Tuesday 29 January 2019

புலிகளின் தலைவர் பிரபாகரன் பிரிவினைவாதியா?


புலிகளின் தலைவர் பிரபாகரன் பிரிவினைவாதியா?

        விடுதலைப் புலிகள் இயக்கமும், அதன் தலைவர் பிரபாகரனும் தமிழீழத்திற்கான தமது போராட்டங்களின் போது பல்வேறு தவறுகள் இளைத்துள்ளார்கள் என்பது மறைக்கவோ, மறுக்கவோமுடியாத உண்மை. இத் தவறுகளுக்கு காரணமான அரசியல் பார்வைக்கு எதிராகப் போராடவேண்டியது அனைத்துவகை ஜனநாயக சக்திகளினதும் கடமையாகும். இப்போராட்டம் புலிகளின் தலையில் மண்ணை அள்ளிக் கொட்டுவதற்காக அல்ல. புலிகளின் மீழெழுச்சியை சாத்தியப்படுத்துவதற்காக. ஆகவே, இத்தவறுகளுக்கு எதிரான அரசியல் விமர்சனங்களையும் கருத்துப் போராட்டங் களையும் “பிரிவினைக்கு” எதிரான தீவிர, குள்ளநரித்தனமான பிரச்சாரமாக முன்னெடுத் துச் செல்வது தவறானது. இது தமிழீழ அரசியலுக்கு இழைக்கும் மிகபெரும் தீங்காகும். தமிழ் மிதவாதிகளும் (Moderatists not liberalists), தமிழ்தேசிய எட்டப்பரிஸ்டுகளும், மஹாவம்சப் பேரகங்கார வாதிகளும் இவ்வித நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவது யாவரும் அறிந்ததே. இவ்வித பிரச்சாரங்களின் விசமத்தனதை வெளிக்கொணர்வது மட்டுமே இக்கட்டுரையின் குறிக்கோளாகும்.
       பல்-தேசஅரசில் ஜனநாயக பூர்வமாக இணைந்துகொள்ளும் உரிமை மறுக்கப்படும் ஒரு தேசிய இனம், சுதந்திரத்  தனித்-தேசஅரசு கேட்பதெல்லாம் என்றும் எப்போதும், எங்கும், எவராலும் பிரிவினைவாதமெனக் கருதப்படுவதில்லை.
       சுயநிர்ணய உரிமை இரு வகைப்படும்.

அகவய சுயநிரணய உரிமை:

