Tuesday 9 June 2020

மார்க்ஸியர்களின் பேதங்கள்


 மார்க்சிய அணி பன்றிக்குட்டிகளாகப் பெருகிவருவது உண்மைதான், ஆனால் அது தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்தியா முழுமையும் இதே நிலைதான். ஆராய வேண்டிய பிரச்சனை பன்றிக்குட்டிகளை ஒன்றுபடுத்துவது பற்றியதல்ல, மாறாக இப்பரவல் நிலை நிலைத்து நிற்பற்கும் தொடர்வதற்குமான காரணங்கள் என்ன என்பதை ஆராய்வதேயாகும்.
          எனது கருத்து இந்தியத் தேசியம், தேசம் ஆகியனபற்றியும். இந்தியாவில் காணப்படும் பல்வகை இனக்குழுமங்கள், சாதியக் குழுமங்கள் ஆகியன பற்றியும் ஒரு அல்லது ஓரிரு பொதுவான கருத்து இன்னமும் உருவாகவில்லை என்பதேயாகும். பன்றிக்குட்டிகள் போல் சில நூறு கருத்துக்கள் உள்ளன. பூர்ஷ்வாக்களும், அதிகாரத்துவ வர்க்கத்தினரும்  bureaucrats, பிரபுத்துவ வர்க்கத்தினரும், ஆழும் வர்க்க புத்தி ஜீவிகளும் இது விடயத்தில் ஒத்த கருத்துக்கு வரமாட்டார்கள், ஒத்த கருத்து உருவாவதை அனுமதிக்கவும் மாட்டாரகள்.
         மார்க்சிய சிந்தனையாளர்கள்தான் தேசம், தேசியம், தேசிய இனவியம், சாதியம், ஆணியம் ஆகிய விடயத்தில் ஒரு ஒத்த கருத்துக்கு வரவேண்டும். அது வரையும் மார்க்ஸிய பன்றிக்குட்டிகள் பெருகிக் கொண்டேயிருக்கும், இது தவிக்கமுடியாததாகும்.  

No comments:

Post a Comment

In Defense of Communism: KKE statement on the developments in Afghanistan

In Defense of Communism: KKE statement on the developments in Afghanistan : Concerning the developments in Afghanistan and the resurgence o...