Wednesday 14 June 2017

மாட்டுக்கறி வியாபாரத்துக்கான மாபெரும் சந்தை

‘வளர்ச்சியின்’ நாயகனான இந்தியப்பிரதமரின் மார்பில் ஏறவுள்ள மற்றோர் வீரப்பதக்கம்.
மாட்டு இறைச்சிக்குத் தடையெனப் பலராலும் கருதப்படும் நடவடிக்கைகளையே வீரப்பதக்கம் பெறுவதற்கான அவரின் நடவடிக்கையாகக் கருதுகிறேன். இந்தியளவிலும், உலகளவிலும் றெட் மீர்(Red meat)-மாடு,எருமை, ஒட்டகம் ஆகியனவற்றின் இறைச்சி- சந்தையிலும், இந்தியளவில் தோல் சந்தையிலும் எகிறிப்பாய்ச்சல் வளர்ச்சியை(boom) ஏற்படுத்தவுள்ள இந்தியப் பிரதமரை வாழ்த்துவதற்க்கு மலர்ச்செண்டுகளுடன் வரிசையில் காத்திருக்கின்றனர் இந்தியத் தொழில் அதிபர்கள். ஆகவே றெட்மீர் எனும் தொழில் துறையை சற்றுப்பார்ப்போம்.
இத் தொழில் நான்கு பிரிவுகளை உள்ளடக்கியதாய் உள்ளது. அவையாவன:
• இப்பிராணிகளை வளர்க்கும் தொழில்
• அப்பிராணிகளின் இறைச்சியையும் தோலையும் சந்தைக்கு ஏற்றமுறையில் பதப்படுத்தும் தொழில்.
• இறைச்சியையும் தோலையும் சந்தைப்படுத்தும் தொழில்.
• இவ் இறைச்சிக் கறி தீண்டப்படாத ஒரு உணவாகக் கருதப்படுவதால் சமைக்கப்பட்ட உணவுகள் தனிக்கடைகளில் தனியாக ஒதுக்கப்பட்ட இடங்களிலேயே விற்கப்படுகிறது. இதை பிரியாணி கடைத்தொழில் என பெயரிட்டுக் கொள்வோம். 
பிரித்தெடுக்கப்படும் தோல், இந்நான்கு பிரிவினரிடம் இருந்து அன்னியமாகி தோல்பொருள் முதலாளிகளின் கைகளைச் சேர்கிறது.
அ) வளர்ப்புத் தொழில்: முன் சொன்ன நான்கு தொழில் பிரிவிலும் வளர்ப்புத் தொழிலே பிரதானமானது. குடும்பத் தொழிலே இங்கு மேலோங்கியுள்ளது. விவசாயிகளும், புற நகரப்பகுதிகளில் வாழும் ஏழைகளில் ஒருசாராரும் இத்தொழிலில் ஈடுபடுபட்டுவருகிறார்கள். விவசாயகளிலும் அதிகமானோர் வறிய விவசாயிகளும், நடுத்தர விவசாயிகளுமேயாகும். இத்தொழிலில் புரளும் மூலதனம், மானியமாகவோ, கடனாகவோ, “விலையற்றதாகவோ”, சீதணமாகவோ பெறப்பட்டனவேயாகும். இதில் புரளும் மூலதனம் மீள் முதலீடாகத் திரளும் வாய்ப்புகள் மிகமிகக் குறைவு. வாய்க்கும் வயிற்றிற்குமான தொழிலாகவேயுள்ளது. இருந்தும் கிராமப்புறங்களில் வறுமைக் கோட்டுக்குக்கீழ் உள்ளவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்காமல் பார்த்துக் கொள்வதில் கால்நடை வளர்ப்பு பிரதான பங்காற்றிவருகிறது. இத்தொழில் சாதி, மத, இன, மொழி, வர்க்க பேதமின்றி நடந்துவருவது குறிப்பிடக்கூடிய விடயமாகும். 
ஆ)பதப்படுத்தலும் சந்தைப்படுத்தலும்:
இவை இரண்டும் தனித்தனித் தொழில்களேயாகும், ஆனாலும் இவை உடல் உழைப்பில் ஈடுபடும் நடுத்தரவர்க்கத்தின் கீழணிகளாலேயே செய்யப் படுகின்றன. அதுவும் ஒரே ஆளே இருதொழில்களையும் செய்துவருகின்றனர். கடை உரிமையாளனும் அவனே, தொழிலாளியும் அவனே. தொழில் பிவினை உருவாகு மளவிற்கு இத்தொழில் வளரவில்லை. வளர்வதற்கான வாய்ப்புகளும் இல்லை. சிறு உற்பத்தியாகவே காலா கலாமகத் தொடர்ந்துவருகிறது. பெரும் போக்கான உற்பத்திக்கு இங்குவாய்ப்பில்லை. இதனால் இத் தொழில் குடும்பத் தொழிலாகவே உள்ளது. கூலிக்கு அமர்த்தும் அளவிற்கு இங்கு லாபமில்லை. இத் தொழில் சாதிமத பேதத்திற்கு உட்பட்டது. இதனால் தான் இத்தொழில் நிலையங்கள் ஒதுக்குப்புறம்பான இடங்களில்தான் அமைந்திருக்கின்றன. 
ஆனால், இத் தொழில் ஏற்றுமதிக்கென அமையும்போது நிலமை வேறு. அனைத்துவேலைகளும் கூலிகளை க்கொண்டே செய்யப்படுகிறது. பெரும் போக்கான இவ் உற்பத்தியின் உபரி அன்னியச் செலவாணியாகக் குவிகிறது. இவ் உற்பத்தி உடமையாளர்கள் சாதிமத பேதத்திற்கு அப்பாற் பட்டவர்கள். ஜெயின் சமூகத்தினர் சிலரும் உடமையாளர்களாக இருப்பதாகத் தகவல்.
தொகுப்பு: இத் தொழில்துறை மிகவும் பின்தங்கியதாகவும், மிக மந்தமான ஒரு வளர்ச்சியைக் கொண்டதாகவும் உள்ளது. இம் மந்த நிலைக்குக் காரணம் இயற்கை, கால்நடைவளர்ப்புக்குப் பாதகமாக உள்ளதென்பதல்ல. இயற்கை வளங்கள் மிக நன்றாகவே உள்ளன. 