        ஒன்றுக்கு மேற்பட்ட, பல்வேறு மட்டத்திலான, இனக் குழுமங்கள் வாழும் ஒரு நாட்டில், அனைத்து இனக்குழுமங்களும் சம உரிமையுடன் வாழக்கூடியதொரு அரசியல் கட்டுமானம் நிலவுமானால்; அதாவது மத்தியில் கூட்டரசும் மாநிலத்தில் சுயாட்சியரசுமாக வாழ்வதற்கான உரிமையைக் கொண்டதொரு அரசியல் கட்டுமானம்.  இவ்வித கட்டுமானத்தைக் கொண்டுள்ள அவ் அரசு, தேசிய ஜனநாயகப் பல்-தேசஅரசு என அழைக்கப்படும். சமஸ்டி ஆட்சிமுறை இவ் அகவய சுயநிர்ணய உரிமையின் ஒரு வடிவமாகும். இக் கூட்டரசின் அமைப்பு வடிவமும், கூட்டரசுக்கும் மாநில அரசுகளுக்கும் இடையேயான அதிகாரப் பகிர்வு முறைமையும், இக் கூட்டரசில் அங்கம் வகிக்கும் எதன் மீதும் திணிக்கப்படுவதாக இருக்கக்கூடாது; அனைத்துக் குழுமங்களினதும் கூட்டு முடிவாகவும், சுய விருப்ப முடிவாகவும் இருக்கவேண்டும். இதுதான் அகவய சுயநிர்ணய உரிமையாகும். இவ் உரிமையின் அடிப்படையில் அமைக்கப்பட்ட அரசுதான் தேசிய ஜனநாயகப் பல்-தேசஅரசு எனப்படும். இவ்விதமானதோர் அரசில்தான் பாராளுமன்ற ஜனநாயகம் உயிர்த் துடிப்புடனும், ஜனநாயகத்தின் நிஜ அங்கமாகவும், அதிகாரப்பகிர்வின் செயலரங்கமாகவும் செயற்படும். இவ்வித அரசுக்கான பொதுப்பெயர் Confederate state.
"உலக மக்கள்தொகையில் 40% சமஸ்டி அமைப்பின் கீழேயே வாழ்கிறார்கள். இவ்வித சம்ஸ்டி மாநிலங்கள், சுயாட்சி பொருந் தியவையாக இருக்கலாம்; ஒரு பெரிய நிலப்பரப்பாகவோ அல்லது நாடாகவோ இருக்கலாம்; இவ்வித சமஸ்டிஅமைப்புகள் பல்வேறு வகைகளில் இருக்கின்றன. புவியியல் ரீதியாகவோ அல்லது சிக்கல்பிக்கலாக ஏனைய விடயங்களிலோ பிரிக்க முடியாதபடி ஒரு நாடு இருக்கும் என்றால் அங்கு பொருளாதார அடிப்படை யிலோ இன அடிப்படையிலோ, மொழி அடிப்படையிலோ அல்லது வேறு ஏதாவது அடிப்படையிலோ பாகுபாடு இருக்குமா- னால் அதற்கான தீர்வாக சுயாட்சி முறையை அறிமுகப்படுத் தலாம்"
       இதனால், சமூகப்புரட்சியை விரும்புபவர்கள், இன, மத, மொழி, மாறாமரபியல் வெறித் தனங்களையும்(fanatism)1, அவ்வெறித்தனங் களின் அடிப்படையில் அமைந்த தேசியவாதங்களையும் வெறுப்பவ -ர்கள், சமதர்மப் புரட்சியாளார்கள், யுத்தங்களை முடிந்தவரை தவிர்க்க விரும்புபவர்கள், உளைக்கும் மக்கள் அனைவரும் ஒன்றுபடவேண்டு- மென விரும்புவர்கள் அனவரும் எவ்வளவுக்கு முடியுமோ அவ்வள- வுக்கு அகவய சுய நிர்ணய உரிமைக்காகவே போராடவேண்டும். அதாவது, தேசிய ஜனநாயகப் பல்-தேச அரசின் உருவாக்கத்துக்காகவே போராடவேண்டும். இதுதான் அவர்களின் பொதுப்பார்வையாக இருக்க வேண்டும். ஆனால், அது அவர்களின் விருப்பத்தை மட்டும் சார்ந்த தல்ல. இன, மத, மொழி, மாறாமரபியல் பேரகங்காரவாதிகளின் செயற் பாட்டையும் சார்ந்ததாகும். ஆகவே, இப் புரட்சிகரமான பொதுப் பார்வை, இறுகிப் போன பொதுபுத்தியாக மாறிவிடக்கூடாது.
      இலங்கை, இந்திய முதல் மற்றும் இரண்டாம் தலைமுறை இடதுசாரிகள்2 இன்றுவரை இதே தவறைத்தான் செய்துவருகிறார்கள். இலஙகை அரசை ஒரு பல் தேச அரசாக உருவாக்கும் முயற்சியில் இவ் இடதுசாரி இயக்கங்கள் எந்த முன்னேற்றத்தையும் இன்றுவரை ஏற்படுத்தவில்லையென்பதை இங்கு குறிப்பிடவேண்டியது அவசியமாகி -ன்றது.     .

புறவய சுயநிரணய உரிமை:

