Tuesday 13 June 2017

மூவகைப் பேய்களையும் கட்டிப்போடுங்கள்

கீழ்க்கண்ட கட்டுரைக்கான பின்னூட்டல்
அந்த பேயை கட்டிப் போடுங்கள் - Daily Ceylon

"இனவாதம், மதவாதம், பாஸிஸவாதம் ஆகியவற்றைப் பரப்பிக்கொண்டு திரியும் பேய் சுதந்திரமாக அன்றி, சிறைச்சாலையொன்றிலேயே இருக்கவேண்டும். " மிகச் சரியான கூற்று.
ஆனால், இப்பேய்களைக் குறிக்க இவ்வளவு அடைமொழிகள் அவசியமில்லைஇனவாதமும் மதவாதமும் ஒன்றே. ஆகவே இனவாதிகள் என்ற ஒன்றே போதுமானது. மத அடிப்படை இனவாதிகள், குருதியின அடிப்படை இனவாதிகள்மொழி அடிப்படை இனவாதிகள், மரபின அடிப்படை இனவாதிகள் எனக் குறிப்பிடலாம். ஆக்கிரமிக்கும் இனங்களிடம் இருந்து வந்தாலும், ஆக்கிரமிக்கப்படும் இனங்களில் இருந்து வந்தாலும், அனைத்து இனவாதங்களும் ஒன்றே. அனைத்து வகை இனவாதிகளும் பேய்-பிசாசுக் கூட்டங்கள்தான்.
இஸ்லாமியர்களுக்கு எதிராகச் செயற்பட்ட தமிழீழ இனவாதத்தையும், தமிழர்களுக்கு எதிராகச் செயற்பட்ட இஸ்லாமிய இனவாதத்தையும் மறந்துவடமுடியுமா? அல்லது மன்னித்துவிடமுடியுமா?                                                                                                        இரண்டாவது, இப் பேய்-பிசாசுகளை வகைப்படுத்த பாசிஸமெனும் பதத்தை பிரயோக்கிப்பது அவசியமற்றதாகும். இனவாதம் என்பதே ஒரு குறிப்பிட்ட இனக்குழுமம் பிற இனக்குழுமங்களின் மீது இராணுவ எதேச்சதிகாரம் செலுத்துவதை நோக்கமாகக் கொண்டதாகும். ஒரு இனக்குளுமத்தின் தானெனும் அஹங்காரத்தின் வெளிபாடாகும். இந்த இனக்குழும அகங்காரம் தானெனும் தனிநபர் அஹங்காரமாக முதிர்ச்சி பெறுகிறது
வர்க்க ஒடுக்குமுறையையைவிட இது கொடூரமானது. வர்க்க ஒடுக்குமுறை உற்பத்திப் பெருக்கத்தை நோக்கமாகக் கொண்டது. ஆனால், இனவாத அடக்கு முறைகள் உற்பத்திசக்திகளின் அழிவுக்கு இட்டுச்செல்வது. முதலாளித்துவ ஒடுக்குமுறைகளைவிட ஆபத்தானது. அழிவு மனப்பான்மை கொண்டது. பாசிஸத்திலும் விட பிற்போக்குத்தனமானது. ஆகவே இனவாதிகள் என்ற பதத்தை சரியாக புரிந்துகொள்வோ மானல் அப்பதமே போதுமானது. அதைப் பாசிஸத்துடன் குளப்பத் தேவையில்லை.
ஆகவே ஒரு புறத்தில்   அனைத்துவகை இனவாதங்களிற்கும் எதிரான ஒரு கருத்தியல் போராட்டத்தையும், மறுபுறத்தில் அனைத்துவகை இனவாத அடக்குமுறைகளுக்கும் எதிரான ஒரு முழுமையான அரசியல் போராட்டத்தையும் முன்னெடுத்துச் செல்வதே இனவாதங்களிற்கு எதிரான போராளிகளின் கடமையாகும்.
துட்டகமுனுவால் தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளும் சிங்கள-பௌத்த பேரகங்காரவாதம்.
சைவ சமயத்தை பிராமணியப்படுத்துவதில் முழுமையான வெற்றி பெற்ற, தமிழ் மக்களிடையே நிலமானிய சமூக அமைப்பின் வளர்ச்சிக்கு மகுடம் சூட்டிய, பிற இனக்குழுமங்களை அடக்கியாழ்வதில் பேருவகை கொண்ட சோழமரபு பேரகங்காரவாதம்;
சுனி இஸ்லாமியக் கோட்பாடுகளை முன்வைக்கும் இஸ்லாமிய அடிப்படைவாத பேரகங்காரவாதம்;
ஆகிய மூன்றுவகைப் பேரகங்காரவாதங்களும் இலங்கையில் முகாமிட்டுள்ளன என்பதை நினைவில் கொள்வோம்.

No comments:

Post a Comment

In Defense of Communism: KKE statement on the developments in Afghanistan

In Defense of Communism: KKE statement on the developments in Afghanistan : Concerning the developments in Afghanistan and the resurgence o...