சந்தைப்படுத்தலுக்கான வழிவகை வளாமாக இல்லாததுவும் சந்தைவாய்ப்பின்மையுமே பிரதான காரணங்களாகும். ஏற்றுமதியில் இந்தியா இரண்டாவது இடத்தில் இருந்தாலும் மொத்த இறைச்சி உற்பத்தியிலும் உணரக்கூடிய தாக்கத்தை ஏற்படுத்துவதில் பல தடைகள் உள்ளன. சிதறுண்டிருக்கும் இறைச்சி உற்பத்தியை வளர்க்கவேண்டுமானால் மூன்று வழிகள் உண்டு. அரசு நேரடையாகத்தலையிடவேண்டும், அல்லது கூட்டுறவு அமைப்புகளிடம் ஒப்படைக்கவேண்டும், அல்லது பெரும் தனியார முதலீட்டுக்கு அனுமதி வழங்கவேண்டும். அப்போதுதான் இறைச்சி உற்பத்தியில் பாரிய எகிறி ப்பாய்தல் ஒன்று (boom) ஏற்படும். உபரியும், மூலதன மறு உற்பத்தியும் தனியார் கைகளுக்குப் போனாலும் ஏற்றுமதியைக் குறிக்கோளாகக் கொண்ட இறைச்சித் தொழிலில் பூதாகரமான வளர்ச்சியைக் காணக்கூடிதாய் உள்ளது.
வளர்ச்சியின் நாயகனான மோடி பென்னாம்பெரும் சந்தையுள்ள இவ் வளமான, மலிவான சரக்கு(இறைச்சி) வீணே தேங்கியிருப்பதைக் கண்டு மனம்நோகாமல் இருக்க வாய்ப்பில்லை. “கோரிக்கையற்றுக் கிடக்கு தண்ணே வேரில் பழுத்தபலா” என அவரது கவியுள்ளம் வெந்து புண்ணாகியிருக்கும். ஒரு தொழில் எவ்வளவுக்கு முடியுமோ அவ்வளவுக்கு உபரியைக் குவிக்கக் கூடியதாக இருக்கவேண்டும் என்பதையும், அவ் உபரி அரசின் வல்லரசுத் தனத்தை வளர்க்கவோ அல்லது பெரும் முதலாழிகளின் சொத்துக் குவிப்பை அதிகரிக்க கூடியதாகவோ இருக்கவேண்டுமென்பதை கீதைவாக்காகக் கொண்டுள்ள இந்தியப் பிரதமர் ரெட் மீட் உற்பத்தி-விநியோகத்தையும் அந்நிலைக்கு கொணர கங்கணம் கட்டிவிட்டார். இறைச்சி உற்பத்திக்கு நல்ல காலம் பிறக்கட்டும்.