           ஒன்றுக்கு மேற்பட்ட இனக் குழுமங்கள் வாழும் ஒரு நாட்டில், அனைத்து இனக்குழுமங்களும் சம உரிமையுடன் வாழக்கூடியதொரு தேசிய ஜனநாயகப் பல்-தேசஅரசை எவ்வளியிலும் உருவாக்க முடியாது போகும் பட்சத்தில்,  குறிப்பிட்டதொரு, அல்லது பல இன-குழுமங்கள் ஒன்று சேர்ந்து சுதந்திரப் பல்-தேச அரசாக அல்லது சுதந்திரத் தனி-தேச அரசாக (Independent Mono-Nation State), பிரிந்து செல்வதற்கான உரிமையே புறவய சுயநிர்ணய உரிமை யெனப்படும்.
    காலனியல் அரசுகளின் காலனியல் அடக்குமுறை, காலனியல்&நவகாலனியல் அரசுகளின் நவ-காலனியல் அடக்குமுறை,தேசிய முதலாளித்துவ அரசுகளின் மறுகாலனியல் அடக்குமுறை, ஆகிய மூன்று அடக்குமுறைகளுக்கும் தொடர்ந்து உள்ளாகி வரும் ஒரு இனக் குழுமம், இம் மூவகை அடக்குமுறைகளின் போதும், தான் வாழும் நாட்டின் ஆட்சியில் இருக்கும், பெயரளவிற்கான பல்-தேச அரசின் கீழ், அகவய சுயநிர்ணய உரிமையுடன் வாழ எடுத்துக்கொண்ட முயற்சிகள் அனைத்தும் தோல்வி -காணும் பட்சத்தில், சர்வதேச ஒழுங்குமுறை எதுவும் அகவய சுயநிர்ணய உரிமையை ஏற்படுத்தித்தர முன்வராத அல்லது முன்வர முடியாதநிலை தொடரும் பட்சத்தில், அவ் தேசிய இனக்குழுமம் பொதுவழமையாக ஏற்றுக்கொள்ளப்பட்ட புறவயசுயநிர்ணய உரிமையைப் பின்பற்றி சுதந்திரத் தனித்-தேச அரசைக் (Independent Mono-Nation State) கோருவது பிரிவினைவாதமல்ல. அது ஒவ்வொரு தேசிய இனத்தினதும் பிறப்புரிமை. அதுவும், மிகக் கொடூரமானதும், அதிக அரசியல் ஏமாற்றுத்தன்மை மிக்கதுமான மறுகாலனியல் அடக்குமுறையும் தேசிய இனஒடுக்குமுறையும் இணைந்து செயற்படும் காலத்தில் ஒவ்வொரு தேசிய இனங்களும் தமது இப் பிறப்புரிமைக்காக போராடுவது அத்தியாவசிய வரலாற்றுக் கடமையாகிறது.
       இந்திய அரசியல் சாசனத்தின்படி இந்திய அரசு ஓர் பல்-தேச அரசேயாகும். ஆனால், நடைமுறையில் அவ்விதமல்ல. இவ்வித பல்-தேச அரசுதான் “பெயரளவிலான பல்-தேச அரசாகக் கருதப்படுகிறது. பல்-தேச அரசுகள் இருவகைப்படும் ஒன்று, தேசிய அதிகாரத் துவ (bureaucratic)பல்-தேச அரசு, மற்றையது தேசிய ஜனநாயகப் பல் தேச அரசு. தேசிய அதிகாரத்துவ பல்-தேச அரசே பெயரளவிலான பல்-தேச அரசென” அழைக்கப்படுகிறது. இதுதான் இந்தியரசு.
      அதே வேளை இலங்கை, பாக்கிஸ்தான், ஆப்கானிஸ்தான், மியான்மர் ஆகிய நான்கு தெற்காசிய நாடுகளும் மறுகாலனியல் அடக்குமுறையின் ஆரம்பித்திலேயே பல்-தேச அரசுகள் எனும் கருத்துக் கட்டுமானத்தையே தமது மண்ணில் இருந்து தூக்கியெறிந்து விட்டன. இதன் விளைவுதான், இலங்கை, ஸ்ரீ லங்காவாகவும் தமிழீழமாகவும் ஆகியது; பர்மா, மியாமராகவும் றோஹின்யாஆகவும் உருவாகின. சிந்துக்களின் பாக்கிஸ்தான், இன்னமும் சிந்துஸ்தானெனப் பெயர்மாற் றம் பெறவில்லை, ஆனால் பாக்கிஸ்தானாகவும், வங்காள தேசமாக வும், பலுஸ்திஸ்தானாகவும் மாறியுள்ளது. இவற்றுள், தமிழீழம், றோஹின்யா, பலுஸ்திஸ்தான் ஆகியவை தனித்-தேச அரசு எனும் நிலையை அடையாவிட்டாலும், தனித் தேசியங்கள் எனும் அங்கிகாரத்தை உலகளாவியஅளவில் பெற்றுவிட்டன. இந்தியாவின் தேசிய அதிகாரத்துவ பல்-தேச அரசின் கீழுள்ள காஷ்மீரையும், பஞ்சாபையும் இங்கு சேர்த்துக்கொள்ளவேண்டும்.
