்ளது. இது  தொடர்பான முதலாவது நூலே இதுவாகும்.
தமிழ் இலக்கியத்தில் பெண்ணியம்எனும் இரண்டாவது தொகுப்பு நூல் 85 பக்கங்களுக்கு அதிகப்படாத இரு பாகங்களாக விரைவில் வெளிவரும். வேலைகள் முடிந்துவிட்டன. பணத்திற் காக சுணங்குகிறது. “போற்றுவோம்! போற்றுவோம்! காதலைப் போற்றுவோம்!!”, தலித்தியமும் பெண்ணியமும் இஸ்லாத்தில் பெண்ணியம்”, “பௌத்தப் பெண்ணியம்” “இந்தியக் கிறிஸ்தவப் பெண்ணியம்” “சைவப் பெண்ணியம்ஆகியவை விடியலின் அடுத்தடுத்த தொகுப்புகளாக வெளிக்கொணரப்படும். பலனுள்ள படைப்புகளயும், விமர்சனங்களையும் ஒத்துழைப் புகளையும், நன்கொடைகளையும் வேண்டி நிற்கிறோம்.
விடியல்நிதிவளமற்றதோர் அமைப்பானதால் இந்நூல் தவிர்ந்த பிற அனைத்தும் PDF Format இல் மட்டுமே பதிவேற்றம் செய்யப்படும்.
நன்றி.
இந்நூலை வெளிக்கொணரவும், தமிழ்நாட்டின் பெண்ணிய ஆர்வலர் அனைவரும் பங்கேற்கக் கூடியதான வெளியீட்டு விழாவை நடத்தவும் முன்வந்த S.L.R.Publication ற்கும் விடியலின் நன்றிகள்.
எனது வலை முகவரிகள்:
மின் அஞ்சல்: Vidiyalillam@yahoo.co.in, Vidiyal.gowri@gmail.com

முகநூல்: Arinesaratnam Goerikanthan
யக்ஞம் முகநூல் பக்கம்:
டுவிட்டர்: gowrikanthan@arigowri
Linkden: Kanthan Gowrikanthan
வலைப்பூ: http://vidiyalgowri.blogspot.in


In Defense of Communism: KKE statement on the developments in Afghanistan

In Defense of Communism: KKE statement on the developments in Afghanistan : Concerning the developments in Afghanistan and the resurgence o...