கால்நடைவளர்ப்பு முன்கூறிய மூன்று வழிகள் அத்தனையையும் பின்பற்ற- லாம். விவசாயிகளை அரசு தனது நேரடிக் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவந்து தானே கால்நடைகளைக் கொள்வனவு செய்வது; கால்நடை வளர்ப்பாளர்- களின் கூட்டுறவுச் சங்கங்கள் அமைத்து, அவை தமது கால்நடைகளை அரசுக்- கோ அல்லது அங்கிகரிக்கப்பட்ட தனியார் பதப்படுத்தும் நிறுவனங்களுக்கோ விற்பது; இறைச்சிக்காகவென் பெரிய, சிறிய கால்நடைப்பண்ணைகள் அமைத்து, அவற்றை சொந்த கால்நடை வளர்ப்பில் ஈடுபடுத்துவதுடன் விவசாயத்துக்கு பயன்படுத்த முடியா நிலையை அடைந்துவிட்ட கால்நடை- களை விவசாயிகளிடம் இருந்து கொள்வனவு செய்து அவற்றைவளர்ப்- பதற்கான அனுமதியையும் வளங்குதல். இப்பண்ணைகள் பதப்படுத்தும் நிலையங்களாகவும் இருத்தல் அல்லது அவை தமது கால்நடைகளை அரசுக்கோ அல்லது அங்கிகரிக்கப்பட்ட தனியார் பதப்படுத்தும் நிறுவனங்- களுக்கோ விற்பது. 
இவ்வரசின் கீழ், பதப்படுத்தல் சந்தைப்படுத்தல் ஆகிய துறைகளில் கூட்டுறவு ஏற்படவாய்ப்பில்லை. இவ் அரசின் இந்து சனாதனக் கண்ணோட்டமும், இஸ்லாமிய எதிர்ப்புக் கண்ணோட்டமும் அதை அனுமதியாது. ஆகவே, இவ்விரு துறைகளையும் அரசே பொறுப்பெடுக்கலாம் அல்லது முதலாழிக- ளிடம் பொறுப்பு ஒப்படைக்கப்படலாம். ஆனால், ஏகபோகத் தனியார்மயத்தை ஆதரிக்கும் இவ்வரசு, உற்பத்தியில் தான் எந்தப் பொறுப்பையும் ஏற்கவும் மாட்டாது, கூட்டுறவு முறையையும் உருவாக்கமாட்டாது. உற்பத்தி, பதப்படுத்தல், சந்தைப்படுத்தல் ஆகிய மூன்றையும் பெரும் தனியார் முதலாழிகளிடமே ஒப்புவிக்கும். இதனால், ‘தேசமும்’ ‘தேசப்பொருளாதாரமும்’ ஆஹா! ஓஹோ!! என்று வளருமென்பதில் எந்தச் சந்தேகமுமில்லை. 