        பிரிவினைவாதிகள் எனும்  சொல்லாடல் (பிரிவினைவாதம். பிற்போக்குத்தனம். பிற்போக்குவாதிகள், சமூகசமநிலை(அமைதி) குழப்பவாதிகள், தேசத்துரோகிகள் பயங்கரவாதிகள் போன்ற பல வசைமொழிகளை உள்ளடக்கியதாகும்) ஒரு நாட்டின் நீதியான சமாதான வாழ்விற்கு அவசிமான ஐக்கியத்தை அதாவது வளர்திசை சமூக சமநிலையைக்(positive social equilibrium) குலைப்பதே பிரிவினைவாதமாகும். இவ்வித நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களே பிரிவினைவாதிகளாகும். இப்பிரிவினை வாதம் இனப் பிரிவினை, மதப்பிரிவினை, மொழிப்பிரிவினை, சாதிப்பிரிவினை எனப் பல்வேறு வகைப்படும். சமூகக் குழுமங்களின் மீதான அடக்குமுறைகள் மூலம் பேணப்படும் சமூக சமநிலை ஒடுக்கு முறையாளர்களின் சமநிலை -யாகும் இது அநீதியான சமூகச் சமநிலையாகும்(negative social equilibrium). இச் சமநிலை குலைக்கப்பட்டே ஆகவேண்டும்.
         இதற்க்கு மாற்றாக வளர்திசை சமூக சமநிலையை உருவாக்க முன்வருபவர்கள் பிரவினைவாதிகளல்ல, மாறாக அநீதியான மூக சமநிலையை உருவாக்குபவர்களும், பேணிப் பாதுகாப்பவர்களுந்தான் பிரிவினைவாதிகளாகும். அதிகாரத்தில் இருக்கும் உண்மைப் பிரிவினைவாதிகள் தமது பிரிவினைத் திணிப்பை எதிர்ப்பவர்களை பிரிவினைவாதிகள், பயங்கரவாதிகள் எனப் பிரச்சாரம் செய்கின்றனர்.
       சுதந்திரஇலங்கையின் முதற்த்தலைமுறை பிரிவினைவாதியும், தலைமைப் பிரிவினைவாதியும் ஸ்ரீ மாவோ பண்டாரநாயக்கா வேயாகும்3. பௌத்த மதத்தை அரச மதமாக கொண்ட அரசியல் சாசனத்தை நடைமுறைக்கு கொணர்ந்தவர் இவரேயாகும்.
      அடுத்த பிரதான தலைவர், அமெரிக்கக் கைக்கருவியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவே4 ஆகும். பாராளுமன்றத்தின் அதிகாரத்தைப் பின்தள்ளி, இராணுவ அதிகாரத்தை தலைமையாகக் கொண்ட அரசியல் சாசனத்தை நடைமுறைக்குக் கொணர்ந்தவர் இவர்தான்.
     அனைத்துலக நிலைப்பாட்டில், அமெரிக்க எதிர்ப்பாளராக இருப்பதனால், ஜே.ஆரிடம் இருந்து வேறுபட்டாலும், இவ் வேறுபாடு வளர்திசைத் தன்மைபெற்றதாக இருந்தாலும், அடுத்த தலைமுறைப் பிரிவினைவாதி மஹிந்த ராஜபக்‌ஷவாகும்5. இவர் ஜே.ஆறிலும் விட வீறுகொண்டவர். ஜே.ஆற் இப்பிரிவினைக்கு அவசியமான முறையில் ஆட்சிக் கட்டுமானத்தை இராணுவமயமாக்கினார். மஹிந்த இவ் இராணுவக் கட்டுமானத்தை பயன் படுத்துவதில் வலுவுள்ளவராக மேலும் மேலும் வளர்ந்து வருகிறார்.
     பிரிவினைவாதத் தன்மைபெற்ற அநீதியான சமூகச் சமநிலையின் உருவாக்கிகளாகவும், அதனை மேலும் மேலும் வளர்த்து வருபவர்களு மாகிய இப் பிரிவினை ஊக்கிவிப்பாளர்கள், விடுதலைப் புலிகள் இயக்கத்தை பிரிவினைவாத இயக்கமெனச் சித்தரிப்பது உண்மைக்குப் புறம்பானதாகும். இது தமது சொந்த ரூபத்தை மறைப்பதற்கான முயற்சிகளாகும்.
      ருஷ்யசார்பு, சீனசார்பு என அழைக்கப்பட்ட முதலிரு தலைமுறைக் கம்யூனிஸ்டுகளும், ட்றொக்ஸியவாதிகளும் கூட இதே சித்தரிப்பை இன்றுவரை முன்வைத்து வருவதுதான் கவலைக்கிட மானது. அது மட்டுமல்ல பிரிவினை ஊக்கிவிப்பாளர்களின் ஒரு பகுதியினரை இன்றும் ஆதரித்துவருவது கண்டனத்துக்குரியதாகும்.
        நிலவும் அநீதியான சமூக சமநிலையையும், அதைப் பாதுகாத்துவரும் பிரிவினைவாதிகளின் ஆட்சியதிகாரத்தையும் தூக்கி- யெறிந்து, அதற்குப் பதிலாக, புதியதோர் சமூக சமநிலையையும், அதைப் பாதுகாப்பதற்கான அரசு அதிகாரத்தையும் உருவாக்குவதற்- கான போராட்டங்கள், அவசியம். இம் முயற்சியில் ஈடுபட்ட விடுதலைப் புலிகள் இயக்கம் பாராட்டப் படவேண்டியதே.
       ஆனால், இவ்வித அநீதியான சமூக சமநிலைகள் ஒழுங்குபடுத்தப்பட்ட முறையிலேயே குலைக்கப்பட வேண்டும். அதாவது இவ்விதக் குலைப்புகள் நீதியான சமூக சமநிலை என்ற குறிக்கோளை அடையக்கூடிய முறையில் ஒழுங்குபடுத்தப் பட்டதாக அமையவேண்டும். இப் போராட்டங்கள், ஒழுங்கு படுத்தப்பட்ட அரசியல் வியூகங்களுக்கு அமையாது நடைப்பெறுமானால், அவை விரும்பியோ விரும்பாமலோ பாதகமான எதிர்விளைவுகளையே ஏற்படுத்தும். நினைத்தது ஒன்றாகவும் நடந்தது வேறொன்றாகவும் ஆகிவிடும். நிலவும் வளர்தடைச் சமூக சமநிலையை மேலும் வளர்ப்பதாக அமைந்துவிடும். அதுவும் நீடித்ததோர் யுத்ததிற்காக ஆயுதம் ஏந்தத் துணிந்த விடுதலைப் புலிகள், எந்த வல்லரசுகளின் தாக்குதலையும் எதிர்கொள்ள தயாராக இருந்த விடுதலைப் புலிகள், இது விடயத்தில் மிகவும் விழிப்பாக இருந்திருக்க வேண்டும் இனியும் இருக்கவேண்டும். இல்லையேல், புலிகளின் நடவடிக்கைகள் இன்றைய இலங்கையின் பிரிவினைவாத ஊக்குவிப்புத் தலைவரான, மஹிந்த -வின் கரங்களைப் பலப்படுத்துவதாக அமைந்துவிடும்.
        அதாவது, பிரபாகரனும் விடுதலைப் புலிகள் இயக்கமும் தமீழீழத்துக்குக் கிடைத்த பெரும் வரங்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இவ்வரங்கள் சாபமாக மாறிவிடக் கூடாது. மாறிவிட்டதா அல்லது மாறுவதற்கான குறியீடுகள் எதுவும் தென்படுகிறாதா என நீங்கள் கேட்கக் கூடும். ஆமாம்! மாறிவிட்டது, என்பதே அதற்கான பதிலாகும். இம்மாற்றங்கள் திருத்தப்படமுடியாதது என நிச்சயப்படுத்த வில்லை. இஇதனால்தான் இக்கட்டுரையின் எவ்விடத்திலும் சரி, எனது பிற எப்படைப் புகளிலும் சரி  பிரபாகரனை தமிழீழத் தலைவர் என்று குறிப்பிடவில்லை. அதேவேளை அவரையும், விடுதலைப்புலிகள் இயக்கத்தையும் தமிழீழப் போராட்டக் களத்தில் இருந்து தனிமைப் படுத்தவும் முற்படவில்லை.

           வரம் எவ்விதம் சாபமாகியது என்பதை, புலிகளின் தேசியமும் மஹிந்தவின் தேசியமும் ஒரு ஒப்பீடுஎனும் தலைப்பிலான இரண்டாவது அத்தியாயத்தில் தொடர்கிறேன். நூல் மூன்று அத்தியாயமாகப் பிரிக்கப்பட்டுள்ளது. மூன்றாவது அத்தியாயம் அடிக்குறிப்புகளுடன் வெளியாகும்.


எழுதப்பட்டது 2015இல். திருத்தப்பட்டது 29?01/2019- நீங்கள் படித்தது அல்லது வாசித்தது, 2015 எழுதப்பட்ட நூலின் நுளைவாயிலாகும்.







    
          

No comments:

Post a Comment

In Defense of Communism: KKE statement on the developments in Afghanistan

In Defense of Communism: KKE statement on the developments in Afghanistan : Concerning the developments in Afghanistan and the resurgence o...