ஆனால், தனியார் துறையூடாக ஏற்படுத்தப்படும் இவ்வித மாற்றத்தால், விவசாயிகள் நிலை என்னவாகும்? அவர்கள் தமது இறைச்சிக்கான கால்நடை- களை இழப்பார்கள் அல்லது அவற்றின் மீதான அவர்களின் உரிமை சேதப்- படுத்தப்படும். இன்னவிலைக்கு இன்னார்க்குத்தான் விற்கலாமென கட்டாயப்படுத்தப்படக்கூடும். 
பதப்படுத்துவோரினதும், விற்பனைசெய்வோரினதும் நிலைமை என்னவாகும்? மதரீதியாகவும், சாதிரீதியாகவும் ஒடுக்கப்பட்ட அவர்கள் மந்தமான தொழில் முயற்சிகளில் இருந்து விடுவிக்கப்பட்டு வேலைதேடி வீதிகளில் அலையும் சுதந்திர புருஷர்களாக்கப்படுவார்கள். 

பிரதமரால் இரட்சிக்கப்பட்ட இறைச்சியின்(றெட் மீர்ரின்) நிலை என்னவாகும்? உற்பத்தி பெருகும், மதிப்பூட்டப்பட்ட இறைச்சி உள்நாட்டுச் சந்தைக்கும், உலகச் சந்தைக்குமான சரக்காக மாறும். இதுவரை இவ் இறைச்சிகளை தீட்டென ஒதுக்கிவைத்தவர்களும் தின்னக்கூடிய அளவுக்கு இதன் சமூக மதிப்பு உயர்த்- தப்படும். விளம்பரதாரர்கள் அதை வெற்றிகரமாக நடத்திக் காட்டுவார்கள். மாட்டுக் கொழுப்பில் வறுத்தெடுத்த(toasted) நொறுக்குத்தீனிகளை பார்பனப்- பிள்ளைகளும் ஆசையுடன் உண்ண வில்லையா? இவ் இறைச்சியில் இருக்கும் வளமிக்க பல உணவுவகைகள் அகற்றப்படும்(கொழுப்பு, B complex). நாகரீக மதிப்பேற்றப்பட்ட(fashionable value) இறைச்சிச் சக்கையை உயர்தர சைவ உணவாளர்களும் வாங்கி ப்புசிப்பார்கள், தன் ஊன் வழர்ப்பதற்காக பிற உயிர்க- ளைக் கொல்லக்கூடாது என்ற கொள்கை யாளர்களும் புசிப்பார்கள். ஆனால், நாகரீக மதிப்பேற்றப்பட்ட இவ் இறைச்சிகளின் உயர்விலையின் காரணத்தால், இதுவரை இவ் இறைச்சியைத் தின்றுவந்த ‘இழிசனர்கள்’, ‘சுத்த சைவர்களாக’ மாறக் கட்டாயப்படுத்தப்படுவார்கள். புரதக் குறைபாட்டால் உடல்நிலை குன்றிப்போவார்கள்.
எவ்விதமோ, ஒரு மந்த நிலைத் தொழில், துரித வளர்ச்சி நிலைத் தொழிலா- கப் போகிறது; ஒரு உபரிஉருவாக்க ஆற்றலற்ற தொழில் உபரியை அள்ளிக் குவிக்கும் தொழிலாகப் போகிறது. தனது மூலப்பொருளான தோலைப் பெறுவதில் பல இன்னல்களை எதிர்கொண்டி ருக்கும் தோல் பொருள் தொழிலகள் துரித வளர்ச்சிபெறும். இவ்வளவும் போதாதா பிரதமருக்கு பதக்கமளிக்க? பெரு முதலாழிகளுக்கு இதைவிட சிறந்த வாய்ப்பை வேறுயார் ஏற்படுத்திக் கொடுப்பர்?

அரினேசரட்னம் கௌரிகாந்தன்/30/05/17




No comments:

Post a Comment

In Defense of Communism: KKE statement on the developments in Afghanistan

In Defense of Communism: KKE statement on the developments in Afghanistan : Concerning the developments in Afghanistan and the resurgence o...